- Advertisement -
ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagaval

கணவன் மனைவி ஒற்றுமையுடனும் அன்புடனும் இருக்க வழிபாடு

இந்த உலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் அவர்களுடைய வாழ்க்கை என்பது பெற்றோர்களிடம் இருந்து ஆரம்பிக்கும். ஆனால் அவர்களின் வாழ்க்கை முழுமை பெறுவது என்பது அவர்களுடைய திருமணத்தில் தான். அப்படி வாழ்க்கை முழுமை பெறச் செய்யக்கூடிய திருமணம்தான் ஒருவருடைய வாழ்க்கையை சொர்க்கமாகவும் நரகமாகவும் மாற்றக்கூடிய வல்லமை படைத்ததாக திகழ்கிறது.

வாழ்க்கைத் துணையாக வரும் நபர் அனுசரித்து அன்போடு நடந்து கொள்வதன் மூலம் அவர்களின் வாழ்க்கை சொர்க்கமாக திகழும். இதுவே இதற்கு நேர் மாறாக இருக்கும் பட்சத்தில் அந்த வாழ்க்கை நரகத்தை விட மோசமானதாகவே இருக்கும். அப்படிப்பட்ட நரகமான வாழ்க்கையும் சொர்க்கமாக மாறுவதற்கு விநாயகப் பெருமானை எந்த முறையில் வழிபட வேண்டும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்று நம்முடைய முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள், அப்படி நிச்சயக்கப்பட்ட திருமணம் பல கருத்து வேறுபாடுகள் காரணமாக நரகமாக சென்று விடுகிறது. இதனால் பல குடும்பம் பிரிந்து மன வேதனைக்கு ஆளாகி நிம்மதியற்று இருக்கிறது. இந்த நிம்மதியற்ற நிலை மாறி சந்தோஷமான வாழ்க்கையை வாழ வேண்டும் என்று நினைக்கும் கணவனும் மனைவியும் விநாயகரை இந்த முறையில் வழிபட்டால் போதும்.

இந்த வழிபாட்டை கணவனோ அல்லது மனைவியோ யாராவது ஒருவர் செய்தால் போதும். தங்களின் இல்லத்திலேயே இந்த வழிபாட்டை செய்துவிடலாம். இந்த வழிபாட்டை ஞாயிற்றுக்கிழமை அன்றுதான் செய்ய வேண்டும். முதல் நாள் சனிக்கிழமை அன்று அருகில் இருக்கக்கூடிய வாழைப்பழ கடைக்கு சென்று இரட்டை வாழைப்பழமாக பார்த்து வாங்கிக் கொள்ள வேண்டும். ஞாயிற்றுக்கிழமை அன்று காலையில் விநாயகருக்கு முன்பாக ஒரு சிறிய தாம்பாளத்தில் வெற்றிலை பாக்கு இந்த இரட்டை வாழைப்பழம் இதோடு ஒரு கட்டி வெல்லம் வைக்க வேண்டும்.

- Advertisement -

பிறகு அவருக்கு ஒரு நெய் தீபத்தை ஏற்றி வைத்துவிட்டு உங்களுடைய குலதெய்வம், இஷ்ட தெய்வம், குருமார்கள் இவர்களை நினைத்து நினைத்து மனதார வழிபட வேண்டும். பிறகு விநாயகப் பெருமானுக்குரிய மந்திரமான “ஓம் கம் கணபதியே நமஹ” என்னும் மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும். இவ்வாறு 108 முறை உச்சரிக்கும் பொழுது முழுக்க முழுக்க வாழைப்பழம் மற்றும் வெள்ளத்தின் மீதுதான் நம்முடைய பார்வை இருக்க வேண்டும். இதனுடைய அர்த்தம் என்னவென்றால் இரட்டை வாழைப்பழம் போல் கணவனும் மனைவியும் ஒன்றாக சேர்ந்து வெல்லத்தைப் போல் இனிமையான வாழ்க்கையை வாழ வேண்டும் என்றுதான்.

இப்படி வழிபாடு செய்த பிறகு கற்பூர தீப தூப ஆராதனை காட்டி பூஜையை நிறைவு செய்து கொள்ள வேண்டும். பிறகு இந்த இரட்டை வாழைப்பழத்தையும் வெல்லத்தையும் எடுத்து வாழைப்பழத்தை சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் வெல்லத்தை பொடி செய்து சேர்த்து கணவனும் மனைவியும் சாப்பிட வேண்டும். வெற்றிலை பாக்கை தாங்கள் உபயோகப்படுத்துவதாக இருந்தாலும் பரவாயில்லை பிறருக்கு கொடுப்பதாக இருந்தாலும் பரவாயில்லை.

- Advertisement -

இந்த முறையில் ஞாயிற்றுக்கிழமை தோறும் விநாயகர் பெருமானை வழிபட விரைவிலேயே கணவன் மனைவிக்குள் இருக்கக்கூடிய கசப்பான உறவு என்பது வெல்லத்தை போல் இனிக்கும் உறவாக மாறி சொர்க்கமான வாழ்க்கையை பெற முடியும்.

இதையும் படிக்கலாமே: சர்வ மங்களம் உண்டாக வழிபாடு

மிகவும் எளிமையான இந்த விநாயகர் வழிபாட்டை முழு நம்பிக்கையுடன் செய்பவர்களுடைய வாழ்க்கை சொர்க்கமாக அமையும்.

- Advertisement -