வீட்டில் கஷ்டம் வர காரணம்

annapoorani
- Advertisement -

ஒரு வீட்டில் கஷ்டம் வருவதற்கு எத்தனையோ காரணங்கள் இருக்கலாம். ஆனால் நம்முடைய அலட்சியத்தின் காரணமாக, நம்முடைய குடும்பத்தில் ஒரு சின்ன கஷ்டம் கூட வந்து விடக்கூடாது. அந்த வகையில் குடும்பத் தலைவிகள் சமையலறையில் பயன்படுத்தும் பாத்திரத்தை மூலமாக கூட குடும்பத்தில் கஷ்டம் வரும் என்று சொல்லப்பட்டுள்ளது.

இந்த மாதிரியான பாத்திரங்கள் உங்கள் சமையலறையில் நிறைய இருக்கிறதா என்று ஒரு முறை பாருங்கள். அந்த பாத்திரத்தை தூக்கி உடனே தூர போடுங்கள். உங்கள் கஷ்டமும் உடனே தூர சென்று விடும். நீங்க தூக்கி தூர போட வேண்டிய அந்த பாத்திரம் என்ன ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.

- Advertisement -

குடும்ப கஷ்டம் நீங்க

நிறைய வீடுகளில், சமைப்பதற்கு இரும்பு சம்பந்தப்பட்ட பாத்திரங்களை பயன்படுத்துவார்கள். அது தவறு கிடையாது. ஆனால் சமையல் அறையில் உடைந்து போன, துருப்பிடித்த இரும்பு பாத்திரங்கள் இருக்கவே கூடாது. சில இரும்பு கடாயில் ஒரு பக்கம் கைப்பிடி இருக்கும். ஒரு பக்கம் கைப்பிடி இருக்காது. சில இரும்பு கடாய் ஓரத்தில் இரண்டாக உடைந்து கிடக்கும். பாத்திரம் தேய்க்கும் போது கூட அந்த இடத்தில் அடிக்கடி கையை கிழித்துக்கொள்வோம்.

அப்படி இருக்கும் இரும்பு பாத்திரத்தை கூட அப்படியே வைத்து சமைக்க பயன்படுத்துவார்கள். இப்படிப்பட்ட உடைந்து போன இரும்பு பாத்திரங்களை வீட்டில் பயன்படுத்தினால், கஷ்டங்கள் தீராது என்று சொல்லப்பட்டுள்ளது. அதேபோல பயன்படுத்தாத இரும்பு பாத்திரமாக இருந்தாலும், அதில் துருப்பிடித்து இருக்கக் கூடாது.

- Advertisement -

நிறைய பேர் வீடுகளில் ஸ்லாப்புக்கு மேலே துருப்பிடித்த இரும்பு பாத்திரங்களை போட்டு வைத்திருப்பார்கள். அதையெல்லாம் முதலில் எடுத்து பழைய இரும்பு சாமான் கடைக்கு போட்டு விடுங்கள். அப்படி இல்லை என்றால் அந்த பாத்திரங்களை எல்லாம் எடுத்து நன்றாக துடைத்து அதன் மேலே நல்லெண்ணெயோ, தேங்காய் எண்ணெயோ தடவி அதை துருப்பி பிடிக்காத படி செய்து மீண்டும் எடுத்து வைப்பது குடும்பத்திற்கு நல்லது. இரும்பு சனி பகவானுக்கு உரிய உலோகம் சொல்லப்பட்டுள்ளது.

கூடுமானவரை சமையலறையில் அலுமினிய பாத்திரத்தை புழங்க வேண்டாம். எவர்சில்வர் பாத்திரத்தில் சமைக்கலாம். அப்படி இல்லை என்றால் நல்ல இரும்பு பாத்திரத்தில் சமையல் செய்யலாம். தவறு கிடையாது. அதேபோல உங்களுடைய வீட்டில் சமையல் அறையில் எந்த அளவுக்கு செம்புப் பாத்திரங்களை வாங்கி வைத்து புழங்குகிறீர்களோ, அந்த அளவுக்கு உங்களுடைய குடும்பத்தில் நல்லது நடக்கும்.

- Advertisement -

செம்பு, செவ்வாய் பகவானுக்கு உரியதாக சொல்லப்பட்டுள்ளது. செம்பு பாத்திரம் பளபளப்பாக இருந்தால் உங்களுக்கு குலதெய்வத்தின் அருள் கிடைக்கும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. செம்பு பாத்திரங்களும் கருத்துப் போய் இருக்கக் கூடாது. செம்பு பாத்திரத்தை தேய்த்து எப்போதுமே பள பளப்பாக வைத்திருக்க வேண்டும். நிறைய பேர் வீடுகளில் பெரிய செம்பு அண்டா இருக்கும்.

அதை தூக்கி பரண் மேல வச்சிருப்பாங்க. செம்பு பாத்திரங்களை எப்போதும் பளபளப்பாக வைத்துக் கொண்டால், உங்கள் குடும்பமும் பளபளப்பாக எப்போதும் சந்தோஷமாக இருக்கும் என்பது நம்பிக்கை. இதெல்லாம் புது கதையாக இருக்கிறது என்று சிலபேர சிந்திக்கலாம். ஆனால் இதற்கு பின்னால் உண்மைகள் மறைந்திருக்கிறது.

இதையும் படிக்கலாமே: கடன் தீர செய்ய வேண்டிய பரிகாரம்

உங்களுடைய வீட்டில் பிரச்சனைகள் இருக்கிறது. மேல் சொன்ன படி துருப்பிடித்த இரும்பு பாத்திரமும் இருக்கிறது, கருத்துப்போன செம்பு பாத்திரமும் இருக்கிறது என்றால், அந்த இரண்டிலும் மாற்றத்தை கொண்டு வந்து பாருங்கள். உங்கள் குடும்ப கஷ்டத்திற்கும் நிச்சயம் விமோசனம் கிடைக்கும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -