- Advertisement -

கஷ்டப்பட்டு படிக்கும் அனைவரும் நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். அதிலும் குறிப்பாக அவர்கள் ஆசைப்பட்ட கனவு வேலை கிடைக்க வேண்டும் என்றுதான் முதலில் முயற்சி செய்வார்கள். அப்படிப்பட்ட கனவு வேலையை பெறுவதற்கும் நல்ல சம்பளத்துடன் நல்ல வேலையை பெறுவதற்கும் விநாயகப் பெருமானை வழிபடும் முறையைப் பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

நாம் வணங்கக்கூடிய தெய்வங்களுள் மிகவும் எளிமையான தெய்வமாக திகழக்கூடியவர்தான் விநாயகப் பெருமான். மேலும் அவரை முழு மனதுடன் முழு நம்பிக்கையுடன் வணங்கினால் நாம் கேட்கும் வரம் அனைத்தையும் வாரி வழங்கக்கூடிய தெய்வமாக திகழ்வார். விநாயகர் பெருமானுக்குரிய தினமாக போற்றப்படுவது தான் சங்கடஹர சதுர்த்தி. சங்கடஹர சதுர்த்தி அன்று விரதம் இருந்து விநாயகப் பெருமானை வழிபடுபவர்களுக்கு அனைத்து விதமான சங்கடங்களையும் நீக்கி வெற்றிகளை குவிப்பார் விநாயகர் பெருமான் என்பது நம் அனைவரும் அறிந்த உண்மையே.

- Advertisement -

அந்த சங்கடஹர சதுர்த்தி நாளன்று நல்ல வேலை கிடைப்பதற்கு மனதிற்குப் பிடித்த வேலை கிடைப்பதற்கு செய்யக்கூடிய ஒரு எளிய வழிபாட்டை பற்றி தான் இப்பொழுது பார்க்கப் போகிறோம். சங்கடஹர சதுர்த்தி நாள் அன்று அருகில் இருக்கும் ஏதாவது ஒரு கோவிலுக்கு போக வேண்டும். அங்கு இருக்கக்கூடிய விநாயகப் பெருமானுக்கு முன்பாக இந்த வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். இந்த வழிபாட்டை மேற்கொள்வதற்கு இந்த நேரத்தை தான் உபயோகப்படுத்த வேண்டும் என்று எதுவும் கிடையாது. காலையிலிருந்து இரவு வரை உங்களின் வசதிக்கேற்ப ஏதாவது ஒரு நேரத்தை தேர்வு செய்து இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம்.

ஒரு முழு வாழை இலையை எடுத்து விநாயகரின் முன்பாக விரித்து வைத்து அதில் கோதுமை மாவை பரப்ப வேண்டும். கோதுமை மாவு என்றதும் கடையிலிருந்து மாவாக வாங்கி செய்வதை விட கோதுமையை வாங்கி மாவாக அரைத்து செய்தால் அதன் பலன் முழுமையாக கிடைக்கும். யாருக்கு வேலை கிடைக்க வேண்டுமோ அவர்கள் கையால் இரண்டு கைப்பிடி அளவு கோதுமை மாவை வாழை இலையில் வைத்து பரப்ப வேண்டும். பிறகு அந்த கோதுமை மாவிற்கு மேலாக இரண்டு அகல் விளக்கை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சிவப்பு நிறத்தில் இருக்கக்கூடிய பஞ்சதிரியை போட்டு தீபம் ஏற்ற வேண்டும்.

- Advertisement -

பிறகு தங்களின் வேண்டுதலை விநாயகப் பெருமானிடம் வைக்க வேண்டும். இயன்றவர்கள் மாலை நேரத்தில் நடக்கக்கூடிய சங்கடஹர சதுர்த்தி பூஜைக்கு தேவையான அபிஷேகப் பொருட்களை வாங்கித் தரலாம். இவ்வாறு தொடர்ந்து மூன்று சங்கடஹர சதுர்த்தி தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் அவர்கள் நினைத்த வேலை கிடைக்க விநாயகப் பெருமான் அருள் புரிவார் என்பது பலரும் கண்ட அனுபவ பூர்வமான உண்மையாகும்.

இதையும் படிக்கலாமே: எதிரிகளால் ஏற்படும் பிரச்சனைகள் நீங்க

இந்த எளிமையான வழிபாட்டை முழு நம்பிக்கையுடனும் முழு மனதுடனும் செய்வதன் மூலம் விநாயகப் பெருமானின் அருள் பரிபூரணமாக கிடைத்து அவர்கள் நினைத்த வேலை கிடைக்கும்.

- Advertisement -