- Advertisement -

செவ்வாய்க்கிழமை கடன் தீர குளிக்கும் முறை

அந்த காலத்தில் எல்லாம், கடன் வாங்க கூடாது. போலீஸ் ஸ்டேஷன் போகக்கூடாது. கோர்ட்டு படி மிதிக்க கூடாது என்று சொல்லுவார்கள். செய்யக்கூடாத தவறுகளில் இந்த மூன்றும் அடக்கம். ஆனால் இப்போது இந்த மூன்று விஷயங்களும் சர்வ சாதாரணமாகிவிட்டது. இந்த மூன்று பிரச்சனைகளுக்கும் போகாமல் இருந்தாலே போதும். நம்முடைய குடும்பம் நிம்மதியாக இருக்கும்.

இந்த மூன்று பிரச்சனை வாழ்க்கையில் வராமல் இருக்கணும். அதற்கு உண்டான வழியை மட்டும் பாருங்கள். அதற்கு உண்டான வழியை மட்டும் பின்பற்றி வாழுங்கள். சரி, இப்போது என்ன தான் சொன்னாலும் சரி, இந்த கடனை வாங்காமல் வாழ முடியவில்லை. கடன் கட்ட வேண்டிய சூழ்நிலை எல்லா மனிதர்களுக்கும் இருக்கிறது.

- Advertisement -

இந்த பிரச்சனையில் இருந்து தப்பிக்க என்ன செய்வது. ஒரு எளிமையான சக்தி வாய்ந்த பரிகாரம் இருக்கிறது. தொடர்ந்து செவ்வாய்க்கிழமை நீங்கள் இதை செய்தால் கடன் இல்லாமல் வாழலாம். நிச்சயம் இதை எழுதி வச்சுக்கோங்க.

கடன் தீர செவ்வாய்க்கிழமை பரிகாரம்

செவ்வாய்க்கிழமை காலை 6:00 மணியிலிருந்து 7:00 மணிக்குள் தலைக்கு குளித்து விட வேண்டும். ஒரு கைப்பிடி கல்லுப்பை கையில் எடுத்துக் கொள்ளுங்கள். கடன் கரைந்து போக வேண்டும் என்று சொல்லி அந்த கல்லுப்பை குளிக்கின்ற தண்ணீரில் கரைத்து விடுங்கள். அந்த உப்பு தண்ணீரிலேயே தலைக்கு குளித்து விடுங்கள். முருகப்பெருமானை வேண்டி குளியுங்கள்.

- Advertisement -

குல தெய்வத்தை வேண்டி குளியுங்கள். அது உங்களுடைய விருப்பம். இப்படி குளித்து முடித்துவிட்டு பூஜை அறையில் வந்து குலதெய்வத்தை வழிபாடு செய்யவும். 2 கை கூப்பி கும்பிட்டால் கூட போதும். அதன் பிறகு செவ்வாய்க்கிழமை மதியம் 1:15 மணிக்கு உங்கள் கையால் கொள்ளு தானம் செய்ய வேண்டும். குதிரைக்கு கொள்ளு வாங்கி கொடுக்கலாம்.

பறவைகளுக்கு இரையாக கொள்ளு போடலாம், அல்லது ஏதாவது முதியோர் இல்லம், குழந்தைகள் காப்பகத்திற்கு கொள்ளு வாங்கி தானம் கொடுக்கலாம். அதை அவர்கள் சுண்டல் செய்து சாப்பிட பயன்படுத்திக் கொள்வார்கள். இப்படி செவ்வாய்க்கிழமை, குளிகை நேரமும், செவ்வாய் ஹோரையும் சேர்ந்து இருக்கக்கூடிய இந்த நேரத்தை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அந்த 1:15தில் இருந்து 1:30 மணிக்குள் இந்த தானத்தை கொடுக்கும் போது பலன் அபரிவிதமாக கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு மனிதனுக்கு வாழ்க்கையில் கடனை கொடுக்கக்கூடிய கிரகம் கேது. கேது பகவானுக்கு உரிய தானியம் கொள்ளு. அதனால் இந்த கொள்ளு தானம் செய்யப்பட வேண்டும் என்பது சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ள பரிகாரம்.

இதையும் படிக்கலாமே: பெண்கள் முக வசீகரம் பெற மந்திரம்

நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையோடு வாரம் தோறும் வரும் செவ்வாய்க்கிழமையில் மேல் சொன்ன விஷயங்களை பின்பற்றி வந்தாலே கடன் வாங்கக்கூடிய சூழ்நிலைகள் குறையும். வாங்கிய கடனை திருப்பி அடைக்க கூடிய சூழ்நிலைகள் உருவாகும். மீண்டும் மீண்டும் கடன் வாங்காமல் இருப்பீங்க. எளிமையான இந்த ஆன்மீகம் பரிகாரத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் மட்டும் பின்பற்றி பலன் அடையுங்கள்.

- Advertisement -