கண் திருஷ்டி நீங்க ஞாயிற்றுக்கிழமை இரவு செய்ய வேண்டிய பரிகாரம்

- Advertisement -

கல்லடிபட்டாலும் படலாம், கண்ணடி மட்டும் படவே கூடாது என்று பெரியவர்கள் சொல்வார்கள். கல் அடிப்பட்டவர்கள் கூட, ஒரு சில நாட்களில் அந்த காயத்திலிருந்து தப்பித்துக் கொள்வார்கள். ஆனால் கண் திருஷ்டி பட்டு விட்டால் அதன் மூலம் வரக்கூடிய பிரச்சனைகளில் இருந்து விடுபடுவது என்பது அவ்வளவு சுலபமான விஷயம் அல்ல.

இதனால் தான் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமையும், ஒவ்வொரு மாதம் வரும் அமாவாசை திதியிலும் வீட்டில் இருப்பவர்களுக்கும், வீட்டிற்கும் திருஷ்டி சுற்றி போட வேண்டும் என்றும் பெரியவர்கள் சொல்லுவார்கள். அந்த வகையில் இன்று ஞாயிற்றுக்கிழமை, தேய்பிறை பஞ்சமி திதியோடு வந்திருப்பதால், வாராகி தாயை நினைத்து இந்த பரிகாரத்தை செய்யுங்கள்.

- Advertisement -

உங்கள் குடும்பத்தில் இருக்கும் ஒவ்வொருவருடைய கண் திருஷ்டி பிரச்சனைக்கும் முற்றுப்புள்ளி வைக்கலாம். கண் திருஷ்டி விலக இன்று இரவு வாராஹிதாயை நினைத்து செய்ய வேண்டிய அந்த பரிகாரம் என்ன. ஆன்மீகம் சார்ந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.

கண் திருஷ்டி நீக்கும் பரிகாரம்

இந்த பரிகாரத்திற்கு நமக்கு தேவையான பொருள் படிகார கல். உங்க வீட்டு பக்கத்தில் இருக்கும் மளிகை கடைகளில் போய் கேட்டாலே இந்த பொருள் கிடைத்துவிடும். வாங்கிக் கொள்ளுங்கள். விளையும் கொஞ்சம் மலிவானதாக தான் இருக்கும். உங்க வீட்டில் மூன்று அல்லது நான்கு பேர் இருக்கிறார்கள் என்றால் அத்தனை துண்டு பரிகார கல் வேண்டும். ஒரு பெரிய படிகார கல் வாங்கி அதை உடைத்து பரிகாரத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

- Advertisement -

இன்று இரவு தூங்க செல்வதற்கு முன்பு பூஜை அறையில் குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவரும் அமர்ந்து வாராகித் தாயை மனதார நினைத்து பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். எங்கள் குடும்பத்தில் இருக்கும் கண் திருஷ்டி எல்லாம் நீங்க வேண்டும். எங்கள் மேல் பட்ட கண் திருஷ்டி எல்லாம் விலக வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

இந்த பிரார்த்தனையை வைக்கும் போது உங்களுடைய உள்ளங்கைகளில் படிகாரங்கள் இருக்க வேண்டும். குடும்ப உறுப்பினர்கள் அனைவருடைய கையிலும் ஒவ்வொரு படிகாரங்கள் இருக்க வேண்டும். சின்ன பிள்ளைகளுக்கு கூட இந்த பரிகாரத்தை செய்யலாம். தவறு கிடையாது. ஐந்து வயதுக்கு மேலே இருக்கக்கூடிய பிள்ளைகளை இந்த பரிகாரத்தை செய்ய சொல்லுங்கள்.

- Advertisement -

பிரார்த்தனையை முடித்துவிட்டு தூங்கச் செல்லும்போது அவரவர் தலையணைக்கு அடியில், அவரவர் கையில் இருக்கும் படிகார கல்லை வைத்துவிட்டு தூங்குங்கள். மறுநாள் காலை எழுந்து எல்லா படிகார கல்லையும் வீட்டுக்கு வெளி பக்கத்தில் நெருப்பில் போட்டு பொசிக்கி விடலாம். அப்படி இல்லை என்றால் எல்லா படிகார கல்லையும் ஒரு பேப்பரில் மடித்து கொண்டு போய் ஓடுகின்ற தண்ணீரில் விடலாம்.

அதுவும் முடியாது என்பவர்கள் ஊருக்கு ஒதுக்குப்புறமாக கால் படாத இடத்தில் இந்த படிகார கல்லை போட்டு விட்டு வந்து விடுங்கள். உங்களைப் பிடித்த கண் திருஷ்டி அனைத்தும் இந்த படிகார கல்லின் மூலம் விலகிவிடும் என்பது நம்பிக்கையாக சொல்லப்பட்டுள்ளது. தேய்பிறை பஞ்சமி திதியான இன்று வாராகித் தாயை நினைத்து இந்த பரிகாரத்தை செய்யும் போது இரட்டிப்பு பலன் உங்களுக்கு கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே: மகாலட்சுமி தாயார் நிரந்தரமாக வாசம் செய்ய செம்பருத்தி பூ பரிகாரம்

வாராகி தாயின் பரிபூரண அருள் ஆசியும் உங்களுக்கு கிடைக்கும். நம்பிக்கை உள்ளவர்கள் இந்த எளிமையான பரிகாரத்தை செய்து பாருங்கள் உங்களுடைய உடல் உபாதைகள், சோம்பேறித்தனம், கண் திருஷ்டியால் வந்த பிரச்சனைகள் எல்லாம் தீரும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -