பித்ரு சாபம் நீங்க ஞாயிற்றுக்கிழமை செய்ய வேண்டிய பரிகாரம்

pray
- Advertisement -

இந்த கலியுகத்தில் யாருடைய ஜாதகத்தை எடுத்து பார்த்தாலும் பித்ரு தோஷம் இருக்கிறது, பித்ரு சாபம் இருக்கிறது, முன்னோர்களின் ஆசிர்வாதம் உங்கள் குடும்பத்திற்கு கிடைக்கவில்லை. அதனால் தான் உங்களுடைய குடும்பம் கஷ்டப்படுகிறது என்று சொல்கிறார்கள். முன் ஜென்மத்தில் அப்படி என்னதான் பாவம் செய்தோமோ என்று நமக்கு தெரியவில்லை.

என்ன தவறு செய்தோமோ தெரியவில்லை. முன்னோர்களின் சாபம் நம் குடும்பத்தை தொடர்கிறது. குடும்பத்தில் நிம்மதி இல்லாத சூழ்நிலை நிலவி வருகிறது. இந்த பிரச்சனையில் இருந்து தப்பிப்பதற்கு ஆன்மீகம் சொல்லும் ஒரு எளிய வழிபாட்டு முறை இதோ உங்களுக்காக இந்த பதிவில்.

- Advertisement -

பித்ரு சாபம் நீங்க பரிகாரம்

இரவு உங்க குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவரும் தூங்க செல்லட்டும். குடும்ப தலைவியோ அல்லது தலைவனோ இந்த பரிகாரத்தை செய்யுங்கள். உங்க வீட்டில் நீங்கள் தூங்கக்கூடிய இடம் இல்லாமல் வரவேற்பரையோ அல்லது பால்கனி போன்ற இடத்தை கூட தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். அந்த இடத்தில் ஒரு ஓரமாக கொஞ்சமாக மஞ்சள் தண்ணீர் தெளித்து, ஒரு துணியை கொண்டு தரையைத் துடைத்து விடுங்கள்.

ஒரு சின்ன தட்டில் மண் அகல் விளக்கு ஒன்று வைத்து, நல்லெண்ணெய் ஊற்றி திரி போட்டு விளக்கு ஏற்றி வைத்து விடுங்கள். அந்த விளக்குக்கு பக்கத்திலேயே ஒரு டம்ளரில் சுத்தமான தண்ணீர் ஒரு சிட்டிகை மஞ்சள் பொடி போட்டு அதில் இரண்டு துளசி இலைகளை போட்டு வைத்து விடுங்கள். இப்படி இந்த பொருட்களை எல்லாம் தயார் செய்து விட்டு உங்களுடைய முன்னோர்களை ஒரு நிமிடம் மனதில் நினைவுகூர்ந்து, அவர்களுடைய ஆசிர்வாதத்தை பெற்றுக் கொள்ளுங்கள்.

- Advertisement -

உங்கள் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ளவும். குடும்பத்தில் இருக்கும் கஷ்டங்கள் எல்லாம் தீர வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். பிறகு நீங்கள் தூங்க செல்லலாம். இரவு முழுவதும் அந்த தண்ணீர் அப்படியே இருக்கட்டும். விளக்கில் எண்ணெய் இருக்கும் வரை எரியட்டும். பிறகு அந்த விளக்கு தானாக குளிர்ந்தால் தவறு கிடையாது.

மாதத்தில் ஒரு நாள் ஞாயிற்றுக்கிழமை இரவு முன்னோர்களை நினைத்து இந்த பரிகாரத்தை எந்த ஒரு வீட்டில் செய்கிறார்களோ, அந்த வீட்டில் இருப்பவர்களுக்கு ஜாதக கட்டத்தில் பித்ரு தோஷம், பித்ரு சாபம் இருந்தாலும் அதனால் வரக்கூடிய பிரச்சனைகள் குறையும் என்பது நம்பிக்கையாக சொல்லப்பட்டுள்ளது.

- Advertisement -

மாதத்தில் ஒரு ஞாயிற்றுக்கிழமை இதை செஞ்சு பாருங்க நிச்சயம் நல்லது நடக்கும். அப்படி இல்லை என்றால் அமாவாசை இரவும் இந்த பரிகாரத்தை செய்யலாம். அப்போ மாதத்தில் இரண்டு நாள் கணக்கு வரும். ஏதாவது ஒரு ஞாயிற்றுக்கிழமை, அமாவாசை தினத்தில், இரண்டு நாட்களும் இந்த பரிகாரத்தை செய்து முன்னோர்களின் ஆசிர்வாதத்தை பெறுங்கள். உங்கள் குடும்பத்தில் அடுத்தடுத்த துற்சம்பவங்களாகவே நடந்து வந்திருந்தால் அது எல்லாம் சரியாகி குடும்பத்தில் சந்தோஷம் பிறக்கும்.

இதையும் படிக்கலாமே: துன்பங்கள் தேய்ந்து போக தேய்பிறை பிரதோஷம்

மறுநாள் காலை எழுந்து அந்த விளக்கை சுத்தம் செய்து தனியாக எடுத்து விடுங்கள். மாதம் தோறும் அதே விளக்கை பயன்படுத்தலாம். இந்த விளக்கை கொண்டுபோய் பூஜை அறையில் மீண்டும் விளக்கு போடாதீங்க. அந்த ஒரு டம்ளர் தண்ணீரை கீழே கொட்டி விட்டு டம்ளரை சுத்தம் செய்து நீங்க எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம். அதில் எந்த தவறும் கிடையாது. சக்தி வாய்ந்த இந்த எளிமையான ஆன்மீகம் சார்ந்த வழிபாட்டில் நம்பிக்கை உள்ளவர்கள் பின்பற்றி பலன் பெறவும்.

- Advertisement -