கடன் தீர முருகன் மந்திரம்

kadan theera manthiram
- Advertisement -

இன்றைய காலக்கட்டத்தில் கடன் இல்லாத ஒரு மனிதரைக் கூட பார்க்க முடியாது. இந்தகடன் என்பதை வெறும் பணமாக வாங்கியதை மட்டும் எடுத்துக் கொள்ள முடியாது. ஏதேனும் ஒரு பொருளாக வாங்கியது அல்லது வீடு வாங்கி இருக்கலாம், வேறு ஏதேனும் பொருட்கள், வாகனங்கள் என இதையெல்லாம் கூட கடன் என்னும் பட்டியலில் தான் சேர்க்க வேண்டும்.

பொருளாக வாங்கிய கடன்கள் ஏதோ ஒரு வகையில் கண்ணுக்குத் தெரியாமல் அடைந்து விடும். பணமாக வாங்கிய கடன் தான் நமக்கு பெருகி பெரிய தொல்லையாக மாறி விடும். ஏனெனில் பொருளாக வாங்கும் கடன் குறிப்பிட்ட அளவிற்கு மேல் வாங்க முடியாது. ஆனால் இந்த பணமாக வாங்கிய கடனுக்கு வட்டிக்கு வட்டி என பெருகிக் கொண்டே போகும்.

- Advertisement -

இப்படியான கடனில் சிக்கி பலரும் தத்தளித்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் கரை சேருவதற்கான ஒரு எளிய மந்திர வழிபாட்டு முறையை தான் மந்திரம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

கடனிலிருந்து மீள மந்திரம்

கடன் தீர என்று நாம் சொன்னவுடனே நம் ஞாபகத்திற்கு வரக் கூடிய கடவுள் கந்த கடவுள் தான். ஏனெனில் மனிதன் தீராத பிரச்சனையான இந்த கடனிலிருந்து உடனே மீட்கக் கூடிய தெய்வம் அவர் தான். இந்த கடனிலிருந்து வெளிவர உதவ கூடிய வரும் அங்கார காரகன் தான். அந்த அங்காரகனின் அதி தேவதையாக இருக்கக் கூடியவர் இந்த கந்த கடவுள்.

- Advertisement -

ஆகையால் தான் கடன் தீர செய்யப்படும் அனைத்து பரிகாரங்களும் செவ்வாய்க்கிழமை அன்றே செய்கிறோம். செவ்வாய்க்கிழமையில் செவ்வாய் ஹோரையில் கடன் கொடுத்தால் அது விரைவில் அடையும் என்றும், அந்த நாளில் கடன் வாங்கினால் அது தொடரும்.

இப்படியாக செவ்வாய்க்கிழமையில் செய்ய வேண்டிய, செய்ய கூடாத பல விஷயங்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள். இப்போதும் செவ்வாய்க்கிழமையில் முருகப்பெருமானை நினைத்து இந்த மந்திரத்தை சொல்லித் தான் நாம் கடனிலிருந்து மீள போகிறோம்.

- Advertisement -

அதற்கு செவ்வாய் கிழமை காலை ஆறிலிருந்து ஏழு மணிக்குள் இந்த மந்திர வழிபாட்டை செய்ய வேண்டும். இந்த வழிபாட்டிற்கு முதலில் ஒரு சிறிய அளவிலான வேல் வாங்கிக் கொள்ளுங்கள். இதை வீட்டிற்கு கொண்டு வந்தவுடன் முதலில் சுத்தம் செய்து மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்துக் கொள்ளுங்கள்.

ஒரு டம்ளரில் பச்சரிசி நிரப்பி அதில் இந்த வேலை சொருகி பூஜை அறையில் வைத்து விடுங்கள். முருகருக்கு உகந்த செவ்வரளி பூக்களை வேலுக்கு மாலையாக கொடுத்து போடுங்கள். செவ்வாய் கிழமை செவ்வாய் ஹோரையில் இந்த வேலுக்குமுன்பாக ஒரு தீபம் ஏற்றி வைத்து விட்டு நீங்கள் தீபத்தை பார்த்தவாறு அமர்ந்து கொள்ளுங்கள்.

ஓம் ஷம் சரவண பவ

என்ற இந்த மந்திரத்தை 108 முறை சொல்லுங்கள். அதன் பிறகு அன்றைய தினத்தில் அருகில் இருக்கும் முருகர் ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்வதும் முக்கியம். இந்த மந்திர வழிபாட்டை செவ்வாய்க்கிழமை தோறும் செய்து வருபவர்களுக்கு நிச்சயம் கடன் தீருவதற்கான வாய்ப்புகள் தேடி வரும் என்று சொல்லப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: தொழில் தடை நீங்கி லாபம் பெருக வழிபாடு

நம்பிக்கையுடன் செய்யும் எந்த வழிப்பாடும் பூஜையும் நிச்சயம் நல்ல பலனை கொடுக்கும். அந்த வகையில் இந்த ஒரு மந்திர வழிபாட்டையும் நம்பிக்கையுடன் செய்து உங்களுடைய தீரா கடனிலிருந்து விரைவில் மீண்டும் வெளிவர வழி தேடிக் கொள்ளுங்கள்.

- Advertisement -