- Advertisement -
ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagaval

உங்கள் வீட்டில் தீராத கஷ்டங்கள் இருந்து கொண்டிருக்கிறதா? உங்கள் வீட்டு செல்வங்கள் அழிந்து கொண்டே வருகிறதா? உடனே நீங்கள் கவனிக்க வேண்டியது உங்கள் வீட்டில் இவ்வாறான மரங்கள் இருக்கிறதா என்று

வீடு என்பது அழகான குடும்பம் இருக்கும் இடமாகும். முக்கியமாக அந்த குடும்பத்தில் எப்போதும் சந்தோசமும், நிம்மதியும் இருக்க வேண்டும் என்று தான் அனைவரும் பூஜைகள் செய்து வருகின்றனர். பூஜை செய்யும்பொழுது அனைவரும் வேண்டிக் கொள்வது என்னை சுற்றியுள்ள அனைவரும் நலமாகவும், சந்தோஷமாகவும் இருக்க வேண்டும் என்றுதான். இப்படி ஒரு வீட்டில் சந்தோஷம் இருந்தால் மட்டுமே அந்த குடும்பம் முழுமை பெறும். ஆனால் ஒரு சிலரின் தேவையற்ற பொறாமை காரணமாக கண்திருஷ்டி உண்டாகி பலவித பிரச்சனைகள் நமது குடும்பத்தில் ஏற்படுகிறது. அது மட்டுமில்லாமல் ஒரு சிலர் தங்கள் வீடுகளில் பலவிதம் செடி, கொடி, மரங்களை வளர்த்து வருவார்கள். அவர்களுக்கும் தெரியாமல் சில தீமை விளைவிக்கக் கூடிய மரங்களை வளர்த்து வந்தால் அவர்களையும் அறியாமல் அவர்களின் செல்வம் குறைந்து கொண்டே செல்லும். வாருங்கள் அப்படி செல்வத்தை அழிக்கும் மரங்கள் என்னென்ன என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகிறோம்.

தாவரங்களை வீட்டில் வளர்ப்பதன் மூலம் அவை பல விதத்தில் நல்ல பலன்களைக் கொடுக்கிறது. அருமையான சுவாசம் கொடுப்பதாகவும், உடலில் ஏற்படும் உபாதைகள் மருந்தாகவும் பயன்படுகிறது. அப்படியிருக்க சில தாவரங்கள் வாஸ்து படி வீட்டில் ஆகாத தோஷத்தையும் கொடுக்கிறது. இவ்வாறான தாவரங்களை தெரியாமல் வீட்டில் வளர்ப்பதன் மூலம் எப்பொழுதும் குடும்பத்தில் பிரச்சனை மற்றும் வறுமை நீடித்துக் கொண்டிருக்கும்.

- Advertisement -

அரச மரத்தை சுற்றிவந்தால் குழந்தை பிறக்கும், செல்வம் பெருகும் என்றெல்லாம் கூறுவார்கள். ஆனால் அரசமரம் கோவிலில் இருந்தால் மட்டுமே இவ்வாறான நன்மைகளைக் கொடுக்கும். அப்படி அல்லாமல் வீட்டின் முன்பு அல்லது வீட்டின் உள்ளே இந்த மரம் இருப்பதனால் உங்களுக்கான சொத்துக்கள் அழிந்து கொண்டே தான் இருக்கும், பணவிரயம் அதிகரிக்கும்.

அதுபோல வீட்டின் முன்பு புளியமரம் இருக்கக்கூடாது. புளிய மரம் இருக்கும் இடத்தில் வீடு கட்டக்கூடாது. அடுத்ததாக தென்னை மரத்தை வீட்டில் வளர்க்கலாம். ஆனால் அதனை ஒற்றையாக வளர்க்கக்கூடாது. இப்படி தென்னைமரம் ஒற்றையாக இருந்தது என்றால் எதிர்பாராத ஆபத்துகள் வந்துவிடும். அதுபோல பேரிட்ச்ச மரத்தை வீட்டில் வளர்ப்பதனால் பணத் தட்டுப்பாடு ஏற்படும்.

- Advertisement -

அவ்வாறு பனைமரம் இருக்கும் வீட்டில் பணப் பற்றாக்குறை ஏற்படும். அதுமட்டுமல்லாமல் வீட்டு உறுப்பினர்களுக்கு ஆபத்துக்கள் உண்டாகும். அவ்வாறு பிரச்சனை உண்டாக்கும் செடிகளாக மூங்கில் மரம், இலந்தை மரம், முட்கள் இருக்கும் செடிகள், விஷச் செடிகள் போன்றவற்றை வளர்ப்பது என்பதை தவிர்க்க வேண்டும்.

இவற்றினால் உங்கள் வீட்டில் அமைதி குறையும். உங்கள் குடும்பத்தில் தொடர்ந்து பிரச்சனைகள் உருவாகிக்கொண்டே இருக்கும். எனவே இவ்வாறான தாவரங்களை வீட்டில் வளர்ப்பது என்பதை தவிர்த்து விடுவது உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் நன்மையை சேர்க்கும்.

- Advertisement -