- Advertisement -

மின்னல் வேகத்தில் பணம் தரும் பரிகாரம்

எல்லா மனிதர்களுக்குமே பணத்தை தங்கள் பக்கம் ஈர்த்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் அவ்வளவு எளிதில் இந்த பணத்தை நம்மால் சம்பாதித்து விட முடியாது. பணத்தை நம் பக்கம் ஈர்க்கவும் முடியாது. பணத்தை கஷ்டப்பட்டு சம்பாதித்தாலும், அந்த பணத்தை தக்க வைத்துக் கொள்வதற்கு ஒரு தனி திறமை வேண்டும்.

பணத்தை ஈர்த்து, அதை நாம் கைக்குக் கொண்டு வந்து, நம்மிடமே நிரந்தரமாக தங்க வைக்க ஒரு எளிமையான ஆன்மீகம் சொல்லும் பரிகாரத்தை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். ஒரு வேலைக்கு போறீங்க. அந்த வேலையில் மேலும் மேலும் முன்னேற வேண்டும். பெரிய பெரிய பதவிகள் உங்களுக்கு கிடைக்க வேண்டும்.

- Advertisement -

மேலும் மேலும் சம்பளம் உயர வேண்டும் என்று நினைத்து, இந்த திலகத்தை தினமும் நெற்றியில் வைக்கலாம். ஒரு தொழில் தொடங்குகிறீர்கள், அல்லது நஷ்டத்தில் போகக்கூடிய தொழிலை லாபகரமாக மாற்ற வேண்டும் என்று நினைக்கிறீர்கள், தினமும் அந்த தொழிலை நடத்த செல்லும்போதும், வியாபாரத்திற்காக செல்லும் போதும் இந்த திலகத்தை நெற்றியில் வைக்கலாம். பணத்தை ஈர்க்கும் சந்தன திலகத்தை எப்படி தயார் செய்வது எப்படி நெற்றியில் வைத்துக் கொள்வது.

பணத்தை ஈர்க்கும் பரிகாரம்

ஒரு சின்ன கிண்ணம் எடுத்துக்கோங்க. அதில் சுத்தமான சந்தன பொடி போட்டுக் கொள்ளுங்கள். சாதாரணமாக கிடைக்கும் பொடியாக வாங்க கூடாது. நாட்டு மருந்து கடைகளில் சுத்தமான சந்தன மரக்கட்டையில் எடுத்த பொடி கிடைக்கும். அதை பரிகாரத்திற்கு பயன்படுத்துங்கள் முழு பலன் அடையலாம்.

- Advertisement -

சின்ன கிண்ணத்தில் சந்தன பொடியை போட்டு இதில் கொஞ்சம் ஏலக்காய் பொடியை சேர்த்து, கொஞ்சமாக பன்னீர் விட்டு, கலந்து பூஜை அறையில் வைத்துக் கொள்ள வேண்டும். செல்வ செழிப்பில் உயர்ந்து நிற்கும் பெருமாளுக்கு முன்பாக இந்த கிண்ணத்தை வச்சுக்கோங்க. ஒரு அரச மர குச்சியை தயார் செய்து கொள்ளுங்கள்.

அந்த அரச மர குச்சியை முதலில் பெருமாளின் பாதங்களில் வைத்து, பிறகு இந்த சந்தனத்தில் தொட்டு, அந்த அரச மர குச்சியில் ஒட்டி இருக்கும் சந்தனத்தை உங்கள் நெற்றியில் இட்டுக் கொள்ள வேண்டும். கையால் சந்தன திலகத்தை எடுத்து நெற்றியில் இட்டுக் கொள்வதற்கு பதில், அரசமரம் குச்சி எடுத்து அதில் சந்தனத்தை தொட்டு நெற்றியில் இட போகிறீர்கள்.

- Advertisement -

இதுதான் இந்த பரிகாரத்தில் மறைந்திருக்கும் சூட்சமம். இதில் பெருமாளின் ஆசீர்வாதமும் சேர்ந்து உங்களுக்கு கிடைக்கும் போது இரட்டிப்பு பலன் கிடைக்கும். பணம் சம்பந்தப்பட்ட பேச்சுவார்த்தை நடத்தும் போது, ஏதாவது புது ஒப்பந்தம் கையெழுத்தும் ஆகும் போது கூட இந்த பரிகாரத்தை நீங்கள் செய்யலாம்.

இதையும் படிக்கலாமே: கண் திருஷ்டி நீங்க ஞாயிற்றுக்கிழமை இரவு செய்ய வேண்டிய பரிகாரம்

உங்களுக்கு தினமும் பண வசியம் தேவை என்றால் தினமும் இந்த திலகத்தை நெற்றியில் வைத்துக் கொண்டு சென்றாலும் தவறு கிடையாது. ஆன்மீகம் சொல்லும் இந்த எளிய பரிகாரத்தில் நம்பிக்கை இருந்தால் முயற்சி செய்து பாருங்கள் நீங்களும் பணக்காரர் ஆகலாம்.

- Advertisement -