- Advertisement -

இந்த பொருட்களை மடடும் தானமாக கொடுத்து பாருங்கள்! உங்களுடைய பிரச்சனைகள் தீர்ந்து வாழ்க்கைத்தரம் உயர்ந்து கொண்டே இருக்கும்.

நமது கர்மாக்களை தகர்த்து எறிவதற்கான சிறந்த பரிகாரம் தானம் கொடுப்பதாகும். தானங்கள் செய்வதன் மூலம் பலன்கள் பல கிடைத்திடும் என்று பலருக்கும் தெரிந்திருந்தாலும், தானம் செய்வதை அனைவராலும் செய்ய இயலாது. ஆனால் அவரவர் சக்திக்கு ஏற்ப ஏதாவது சிறிய தானங்களை செய்திடலாம். மனிதன் உயிர்வாழ மிகவும் அடிப்படையான உணவையும் மற்றும் உணவு சார்ந்த பொருட்களையும் தானமாக கொடுப்பதன் மூலம் உங்களுக்கு கிடைக்கும் பலன்களைப் பற்றி தான் இந்தப் பதிவில் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

“அன்னமிட்ட வீடு சின்னம் கெட்டுப் போகாது, வாய் வாழ்த்தா விட்டாலும் வயிறு வாழ்த்தும்” இந்த பழமொழிக்கு ஏற்றார் போல் உணவோ அல்லது உணவு சார்ந்த பொருட்களையோ நாம் தானமாக கொடுப்பதன் மூலம் பூர்வ ஜென்ம கர்ம வினைகள் தீர்ந்து பித்ருக்களின் ஆசீர்வாதம் கிடைக்கும்.

- Advertisement -

தானமாக கொடுக்க வேண்டிய உணவுப் பொருட்கள் மற்றும் அவற்றின் பலன்கள்:
1. பச்சரிசி: பச்சரிசியில் சந்திரனின் ஆதிக்கம் நிறைந்துள்ளது. எனவே நீங்கள் எப்போதும் எவ்விதத் தவறான சொற்களையும் உபயோகித்து எந்தவித பிரச்சனையிலும் மாட்டிக் கொள்ளாமல் இருக்க சந்திரனது அருள் முழுமையாக கிடைக்கப் பச்சரிசி தானமாக கொடுத்து பாருங்கள்.

2. வெள்ளம்: வெள்ளம் மகாலட்சுமிக்கும், சுக்கிரனுக்கும் மிகவும் பிடித்த இணைப்பு பொருள். இதனை தானமாக கொடுப்பதால் பணம் மற்றும் செல்வத்தை உங்களிடம் ஈர்ர்த்துக் கொடுக்கும்.

- Advertisement -

3. துவரம் பருப்பு: துவரம் பருப்பில் செவ்வாய் நாதர் குடி கொண்டு இருக்கிறார். செவ்வாய் என்றாலே வீட்டில் மங்களம் உண்டாகும் என்று அர்த்தமாகும். இதனை தானமாக கொடுப்பதால் வீட்டில் எப்பொழுதும் எந்த வித பிரச்சனையும் ஏற்படாமல் இருக்கும்.

4. தேங்காய்: தேங்காய் தானமாக கொடுக்க தென்னை மரம் எவ்வளவு உயரமாக இருக்கிறதோ அது போல் உங்கள் வாழ்க்கை தரமும் உயர்ந்து கொண்டே இருக்கும்.

- Advertisement -

5. எண்ணெய்: சனி பகவானுக்குரிய எண்ணையை தானமாக கொடுத்தால் நீங்கள் சனி பகவானின் பிடியில் இருந்தாலும் உங்களுக்கு நன்மைகளே நடக்கும்.

இந்த ஐந்து பொருட்களையும் மாதம் ஒருமுறை 5 நபர்களுக்கு தானமாக கொடுக்க வேண்டும். உங்களால் 5 நபர்களுக்கு தானமாக கொடுக்க முடியாவிட்டாலும் குறைந்தது இரண்டு நபர்களுக்கு தானமாக கொடுத்து வர கிடைக்கும் நன்மைகளை உங்களால் கணக்கிடவே முடியாது.

பலன்கள்:
உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எவ்வளவு துயரத்தில் இருந்தாலும் இந்த ஐந்து பொருட்களை தானமாக கொடுத்து வர உங்கள் துன்பத்திற்குக் காரணமான பணத்தின் வரவு அதிகரித்து மற்றவர் வியக்கும் அளவிற்கு உங்கள் வாழ்க்கைத் தரம் உயர்ந்து கொண்டே இருக்கும். நீங்கள் செய்த கர்ம வினைகளின் பலனாகவே துன்பத்தை அனுபவித்துக் கொண்டிருப்பீர்கள். ஆனால் இவற்றைத் தானமாக கொடுப்பதன் மூலம் உங்கள் பாவங்கள் தீர்ந்து பாவ விமோட்சனம் கிடைக்கும்.

இந்த தானத்தை எவருக்கு வேண்டுமானாலும் செய்திடக் கூடாது. உண்மையாகவே உணவிற்கே வழி இல்லாத நபர்களை தேடி அவர்களுக்கு மட்டுமே இதனை தானமாக கொடுத்திட வேண்டும். ஏனென்றால் மிகுந்த பசியுடன் இருக்கும் ஒருவர், சாப்பிடும் பொழுது மட்டுமே அவரது வயிறும் நிறைந்து, மனமும் நிறைந்து மனதார உங்களை வாழ்த்துவார்கள். குறிப்பு: இந்த தானத்தை உங்கள் ஜென்ம நட்சத்திரமன்று செய்தீர்கள் என்றால் அதிக பலன்கள் கிடைக்கும்.

- Advertisement -