கடன் கரைந்து போக பரிகாரம்

pillaiyar1
- Advertisement -

தீராத கடன் பிரச்சனை தீருவதற்கு ஏதேனும் வழி கிடைக்காதா என்று எத்தனையோ பேர் இன்றளவும் பரிகாரங்களை தேடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். உங்களுடைய கடன் பிரச்சினைக்கு இந்த பரிகாரத்தின் மூலம் நிச்சயமாக ஒரு தீர்வு கிடைக்கும். மிக மிக எளிமையான பரிகாரம் இது. பிள்ளையாரை நினைத்து செய்யக்கூடிய பரிகாரம் இது.

கடன் தொல்லையால் சிக்கித் தவிப்பவர்கள் இந்த பரிகாரத்தை செய்தால் உங்களுடைய கடனெல்லாம் வெண்ணெய் உருவுவது போல உருகிப் போய்விடும் என்பதுதான் இந்த பரிகாரத்திற்கு பின்னால் இருக்கும் நம்பிக்கை. சரி அது என்ன ஆன்மீகம் சொல்லும் பரிகாரம். பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.

- Advertisement -

கடன் தீர்க்கும் பிள்ளையார் பரிகாரம்

திங்கட்கிழமை தோறும் காலையில் எழுந்து சுத்த பத்தமாக குளித்துவிட்டு, பூஜை அறையில் இருக்கும் விநாயகர் படத்துக்கு கட்டாயம் அருகம்புல் சூட்டங்கள். பிறகு இந்த பரிகாரத்திற்கு உங்களுக்கு தேவையான பொருள் வெண்ணெய். முந்தைய நாளே கடையிலிருந்து வெண்ணெய் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். அந்த வெண்ணெயை பிள்ளையார் போல பிடிக்க வேண்டும்.

மஞ்சளில் எப்படி பிள்ளையார் பிடிப்போம். அதேபோல வெண்ணெய் பிள்ளையார் பிடித்து ஒரு தட்டில் வைத்து, அந்த பிள்ளையாருக்கு குங்கும பொட்டு வைத்து, அந்த பிள்ளையாருக்கும் அருகம்புல்லை போட்டு, பூஜையறையில் வைத்து விடுங்கள். இந்த பிள்ளையாருக்கு முன்பு அமர்ந்து உங்கள் கடன் கரைய வேண்டும் என்று மனம் உருகி பிரார்த்தனை செய்ய செய்ய அந்த வெண்ணெயும் உருகத் தொடங்கும்.

- Advertisement -

இந்த பரிகாரத்தை செய்யத் தொடங்கிய ஒரு சில வாரங்களிலேயே ஏதாவது ஒரு அதிசயம் உங்கள் வாழ்க்கையில் நடக்கும். திருப்பிக் கொடுக்க முடியாத கடன் தொகையை எல்லாம் திருப்பிக் கொடுப்பீர்கள். கடன் பிரச்சனை ஒரு காலகட்டத்தில் காணாமலேயே போய்விடும். அப்படி ஒரு சக்தி வாய்ந்த பரிகாரம் தான் இது. வெண்ணெய் உருகியதும் செடி கொடிகளுக்கு கீழே கொட்டி விடுங்கள்.

நீங்கள் வெண்ணெயில் பிடித்து வைத்த பிள்ளையார் சிறிது நேரம் மட்டும்தான் அப்படியே இருப்பார். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அந்த வெண்ணெய் கரைய தொடங்கி விடும். இந்த வெண்ணெயை பிள்ளையாருக்கு முன்பாக 15 நிமிடம் மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: லாபம் தரும் லக்ஷ்மி நரசிம்மர் வழிபாடு

வெண்ணெய் முழுசாக பூஜை அறையில் உருகி முடித்த பின்பு அந்த வெண்ணெயை எடுத்து கால் படாத இடத்தில் செடி கொடிகளுக்கு கீழே போட்டு விட்டால் போதும். ஆன்மீகம் சார்ந்த இந்த எளிய வழிபாட்டில் நம்பிக்கை உள்ளவர்கள் செய்து பாருங்கள். 5 வாரம் திங்கட்கிழமை, 7 மாதம் திங்கட்கிழமை செய்யும்போதே உங்களுக்கு நல்லது நடந்துவிடும். உங்கள் கடன் பிரச்சனையும் இந்த வெண்ணெய் போல உருகி காணாமலேயே போய்விடும்.

- Advertisement -