- Advertisement -

இன்றைய காலக்கட்டத்தில் பண தேவை இல்லாத மனிதரை ஒருவர் கூட நம்மால் காண முடியாது. பணம் இருப்பவர்களுக்கே பணத்தின் தேவை இருக்கத் தான் செய்கிறது. அப்படி இருக்கையில் பணம் இல்லாதவர்கள் நிலைமை பற்றி சொல்லவே தேவை இல்லை. அத்தகைய பணத்தை பெறத் தான் நாம் அல்லும் பகலும் பாடுபட்டு உழைத்துக் கொண்டிருக்கிறோம்.

அப்படி இருப்பினும் இன்றளவும் அனைவருக்கும் பணப்பற்றாக்குறை இருக்கத் தான் செய்கிறது. நமக்கு பணம் தேவை என்று வரும் போது அது கிடைக்க பெரிதும் போராட வேண்டியதாக இருக்கிறது. சிலருக்கு கைக்கு வரக்கூடிய பணம் கூட கைநழுவி சென்று கொண்டே இருக்கும். இன்னும் சிலர் கொடுத்த இடத்திலிருந்து பணத்தை வாங்க முடியாமல் அவதி படுவார்கள்.

- Advertisement -

இது போன்ற அனைத்து சூழ்நிலைகளையும் சரி செய்ய இந்த பரிகாரம் உதவியாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. பணத் தேவை உள்ளவர்கள் அல்லது வரவேண்டிய பணத்தை பெற நினைப்பவர்கள் 11 நாட்கள் தீபத்தை ஏற்றினால் போதும் பணம் தேடி வரும் என்று சொல்லப்படுகிறது. அந்த தீப பரிகாரத்தை பற்றி இப்போது ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் பார்க்கலாம்.

பணம் உடனே கைக்கு வர பரிகாரம்

இந்த பரிகாரம் செய்ய வன்னி மரம் நிச்சயமாக தேவை. வன்னி மரம் இல்லா விட்டால் இந்த பரிகாரத்தை செய்ய முடியாது. ஆகையால் வன்னி மரம் எங்கே இருக்கிறது என்று முதலில் பார்த்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த தீபத்தை வன்னி மரத்தடியில் தான் ஏற்ற வேண்டும். அதே போல் மாலை 6 மணிக்கு முன்பாக தான் ஏற்ற வேண்டும். அதையும் கவனத்தில் எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

வன்னி மரத்தடியில் தீபம் ஏற்ற கடுகு எண்ணெய் பஞ்சி திரி ஒரு அகல் விளக்கு இவற்றையெல்லாம் வாங்கிக் கொள்ளுங்கள். அதே போல் வீட்டிலிருந்து சில பொருட்களை கொண்டு செல்ல வேண்டும். அதற்கு சிறிதளவு கல் உப்பு அதில் கருப்பு எள் கொஞ்சம் வெல்லம் இவை மூன்றையும் ஒன்றாக கலந்து எடுத்துக் கொள்ளுங்கள்.

இப்போது வன்னி மரத்திடம் சென்று முதலில் நீங்கள் கலந்து வைத்த உப்பு எள் வெல்லம் சேர்த்த கலவை வன்னி மரத்தை சுற்றி போட வேண்டும். அதன் பிறகு வன்னி மரத்திற்கு முன்பாக கடுகு எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றுங்கள். இந்த தீபத்தை இயற்றிய பிறகு உங்களின் பணத்தேவை சீக்கிரத்தில் சரியாக வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த தீப பரிகாரத்தை வெறும் 11 நாட்கள் மட்டும் செய்தால் போதும். நிச்சயம் ஏதோ ஒரு வகையில் உங்களுக்கு பணம் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. எப்பேர்பட்ட கர்மாவினால் பாதிக்கப்பட்ட பணத்தடை இருந்தாலும் இந்த தீபமானது பணம் வருவதற்கான வாய்ப்பையாவது உருவாக்கும் என்று சொல்லப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: பணம் சொத்து தொடர்பான பிரச்சனை தீர முருகர் வழிபாடு

எந்த ஒரு பரிகாரத்தையும் நம்பிக்கையுடன் செய்யும் போது அதற்கான பலன் நிச்சயம் கிடைக்கும். இந்த பரிகாரத்தோடு பணத்தை பெறுவதற்கான உங்கள் முயற்சியும் தொடர்ந்து செய்யுங்கள் கண்டிப்பாக உங்கள் முயற்சி தோல்வி அடையாமல் வெற்றியில் முடியும் என்ற இந்த தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -