வீட்டில் இருக்கும் கெட்ட சக்தி விலக பரிகாரம்

sivan7
- Advertisement -

வீட்டில் தேவைக்கு ஏற்ப எல்லாமே இருக்கிறது. தேவையை பூர்த்தி செய்து கொள்ளும் அளவு பணமும் இருக்கிறது. ஆனால் வீட்டில் உள்ளவர்களுக்கு மன நிம்மதி இல்லை, சந்தோஷம் இல்லை. வீட்டில் நுழைந்தாலே ஏதோ ஒரு கெட்ட வாடை. இரவில் நல்ல தூக்கம் வருவது இல்லை. ஆனால் வீட்டை சுத்த பத்தமாக வைத்திருக்கின்றோம்.

தினமும் விளக்கு ஏற்றி ஊதுவத்தி ஏற்றி வழிபாடு செய்கின்றோம். ஆனால் இந்த இறை நறுமணத்தையும் தாண்டி ஒரு கெட்ட வாடை வீட்டில் இருப்பதாக நீங்கள் உணர்ந்தால் இந்த பரிகாரம் உங்களுக்காக தான். அப்படி உங்கள் வீட்டில் பாசிட்டிவ் எனர்ஜியை குறைக்கும் அளவுக்கு, நெகட்டிவ் எனர்ஜி அதிகமாக இருக்கும் பட்சத்தில் அதை உடனடியாக சரி செய்து விட வேண்டும். அதற்காகத்தான் இந்த ஆன்மீகம் சார்ந்த பரிகாரம்.

- Advertisement -

வீட்டில் இருக்கும் கெட்ட சக்தி விலக

வாரத்தில் இரண்டு முறையாவது உங்களுடைய வீட்டை கல் உப்பு சேர்த்த தண்ணீரில் துடைத்து சுத்தம் செய்து விட வேண்டும். பிறகு ஒவ்வொரு அறையிலும் மூலை முடுக்குகளில் கற்பூரத்தை தூள் செய்து போட்டு வைக்க வேண்டும். சாமிக்கு ஏற்றக்கூடிய சாதாரண கற்பூரம் இருக்கும். அதை தூள் செய்து ஒவ்வொரு அறையிலும் நான்கு பக்கத்தில் இந்த கற்பூரத்தூளை தூவி விடுங்கள்.

பிறகு வீடு முழுவதும் விபூதி வாசனை குங்கும வாசனை நிறைந்து இருக்க வேண்டும். அதற்கு நீங்கள் முதலில் நல்ல தாழம்பூ குங்குமம் கொஞ்சம் வாங்கிக் கொள்ள வேண்டும். நல்ல நறுமணம் நிறைந்த விபூதி கடைகளில் கிடைக்கின்றது அதையும் வாங்கிக் கொள்ளுங்கள். விபூதி என்பது சிவன் அம்சம் கொண்டது. குங்குமம் சக்தி அம்சம் கொண்டது. இதை ஒரு சின்ன கிண்ணத்தில் கொட்டி உங்களுடைய வீட்டில் வரவேற்பறையில் வைத்து விட வேண்டும்.

- Advertisement -

ரொம்பவும் பெரிய வீடாக இருக்கும் பட்சத்தில் பூஜை அறை, வரவேற்பறை, படுக்கை அறையில் கூட வைக்கலாம். தவறு கிடையாது. இப்படி விபூதியும் குங்குமமும் சேர்ந்த வாசனை உங்கள் வீடு முழுவதும் நிரம்பி இருக்கும் பட்சத்தில் வீட்டில் இருக்கும் நெகட்டிவ் எனர்ஜியானது சீக்கிரம் வீட்டை விட்டு வெளியேறிவிடும்.

பெரிய அளவில் என்னால் பூஜை செய்ய முடியாது, தினமும் வீட்டில் விளக்கு ஏற்ற முடியாது, வாசம் நிறைந்த சாம்பிராணி தூபம் போட முடியாது, வீட்டில் இருக்கும் கணவன் மனைவி குழந்தைகள் எல்லோருமே பிசியாக இருக்காங்க அப்படி என்னும் பட்சத்தில் இந்த பரிகாரத்தை உங்களுடைய வீட்டில் செய்து வைத்து விடுங்கள்.

- Advertisement -

அந்த விபூதி குங்குமம் கொஞ்சம் பழையதான பிறகு அதை எடுத்து நீங்கள் தண்ணீரில் கொட்டி கரைத்து விடுங்கள். அந்த தண்ணீரை செடி கொடிகளுக்கு கீழே ஊற்றி விடுங்கள். மீண்டும் புதுசாக விபூதி குங்குமத்தை அந்த கிண்ணத்தில் கொட்டி வீட்டில் வைக்க வேண்டும். இதே போல மூன்று மாதம் தொடர்ந்து உங்களுடைய வீட்டில் இந்த விபூதி குங்குமத்தின் வாசம் வீசத் தொடங்கி விட்டால், இறைசக்தி உங்கள் வீட்டிற்குள் வந்து விடும்.

இதையும் படிக்கலாமே: கோவிலுக்கு செல்லும்போது பெண்கள் எந்த புடவை கட்டலாம்?

வீட்டில் இருக்கும் அந்த துர்நாற்றம் வீட்டை விட்டு வெளியேறிவிடும். பிறகு குடும்பத்தில் மன நிம்மதி பிறக்கும். இரவில் நல்ல தூக்கமும் வரும் முயற்சி செய்து பாருங்கள். வீட்டில் இறையருள் நிறைந்திருக்க எளிமையான டிப்ஸ் தேவை என்பவர்களுக்காக இந்த ஆன்மீக பதிவு.

- Advertisement -