- Advertisement -
சுவாரஸ்ய தகவல்கள்

ஏழை சிறுவன் குபேரனான உண்மை சம்பவம்

ஊரெங்கும் ஓடி ஓடி வேலை தேடியும் ஒரு வேலையும் கிடைக்காததால் ஒரு நாடக கொட்டகை வாசலில் சோர்ந்து படுத்துக்கொண்டிருதான் ஒரு சிறுவன். பசி அவனை வாட்டி எடுத்தது. கையில் 10 பைசா இல்லை. அப்போது பணக்காரர் ஒருவர் அந்த நாடக கொட்டகை அருகில் குதிரையில் வந்தார்.

டேய் தம்பி, இங்கு கட்டிவைக்கும் குதிரைகள் அனைத்தும் களவாடப்படுகிறது, நான் உள்ளே சென்று நாடகம் பார்த்துவிட்டு வரும் வரை நீ என் குதிரையை பார்துக்கொள்கிறாயா ? நான் உனக்கு பணம் தருகிறேன் என்று அவர் கூறினார். அவனும் வேகமாக தன் தலையை அசைத்தான்.

- Advertisement -

நாடகம் பார்த்துவிட்டு வெளியில் வந்த பணக்காரருக்கு ஒரே ஆச்சர்யம். அந்த குதிரை அவருடையது தானா என்ற சந்தேகம் அவருக்கு வந்துவிட்டது. அந்த அளவிற்கு குதிரையை சுத்தப்படுவைத்திருந்தான் அந்த சிறுவன். பேசியதை விட அவனுக்கு 5 மடங்கு அதிகப்பணம் கொடுத்தார் அந்த பணக்காரர்.

மீண்டும் அடுத்த நாள் அதே இடத்தில் சிலர் வந்து அவனிடம் குதிரையை விட அவனும் அதை பாதுகாத்து, சுத்தப்படுத்தி வருவாயை ஈட்டினான். இது ஒரு நல்ல தொழிலாக இருக்கிறதே என்று நினைத்த அவன் அந்த தொழிலை தொடர்ந்து செய்ய, ஒரு கட்டத்தில் குதிரை லாயமே அமைத்து, வேளைக்கு ஆட்கள் எல்லாம் போட்டு தன் பணியை தொடர ஆரமித்தான். நாடகத்திலும், இலக்கியத்தின் மீதும் ஆர்வம் கொண்ட அவன், நாடகங்களை கவனிக்க தொடங்கினான். ஒரு கட்டத்தில் அவன் மிகப் பெரிய இலக்கிய மேதை ஆகிவிட்டான். அந்த சிறுவன்தான் உலகப்புகழ் பெற்ற இலக்கியமாமேதை ஷேக்ஸ்பியர்.

எந்த தொழிலையும் நேர்மையாக செய்து, தனக்கு பிடித்த துறையில் உண்மையாக உழைத்தால் வாழ்வில் வெற்றி நிச்சயம் என்பதற்கு ஷேக்ஸ்பியரின் வாழ்க்கை ஒரு நல்ல எடுத்துக்காட்டு.

- Advertisement -