- Advertisement -

நம்முடைய வாழ்நாளில் ஒவ்வொரு நாளும் இன்பமாய் போவதும், துன்பமாய் போவதையும் முடிவு செய்யக் கூடியது பணம் தான். பணம் எந்த அளவிற்கு நம்மிடம் அதிகமாக இருக்கிறதோ அந்த அளவிற்கு மகிழ்ச்சியும் நிம்மதியும் அதிகமாக இருக்கும். பணம் மட்டுமே இருந்தால் மகிழ்ச்சியும் நிம்மதியாக இருக்குமா? என்றால் பணம் இல்லை என்றால் நிச்சயம் இது ரெண்டும் இல்லை என்பதை ஒத்துக் கொள்ளத் தான் வேண்டும்.

அப்படியான பணத்தை நாம் அதிக அளவில் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ பல தாந்த்ரீக வழிகள் உள்ளது. அவற்றில் ஒன்றை தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

- Advertisement -

பண வரவிற்கு சர்க்கரை பரிகாரம்

இந்த பரிகாரத்தை பௌர்ணமி தினத்தில் செய்வது சிறப்பு வாய்ந்தது. அதிலும் இன்றைய தினம் சித்ரா பௌர்ணமி பௌர்ணமி தினங்களில் அதிசக்தி வாய்ந்த தினமான இந்த நாளில் இந்த பரிகாரத்தை செய்யும் போது நம்முடைய பணவரவு பல மடங்கு அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது. இப்போது இந்த பரிகாரத்தை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

இந்த பரிகாரத்தை இன்று மாலை 6 மணிக்கு மேல் இரவு 12 மணிக்குள்ளாக செய்ய வேண்டும். அதற்கு முதலில் ஒரு சிறிய கிண்ணத்தை எடுத்து அதில் முழுவதுமாக சர்க்கரையை நிரப்பி விடுங்கள். இந்த சர்க்கரையில் ஏழு நாணயத்தை வைக்க வேண்டும். அது ஒரு ரூபாய் நாணயம் இரண்டு ரூபாய் ஐந்து ரூபாய் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம் அது உங்கள் விருப்பம்.

- Advertisement -

அடுத்து ஏழு கிராம்பு, ஏழு ஏலக்காய் இந்த சர்க்கரையின் மேல் வைக்க வேண்டும். இந்த நாணயங்கள் மட்டும் வெளியே தெரியாதவாறு ஒளித்து வைத்து விடுங்கள். ஏலக்காயும் கிராம்பும் வெளியில் தெரிந்தால் ஒன்றும் பிரச்சனை இல்லை. இந்த கிராம்பானது உடையாத நல்ல நிலையில் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். இந்த பரிகாரத்திற்கு வீட்டில் இருக்கக் கூடிய பொருட்களை பயன்படுத்தலாம் தவறில்லை.

இப்போது இந்த கிண்ணத்தை உங்கள் வீட்டில் எங்காவது ஓரிடத்தில் வைத்து விடுங்கள். அது பூஜை அறை வரவேற்பறை என எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம். இரவு முழுவதும் இது அப்படியே இருக்கட்டும். மறுநாள் காலையில் எழுந்தவுடன் குளித்து முடித்து விட்டு இந்த சர்க்கரையில் இருக்கும் நாணயத்தை மட்டும் வெளியே எடுத்து விடுங்கள்.

- Advertisement -

மீதம் இருக்கும் பொருட்களை கால்ப்படாத இடத்தில் போட்டு விடுங்கள் அல்லது உங்கள் வீட்டின் அருகில் ஓடும் நீர் இருந்தால் அதில் போட்டு விடுங்கள். இந்த பீரோ மணிப்பர்ஸ் என எங்கு வேண்டுமானாலும் வைக்கலாம். தொழில் செய்பவராக இருந்தால் வியாபாரம் ஸ்தலத்தில் கூட இதை வைக்கலாம். இந்த ஒரு எளிய பரிகாரமானது பணத்தை பல மடங்கு நம்மிடம் ஈர்த்து தரக்கூடிய ஆற்றலை பெற்றுத் தரும்.

இதையும் படிக்கலாமே: பணம் தொடர்பான பிரச்சனை தீர விநாயகர் வழிபாடு

அதுமட்டுமின்றி சர்க்கரையில் வைத்த நாணயம் நம்மிடம் இருக்கும் பொழுது பணவரவு அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் பெருகும் என்று சொல்லப்படுகிறது. இந்த எளிய தாந்த்ரீக பரிகார முறையில் நம்பிக்கை இருப்பவர்களுக்கு நம்பிக்கையுடன் செய்து நல்ல பலனை பெறலாம்.

- Advertisement -