- Advertisement -

தாராளமான பண வரவுக்கு தாமரை விதை பரிகாரம்.

சம்பளம் வாங்கும் போது சந்தோஷமாகத்தான் இருக்கும். கை நிறைய பணம் வரும். ஆனால் சம்பளம் வாங்கிய அடுத்த ஒரு மணி நேரத்திற்குள், அந்த பணம் பஞ்சு பஞ்சாக பறந்திருக்கும். மீண்டும் அடுத்த மாதம் முழுவதும் செலவு செய்ய கையில் பணம் இல்லாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருப்போம். மாதம் முழுவதும் கையில் தாராளமாக பணம் புரள மகாலட்சுமியின் அருளைப் பெற செய்ய வேண்டிய ஆன்மீகம் சார்ந்த பரிகாரத்தை தான் இன்று நாம் பார்க்க போகின்றோம்.

பணம் தரும் தாமரை விதை பரிகாரம்

மகாலட்சுமிக்கு சொந்தமானது தாமரைப்பூ. இந்த தாமரைப் பூவிலிருந்து எடுக்கப்பட்ட விதை கட்டாயம் இந்த பரிகாரத்திற்கு தேவை. நாட்டு மருந்து கடைகளில் விற்கும். வாங்கி வீட்டில் வைத்துக் கொள்ளுங்கள். மூன்று தாமரை மணி விதைகளை உங்கள் உள்ளங்கைகளில் வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

பண வரவு அதிகரிக்க வேண்டும் தாராளமாக கையில் பணம் புரள வேண்டும் என்ற பிரார்த்தனையை மகாலட்சுமியிடும் வையுங்கள். கையில் இருக்கும் இந்த தாமரை மணி விதைகளை ஒரு கிண்ணத்தில் போட்டு மகாலட்சுமியின் பாதத்தில் பூஜை அறையில் வைத்து விடுங்கள்.

மூன்று நாள் இதேபோல பிரார்த்தனை வைக்க வேண்டும். கையில் அந்த தாமரை மணி விதைகளை வைத்துக் கொள்ள வேண்டும். மூன்றாவது நாள் இந்த பிரார்த்தனையை முடித்துவிட்டு இந்த விதையை கொண்டு போய் ஒரு குளத்தில் போட்டு விடுங்கள். தாமரைக் குளம் இருக்கும் அல்லவா அந்த இடத்தில் இந்த விதையை தூக்கி போடவும்.

- Advertisement -

ஒரு சில நாட்களில் அந்த விதை வேரூன்றி தண்டாக வளர்ந்து, தாமரை பூவாக வளரத் தொடங்கும். அந்த தாமரைப்பூ எந்த அளவுக்கு வளர தொடங்குகிறதோ அந்த அளவுக்கு உங்களுடைய செல்வ செழிப்பும் வளரும் என்பது நம்பிக்கையாக சொல்லப்பட்டுள்ளது.

மாதத்தில் ஒரு முறை மூன்று தாமரை மணி விதைகளை கையில் வைத்துக் கொண்டு இந்த முறையில் பிரார்த்தனை வைத்து, அதை தண்ணீரில் போடும்போது அந்த தாமரை பூ வளர்வது போல நிச்சயம் உங்கள் செல்வ செழிப்பும் வளரும். அதில் எந்த மாற்று கருத்தும் கிடையாது. நகர்ப்புறங்களில் இருப்பவர்களுக்கு இப்படி தாமரை குலத்தை கண்டுபிடிப்பது கடினமாக இருக்கும்.

- Advertisement -

கொஞ்சம் கிராமப்புறங்களில் உள்ளவர்கள் இந்த பரிகாரத்தை செய்யலாம். நகர்ப்புறங்களில் உள்ளவர்கள் அகலமான ஒரு தொட்டியை வைத்து அதில் கொஞ்சம் சேறு தண்ணீர் விட்டு, நீங்களே வீட்டில் தாமரை பூவை வளர்க்கலாம். அந்த தாமரை பூவை எடுத்து உங்க வீட்டு மகாலட்சுமிக்கு சூட்டலாம். தவறே கிடையாது வீட்டில் மகாலட்சுமி அம்சம் நிறைவாக இருக்கும்.

இதையும் படிக்கலாமே: கடன் தீர முருகன் மந்திரம்

ஆன்மீகத்தில் நம்பிக்கையின் அடிப்படையில் இந்த பரிகாரம் சொல்லப்பட்டுள்ளதால், உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் மட்டும் இதை பின்பற்றி பலன் பெறலாம். நிச்சயமாக உங்கள் செல்வ வளத்தில் நல்ல முன்னேற்றம் தெரிய இந்த எளிமையான பரிகாரம் கைகொடுக்கும்.

- Advertisement -