- Advertisement -
ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagaval

வருமானம் அதிகரிக்கவும் கடன் பிரச்சினை தீரவும் பரிகாரம்

ஒருவருடைய வாழ்க்கையில் பணம் என்பது மிகவும் இன்றியமையாத ஒன்றாக திகழ்கிறது. பணத்தை வைத்து தான் மதிப்பும் மரியாதையும் கிடைக்கிறது. அதனால் தான் பணத்தை அதிக அளவில் சம்பாதிக்க வேண்டும் என்று அனைவரும் ஆசைப்படுகிறார்கள். பணத்தை சம்பாதிக்க முடியாத சூழ்நிலையில் தங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்வதற்காக கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உண்டாக்கும்.

தேவைப்படும் பட்சத்தில் மட்டும் கடனை வாங்கி அதை முறையாக திருப்பிக் கொடுத்து விட்டால் அதனால் எந்த பிரச்சினையும் இருக்காது. ஆனால் ஒரு சிலரோ தங்கள் வருமானம் குறைவாக இருந்தாலும் ஆடம்பரமான வசதியான வாழ்க்கை வாழ வேண்டும் என்பதற்காக தேவையற்ற கடன்களை வாங்கி கடன் என்னும் கடலில் மூழ்கும் சூழ்நிலைக்கு போய்விடுவார்கள். அப்படிப்பட்டவர்கள் செய்யக்கூடிய ஒரு எளிமையான கல்லுப்பு பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

- Advertisement -

கடனால் அதிக அளவு பிரச்சினைகள் தான் ஏற்படுகிறது என்பதை உணர்ந்து கொண்டாலே கடன் வாங்க வேண்டும் என்ற நினைப்பு வராது. சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக இக்கட்டான சூழ்நிலையில் மாட்டிக் கொண்டு இருப்பவர்கள் தங்களால் அந்த கடனை திருப்பித் தர முடியும் என்ற நம்பிக்கை இருந்தால் மட்டுமே தான் கடன் வாங்க வேண்டும்.

சரி கடனை வாங்கி விட்டோம் அதை சரி செய்வதற்கு என்ன செய்வது என்று யோசிப்பவர்கள் முதலில் தங்களுடைய பணவரவை அதிகரிக்க வேண்டும். அப்படி பண வரவை அதிகரித்தால்தான் அவர்களால் கடனை அடைக்க முடியும். இதில் கடனை அடைப்பதற்கு ஒரு பரிகாரமும், வருமானத்தை அதிகரிப்பதற்கு ஒரு பரிகாரமும் இருக்கிறது.

- Advertisement -

முதலில் கடனை அடைப்பதற்குரிய பரிகாரத்தை பார்ப்போம். திங்கட்கிழமை அன்று சனி ஹோரையில் (காலை 7-8, பகல் 2-3, இரவு 9-10) இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும் அல்லது சனிக்கிழமை அன்று சந்திர ஹோரையில்(பகல் 12 – 1, இரவு 7 – 8) இந்த பரிகாரத்தை செய்யலாம். இந்த பரிகாரத்தை நீர்நிலைகள் இருக்கும் இடத்தில் தான் செய்ய வேண்டும்.

முதலில் இந்த நேரத்தில் புதிதாக வாங்கிய கல் உப்பை இரண்டு கைகளிலும் தனித்தனியாக நிறைய நிறைய எடுத்து கைகளை மூடிக்கொண்டு 15 நிமிடம் உங்களுடைய கடன் பிரச்சினை தீர வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ளுங்கள். பிறகு கைகளில் இருக்கும் கல் உப்பை தண்ணீருக்குள் விட்டு நன்றாக கரைத்து விட வேண்டும். நீர்நிலைகள் இல்லாமல் இருப்பவர்கள் வீட்டிற்கு வெளியே கால் படாத இடமாக பார்த்து அருகில் இருப்பவரை கைகளில் தண்ணீரை ஊற்ற சொல்லி அப்படியே கரைத்து விட வேண்டும். இப்படி செய்வதன் மூலம் கடன் சுமை என்பது படிப்படியாக குறைய ஆரம்பிக்கும்.

- Advertisement -

பண வரவை அதிகரிக்க சனிக்கிழமை அன்று ஒரு சிறிய அளவில் இருக்கக்கூடிய மண் சட்டியை வாங்கி அது நிரம்ப கல் உப்பை கொட்ட வேண்டும். பிறகு அதை வீடு அல்லது தொழில் செய்யும் இடத்தில் தென்மேற்கு மூலையில் வைக்க வேண்டும். அருகில் இருக்கும் விநாயகர் ஆலயத்திற்கு சென்று ஒரு ரூபாய் நாணயத்தை விநாயகரின் பாதத்தில் வைத்து தரும்படி கேட்டு மனதார விநாயகரிடம் வருமானம் அதிகரிக்க வேண்டும் என்ற வேண்டுதலை வைத்து அந்த ஒரு ரூபாய் நாணயத்தை வாங்கி வந்து உப்பின் மேல் வைத்து விட வேண்டும்.

இந்த மாதம் முதல் சனிக்கிழமை இந்த பரிகாரத்தை செய்தால் அடுத்த மாதமும் முதல் சனிக்கிழமை செய்ய வேண்டும். அடுத்த மாதம் சனிக்கிழமை வரும் பொழுது ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்து சுத்தமாக கழுவி விட்டு வீட்டு பூஜை அறையில் வைத்து விட்டு இந்த உப்பு இருக்கும் பானையை எடுத்து நீர்நிலைகளில் விட்டு விட வேண்டும். மறுபடியும் புதிதாக பரிகாரத்தை செய்ய வேண்டும். இப்படி செய்வதன் மூலம் வருமானம் அதிகரிக்கும்.

இதையும் படிக்கலாமே: வீட்டில் இருக்கும் கெட்ட சக்தி விலக பரிகாரம்

மிகவும் எளிமையான இந்த இரண்டு பரிகாரங்களையும் செய்து வருமானத்தை அதிகரித்து கடன் பிரச்சனையில் இருந்து வெளிவருவோம்.

- Advertisement -