- Advertisement -

தினமும் பெருமாளை நினைத்து வழிபாடு செய்பவர்களுக்கு நிறைய பணம் சேரும் என்று சொல்லுவார்கள். நிறைய பேரின் நம்பிக்கையும் கூட இது. இந்த நம்பிக்கை நிறைய பேருக்கு பலித்தும் இருக்கிறது. உங்களுடைய வருமானம் பெருக வேண்டுமா. தொழிலில் லாபம் கொட்டோ கொட்டென கொட்ட வேண்டுமா.

உங்க வீட்டிலோ அல்லது தொழில் செய்யும் இடத்திலோ பெருமாளின் திருவுருவப்படத்தை இந்த திசையை நோக்கி மாட்டி வையுங்கள். தினமும் பின் சொல்ல கூடிய முறைப்படி வழிபாடு செய்யுங்கள். பெருமாள் உங்கள் பேச்சுக்கு மறு பேச்சு பேசவே மாட்டார். நீங்கள் கேட்பதை எல்லாம் கொடுத்துக் கொண்டே இருப்பார்.

- Advertisement -

பணம் தரும் பெருமாள் வழிபாடு

உங்க வீட்டிலும் சரி, தொழில் செய்யும் இடத்திலும் சரி பெருமாளை வடக்கு திசை நோக்கி பார்த்தவாறு மாட்ட வேண்டும். பெருமாள் கண்கள் வடக்கு திசையை பார்க்க வேண்டும். அந்த பெருமாளின் திருவுருவப்படத்தை தினமும் துடைத்து பச்சைக் கற்பூரம் சேர்த்து குங்குமபொட்டு வைக்க வேண்டும். அதாவது பெருமாளுக்கு ரொம்ப ரொம்ப உகந்த பொருள் பச்சை கற்பூரம்.

திருப்பதியில் பெருமாளை அலங்காரம் செய்வதற்கு இந்த பச்சை கற்பூரத்தை அதிகமாக பயன்படுத்துவார்கள். உங்க வீட்டில் இருக்கும் பெருமாளின் திருவுருவப் படத்திலும் கொஞ்சமாக பச்சை கற்பூரத்தை எடுத்து ஒட்டி வையுங்கள். பெருமாளுக்கு தினமும் புதுசாக துளசி இலைகளை வாங்கி போடவும். ஒரு மண் அகல் விளக்கில் நெய் ஊற்றி அந்த நெய்யில் 2 டைமண்ட் கற்கண்டு, 2 ஏலக்காய், 2 கிராம்பு போட்டு, தீபம் ஏற்ற வேண்டும்.

- Advertisement -

பெருமாளை துளசி இலைகளால், பச்சைக் கற்பூரம் வாசம் நிரம்ப, அலங்காரம் செய்துவிட்டு இந்த விளக்கை ஏற்றி வைத்துவிட்டு, என்ன வரம் கேட்டாலும் அது உடனே கிடைக்கும். தொடர்ந்து 48 நாள் இந்த வழிபாட்டை மட்டும் செய்து பாருங்கள். உங்கள் குடும்பத்தில் இருக்கும் அத்தனை கஷ்டங்களும் தீரும் குறிப்பாக பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் நீங்கள் சிக்கியிருந்தால் அந்த பிரச்சனையில் இருந்து சீக்கிரம் வெளி வருவீர்கள். கடன் சுமை குறையும் என்பதும் நம்பிக்கையாக சொல்லப்பட்டுள்ளது.

இந்த வழிபாட்டை வீட்டிலும் செய்யலாம் தொழில் செய்யக்கூடிய இடத்திலும் செய்யலாம். முடிந்தால் இந்த பெருமாளின் படத்திற்கு முன்பு ஒரு மண் உண்டியல் வையுங்க. உங்களுக்கு வியாபாரத்தில் தினமும் ஆயிரம் ரூபாய் லாபம் வந்தால், வெறும் பத்து ரூபாயை அந்த உண்டியலில் பெருமாளுக்காக போட்டு வாருங்கள். இன்றைக்கு 1000 ரூபாய் வருமானம், 2000 ஆக பெருகிவிட்டது.

- Advertisement -

அப்போது உண்டியலில் 20 ரூபாய் போட்டு விடுங்கள். பெருமாளே இது உன்னுடைய பங்கு என்று சொல்லிப் போடுங்கள். திருப்பதிக்கு செல்லக்கூடிய வாய்ப்பு கிடைத்தால் இந்த உண்டியலை அப்படியே கொண்டு போய் திருப்பதி பெருமாள் உண்டியலில் சேர்க்கலாம். முடியாதவர்கள் உங்கள் வீட்டு பக்கத்தில் இருக்கும் பெருமாள் கோவிலில் உண்டியலில் இந்த பணத்தை சேர்த்து விட வேண்டும்.

இதையும் படிக்கலாமே: பித்ரு சாபம் நீங்க ஞாயிற்றுக்கிழமை செய்ய வேண்டிய பரிகாரம்

உண்டியல் நிரம்பியவுடன் அந்த பிரார்த்தனையை நிறைவேற்றுங்கள். பெருமாளை நம்பிக்கையோடு மேல் சொன்ன முறைப்படி யார் வழிபடுகிறார்களோ அவர்களுக்கு நிச்சயம் பணக்கஷ்டம் இருக்காது. இது நிதர்சனமான உண்மை. உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் இந்த ஆன்மீகம் வழிபாட்டை பின்பற்றி பலன் பெறவும்.

- Advertisement -