பணம் சொத்து தொடர்பான பிரச்சனை தீர முருகர் வழிபாடு

murugan
- Advertisement -

பக்தர்கள் கேட்ட வரத்தை உடனே அருளக் கூடிய கருணை மிக்க தெய்வம் தான் இந்த கந்த பெருமான். ஆகையால் தான் இன்று பெரும்பாலானோர் முருகன் ஆலயத்திற்கு படையெடுத்து சென்று வழிபாடு செய்கிறார்கள். அத்தனை சக்தி மிகுந்த முருகப்பெருமானை நம்முடைய சொத்து மற்றும் பணப் பிரச்சனை தீர எப்படி வழிபாடு செய்ய வேண்டும் என்பதை ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

சொத்து பண பிரச்சனை தீர முருகர் வழிபாடு

முருகர் வழிபாடு என்றாலே அது செவ்வாய்க்கிழமை தான். செவ்வாய்க்கிழமை முருகருக்கு மிகவும் உகந்த தினம். நிலம், பணம், கடன் என எத்தனை விதமான பிரச்சனைகள் இருந்தாலும் அதை தீர்க்க முருகரை செவ்வாய்க்கிழமையில் வழிபடுவது சிறந்தது.

- Advertisement -

இந்த வழிப்பாடும் செவ்வாய்க்கிழமை அன்றே செய்யுங்கள். அதற்கு நாம் திருச்செந்தூர் முருகர் திருவுருவப்படத்தை வாங்க வேண்டும். இதற்கு முன்பாகவே வீட்டில் வைத்து வணங்குபவர்கள் அந்த படத்தை வைத்துக் கொள்ளுங்கள். அது இல்லாதவர்கள் வேறு முருகர் படம் வைத்திருந்தாலும் திருச்செந்தூர் முருகர் படம் இந்த வழிபாட்டிற்காக வாங்க வேண்டும்.

முருகருக்கு உகந்த மலர்களில் செவ்வரளி மலர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். ஆகையால் செவ்வாய்க்கிழமை நாளில் செவ்வாய் ஹோரையில் அதாவது காலை ஆறிலிருந்து ஏழு மணிக்குள் இந்த வழிபாடு செய்ய வேண்டும். முருகருக்கு செவ்வரளி பூக்களால் உங்கள் கைகளாலே மாலையாக தொடுத்து சாற்றுங்கள். அத்துடன் முருகருக்கு தீபம் ஏற்றி மனதார வழிபாடு செய்ய வேண்டும்.

- Advertisement -

இந்த வழிபாடு செய்யும் நேரத்தில் ஏதேனும் ஒரு எளிமையான நெய்வேத்தியத்தை செய்து விடுங்கள். அதன் பிறகு முருகருக்கு முன் அமர்ந்து கந்த சஷ்டி கவசத்தை பாராயணம் செய்ய வேண்டும். இதை படிக்கவில்லை என்றாலும் உங்களுக்குத் தெரிந்த வேறு முருகர் பாடல், துதி என எதை வேண்டுமானாலும் சொல்லலாம்.

ஆனால் கட்டாயம் முருகருடைய நாமத்தை பாராயணம் செய்ய வேண்டும். முருகருக்கு பலவிதமான வழிபாட்டு முறைகள் இருந்தாலும் மிக எளிமையான இந்த வழிபாட்டு முறையிலே நம்முடைய பணப்பிரச்சனை சொத்து பிரச்சனை அனைத்தும் சமூகமாக முடிவுக்கு வர முடியும் என்று சொல்லப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: கஷ்டங்கள் தீர பைரவர் வழிபாடு

இந்த வழிபாட்டை வாரந்தோறும் தொடர்ந்து நம்பிக்கையுடன் செய்து வந்தால் உங்களின் இந்த பிரச்சனைகளுக்கு நிச்சயம் தீர்வு உண்டு நம்பிக்கையுடன் வழிபாடு செய்யுங்கள்.

- Advertisement -