பணம் தொடர்பான பிரச்சனை தீர விநாயகர் வழிபாடு

vinayagar hibiscus leaf
- Advertisement -

நம்முடைய வழிபாட்டு நாட்களில் அமாவாசை, பௌர்ணமி போன்ற திதிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இதற்கு காரணம் அன்றைய நாளில் இறை சக்தி அதிகரித்து இருக்கும். அந்த நாளில் நாம் செய்யக் கூடிய பூஜைகளும், பரிகாரங்களும் நமக்கு அதிக பலனை தருவதாக இருக்கும். அந்த வகையில் இந்த சித்ரா பௌர்ணமி மேலும் விசேஷமானதாக கருதப்படுகிறது.

இந்த நாளில் நம்முடைய பணப்பிரச்சனை தீர எளிமையான ஒரு வழிபாட்டு முறையை செய்ய வேண்டும் என்று இதன் மூலம் அனைத்து பணத்தடைகளும் நீங்கி பணவரவு அதிகரிக்கும் என்றும் சொல்லப்படுகிறது. அது எப்படி என்று ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

பணத்தடை நீங்கி பணவரவு அதிகரிக்க விநாயகர் வழிபாடு

இன்று பௌர்ணமி திதியானது நாள் முழுவதும் இருப்பதால்இந்த வழிபாட்டை இன்றைய தினம் மாலை 6 மணிக்கு மேல் செய்யலாம். இந்த பூஜை செய்வதற்கு நமக்கு செம்பருத்தி இலைகள் மட்டும் தேவை இதற்கு முடிந்த வரையில் ஒற்றை செம்பருத்தி பூவின் இலை கிடைத்தால் எடுத்துக் கொள்ளுங்கள். அது கிடைக்காத பட்சத்தில் வேறு எந்த செம்பருத்திப் பூவின் இலையாக இருந்தாலும் பரவாயில்லை அதை எடுத்துக் கொள்ளலாம்.

இந்த வழிபாடு செய்வதற்கு 108 செம்பருத்தி இலைகளை எடுத்துக் கொள்ளுங்கள். இந்த செம்பருத்தி இலைகளை நன்றாக தண்ணீரில் அலசி சுத்தம் செய்து நிழலில் ஆற வைத்துக் கொள்ளுங்கள். இதற்கு இன்னொரு பொருளும் நாம் வாங்க வேண்டும். அது நாட்டு மருந்து கடையில் அஷ்டகந்த சூரணம் என்று கிடைக்கும் அதை வாங்கிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

நீங்கள் பூஜை செய்வதற்கு சிறிது நேரத்திற்கு முன்பாகவே இந்த அஷ்டகந்த சூரணத்தில் செம்பருத்தி இலையின் காம்பை வைத்து தொட்டு எடுத்து செம்பருத்தி இலையில் ஓம் என்ற நாமத்தை எழுதுங்கள். 108 இலையிலும் இப்படி எழுதிய பிறகு அதை அப்படியே வைத்து விடுங்கள் ஆறட்டும்.

மாலையில் பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்து விட்டு மஞ்சளால் விநாயகர் பிடிக்க வேண்டும். ஏதேனும் ஒரு எளிய நெய்வேத்தியத்தை செய்து வைத்து விடுங்கள். விநாயகருக்கு அருகம்புல்லை கட்டாயமாக வைத்து விடுங்கள். இப்பொழுது நீங்கள் எடுத்து வைத்த செம்பருத்தி இலை கையில் வைத்துக் கொண்டு விநாயகரின் 108 போற்றி உண்டு.

- Advertisement -

அதை சொல்லி ஒவ்வொரு செம்பருத்தி இலையாக விநாயகருக்கு அர்ச்சனை செய்யுங்கள். இந்தப் போற்றிகள் தெரியாத பட்சத்தில் ஓம் கம் கணபதியே நமக என்ற இந்த மந்திரத்தை மட்டும் சொல்லி இந்த 108 இலைகளிலும் ஒவ்வொன்றாக வைக்க வேண்டும். இப்படியாக 108 முறை மந்திரத்தை சொல்லி வழிபாடு செய்த பிறகு கற்பூர தீபாராதனை காட்டி பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள்.

நெய்வேத்தியத்தை வீட்டில் உள்ளவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். இன்று நாள் முழுவதும் இந்த செம்பருத்தி இலை விநாயகர் எல்லாம் அப்படியே இருக்கட்டும். மறுநாள் இந்த செம்பருத்தி இலைகளை கால்ப்படாத இடத்தில் போட்டு விடுங்கள். மஞ்சளை நாம் நெற்றியில் இட்டுக் கொள்ள பயன்படுத்திக் கொள்ளலாம் அல்லாத பட்சத்தில் தண்ணீரில் கரைத்து செடிகளில் ஊற்றி விடுங்கள்.

நமக்கு வரவேண்டிய பணமாக இருக்கலாம் வேலையில் கிடைக்க வேண்டிய ஊதிய உயர்வு வேலையில்லாதவர்களுக்கு வேலை வாய்ப்பு வியாபாரம் செய்பவர்களுக்கு தொழிலில் லாபம் இப்படி பணம் நம்மிடம் வருவதற்கான அனைத்து வழிகளும் இந்த வழிபாடு ஏற்படுத்திக் கொடுக்கும் என்று சொல்லப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: கொடுத்த பணத்தை திரும்ப பெற பைரவர் வழிபாடு

செவ்வாய்க்கிழமையோடு வந்திருக்கும் பௌர்ணமி நாளான இன்று இந்த பரிகாரம் செய்வதின் மூலம் நம்முடைய பணம் தொடர்பான அனைத்து பிரச்சனைகளையும் தீரும் என்று சொல்லப்படுகிறது. நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையுடன் இன்றைய நாளை தவிர விடாமல் இந்த வழிபாடு செய்து பலன் அடையலாம்.

- Advertisement -