- Advertisement -

10 நாளில் நினைத்தது நடக்க கல் உப்பு பரிகாரம்

நம் மனதில் நினைக்கக்கூடிய விஷயங்கள் எல்லாம் வரிசையா, நல்லபடியாக நடக்க தொடங்கி விட்டால், சந்தோஷத்தில் பிறகு வரக்கூடிய நாட்கள் எல்லாமே நமக்கு நல்லபடியாக தான் செல்லும். அடுத்தடுத்து தொடர் வெற்றிகள் குவியும். ஆனால் ஒருமுறை வாழ்க்கையில் சரிவு தொடங்கி விட்டால், அந்த சோகம் நம்மை மீண்டும் மீண்டும் வாழ்க்கையில் ஜெயிக்க விடாது.

நாம் தோற்றுக் கொண்டே இருக்கிறோம். நமக்கு வெற்றி கிடைக்காது, நம்மால் எதையும் சாதிக்க முடியாது, நமக்கு மட்டும் நல்லது நடக்காது, என்று நமக்குள்ளேயே ஒரு தாழ்வு மனப்பான்மை வந்துவிடும். உங்களுக்கும் இதே போல பிரச்சினை இருக்கிறதா. வாழ்க்கையில் நீங்கள் நினைத்த நல்லது ஒன்று கூட சரியாக நடக்கவில்லையா. இந்த ஆன்மீகம் உப்பு பரிகாரத்தை செய்யுங்கள். பத்தே நாளில் நீங்கள் நினைத்த நல்லது உங்களுக்கு நடந்து விடும்.

- Advertisement -

பத்து நாளில் நினைத்தது நடக்க

இந்த பரிகாரத்தை செய்ய நீங்கள் சூரிய உதயத்திற்கு முன்பாக எழுந்து விட வேண்டும். காலை 5:00 மணிக்கு எழுந்தால் கூட போதும். 5:30 மணிக்கு எழுந்தாலும் போதும். 6:00 மணிக்கு முன்பாக இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். அதாவது சூரிய உதயத்திற்கு முன்பு இந்த பரிகாரத்தை செய்தால் தான் உடனடி பலன் கிடைக்கும்.

இந்த பரிகாரத்திற்கு உங்களுக்கு இரண்டு கைப்பிடி கல் உப்பு போதும். அதை எடுத்து இரவு தூங்கும் போது உங்க பக்கத்திலேயே வச்சுக்கோங்க. காலையில் கண்விழித்த உடன் இந்த கல்லுப்பை பாருங்க. இரண்டு கையில், இரண்டு கைப்பிடி கல் உப்பை அப்படியே அள்ளிக் கொள்ளுங்கள். கல் உப்பு நிரம்ப இருக்கும் இரண்டு கைகளையும் உங்க தொடை மேல் வைத்துக் கொள்ளுங்கள். ‘எனக்கு நல்லது செய்த பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி’ என்று முதலில் சொல்லுங்கள்.

- Advertisement -

உதாரணத்திற்கு இப்ப நீங்க நல்ல வேலைக்காக காத்துக் கொண்டிருக்கிறீர்கள். ‘நான் விரும்பிய வேலை எனக்கு கிடைத்து விட்டது. நான் எதிர்பார்த்த சம்பளத்தில் எனக்கு நல்ல வேலை கிடைத்துவிட்டது’ என்று சொல்லுங்கள். இது உதாரணத்திற்காக சொல்லக் கூடிய விஷயம். அதுவே உங்களுக்கு ஏதாவது கடன் பிரச்சனை இருக்கிறது என்றால், நான் வாங்கிய கடனை எல்லாம் திருப்பிக் கொடுத்து விட்டேன் இந்த பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி, என்ற வார்த்தையை சொல்லவும்.

கணவன் மனைவி ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றால் நானும் என் கணவரும் ஒன்றாக இந்த உலகத்தில் சந்தோஷமாக வாழ்கின்றோம் என்று சொல்லுங்கள். இப்படி, எந்த கோரிக்கையை வைத்தாலும், நன்றி என்ற வார்த்தையை பிரபஞ்சத்துக்கு சொல்ல நீங்க மறக்கக்கூடாது. இப்படி நடக்காத ஒரு நல்ல விஷயத்தை நடந்ததாக கற்பனை செய்து அதை சொல்ல வேண்டும். இந்த பரிகாரத்தில் மறைந்திருக்கும் ரகசியம் அதுதான்.

- Advertisement -

நீங்க எந்த நல்லதை நடக்காது என்று நினைத்துக் கொண்டிருந்தீர்களோ, அந்த நல்லது நடந்து விட்டதாக கையில் கல் உப்பை வைத்துக்கொண்டு பிரபஞ்சத்திற்கு நன்றி சொல்லி வேண்டும்போது பத்தே நாட்களில் அந்த நல்ல காரியம் உங்களுக்கு நடக்கும். ஐந்து நிமிடம் இப்படி மன உறுதியோடு பிரார்த்தனை செய்து, எழுந்து போய் இந்த கல்லுப்பை தண்ணீரில் கரைத்து விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: திரிபுஷ்கர யோகம் தரும் நன்மைகள்

அந்த தண்ணீரை சிங்கிள் கொட்டி விடுங்கள். அவ்வளவுதான் பரிகாரம். இதே போல தினமும் இந்த பரிகாரத்தை செய்து வந்தால் உங்கள் வாழ்க்கையில் நிச்சயம் நல்லது நடக்கும். உங்களுக்குள் இருக்கும் தாழ்வு மனப்பான்மை நீங்கும். உங்களாலும் எல்லாம் செய்ய முடியும் என்ற நம்பிக்கையும் பிறக்கும். நல்லது நடக்கும்.

- Advertisement -