- Advertisement -

பண வரவை அள்ளித்தரும் முருகன் வழிபாடு

கந்தா என்று அழைத்தாலே இந்தா என்று வாரி வழங்கக் கூடிய கருணை பெருங்கடல் தான் நம்முடைய கந்த பெருமான். அப்படியான கருணை மிக தெய்வத்தை மிக மிக எளிமையாக இந்த முறையில் வணங்கினாலே நம்முடைய வீட்டில் செல்வ செழிப்பான வாழ்க்கையை வாழ முடியும் என்று சொல்லப்படுகிறது. அது என்ன வழிபாடு எப்படி செய்ய வேண்டும் என்பதை ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் பார்க்கலாம்.

செல்வ செழிப்பான வாழ்க்கை வாழ முருகப்பெருமான் வழிபாடு

முருகப்பெருமான் வழிபாடு என்றாலே செவ்வாய்க்கிழமையில் தான் செய்வது வழக்கம். ஆகையால் இந்த வழிபாட்டையும் செவ்வாய்க்கிழமை அன்றே செய்யுங்கள். ஒரு வேளை செவ்வாய்க்கிழமை செய்ய முடியாது என்பவர்கள் வெள்ளிக்கிழமையிலும் வணங்கலாம். ஏனெனில் இந்த வழிபாட்டை நாம் முருகப்பெருமானுடன் சேர்த்து மகாலட்சுமி தாயாரையும் சேர்த்து தான் செய்ய போகிறோம்.

- Advertisement -

இதுவரையில் முருகப்பெருமானை வெற்றிலை வைத்து வழிபாடு செய்திருப்போம். ஆனால் இந்த வழிபாட்டில் நாம் வில்வ இலையை வைத்து வழிபாடு செய்ய வேண்டும். ஆம் சிவபெருமானுக்கு உகந்த வில்வ இலையை கொண்டு தான் முருகப்பெருமானை வழிபாடு செய்யப் போகிறோம். செவ்வாய்க்கிழமை நேரத்தில் உங்கள் வீட்டில் பூஜை அறையில் பூஜைக்கு ஏற்ற அனைத்து ஏற்பாடுகளையும் செய்து விடுங்கள்.

குறிப்பாக முருகர், மகாலட்சுமி தாயார் சிவபெருமான் திருவுருவப் படங்களுக்கு சிறப்பான அலங்காரங்களையும் அவர்களுக்கு உகந்த மலர்களையும் வைத்து எளிமையான நெய்வேத்தியத்தை வைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது ஒரே ஒரு வில்வ இலை எடுத்து அதை பன்னீரில் சுத்தமாக கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் உங்கள் வீட்டில் தங்கம் இருந்தால் ஒரே ஒரு குண்டுமணி தங்கமாவது அதில் வையுங்கள் இல்லாதவர்கள் நாணயத்தை வைக்கலாம் தவறில்லை.

- Advertisement -

இந்த வில்வ இலையை முருகப்பெருமான் படத்திற்கு அருகே வைத்து மகாலட்சுமி தாயாரையும் மனதார நினைத்துக் கொண்டு எங்கள் வீட்டில் செல்வ நிலை பல மடங்கு உயர வேண்டும் எங்கள் வாழ்க்கை நல்ல அந்தஸ்துடையதாக மாற வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ளுங்கள். அதன் பிறகு இந்த வாய்ப்புக்கான உங்களுடைய முயற்சியை மேற்கொள்ளுங்கள்.

இதுவரை உங்கள் முன்னேற்றத்திற்கு எத்தனை முயற்சி எடுத்தும் வெற்றி கிடைக்கவில்லை என்றாலும் இந்த முறையில் வழிபாடு செய்யும் போது நிச்சயம் வெற்றி உங்களைத் தேடி வரும் என்று சொல்லப்படுகிறது. அது மட்டும் இன்றி இந்த வழிபாடு முப்பெரும் தெய்வத்தின் அருளை உங்களுக்கு பெற்று தரும்.

- Advertisement -

முதலாவதாக செவ்வாய்க்கிழமையில் செய்வதால் முருகப்பெருமானின் அருளையும் வில்வ இலையை வைத்திருப்பாதால் சிவபெருமானின் அருளையும் அதில் வைத்திருக்கும் நாணயத்தால் மகாலட்சுமி தாயாரின் அருளும் பெற்றுத் தரும் ஒரு மனிதன் பேர் புகழ் செல்வத்துடன் வாழக் கூடிய அனைத்தையும் பெற்று தரக்கூடிய அற்புதமான வழிபாடு இது.

இதையும் படிக்கலாமே: கடன் கரைந்து போக பரிகாரம்

இது போல வாரந்தோறும் நீங்கள் வழிபாடு செய்து கொண்டே உங்களுடைய முயற்சியை தொடருங்கள். உங்கள் வாழ்க்கையும் பல மடங்கு முன்னேறிக் கொண்டே செல்லும் அதிசயம் நடக்கும். நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையுடன் இந்த வழிபாட்டை செய்யுங்கள்.

- Advertisement -