- Advertisement -

குரு பெயர்ச்சி அன்று சொல்ல வேண்டிய மந்திரம்

குரு பார்க்கின் கோடி நன்மை என்ற வார்த்தையை சொல்ல நாம் கேள்விப்பட்டிருப்போம். நாளை தினம் மே 1, சித்திரை மாதம் 18 ஆம் தேதி குரு பகவான் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு பயணம் ஆகிறார். இந்த பெயர்ச்சியானது அனைத்து ராசியினருக்கும் பலவிதமான மாற்றங்களை ஏற்படுத்த உள்ளது. அது சில ராசியினருக்கு நற்பலனாகவும் சிலருக்கு கெடுபலனாகவும் அமையும்.

இந்த சூழ்நிலையில் நாளை குரு பெயர்ச்சி இப்போது குரு பகவானின் இந்த ஒரு மந்திரத்தை சொல்லி வழிபட்டால் நமக்கு வரவிற்கும் எப்பேற்பட்ட கெட்ட நேரத்தையும் நல்ல நேரமாக மாற்றிக் கொள்ளக் கூடிய வாய்ப்பை பெறலாம். அது என்ன மந்திரம் எப்படி சொல்ல வேண்டும் என்பதை எல்லாம் மந்திரம் குறித்த இந்த பதிவில் நாம் தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

குருபகவானின் அருளை பெற சொல்ல வேண்டிய மந்திரம்

கிரகங்களில் குரு பகவானின் பெயர்ச்சியானது அதி முக்கியத்துவம் வாய்ந்ததாக சொல்லப்படுகிறது. இவர் ஒரு ராசியில் நல்ல நிலையில் இருந்தால் அந்த ராசிக்காரர்கள் பணம், புகழ், அந்தஸ்து என அனைத்திலும் முன்னிலையில் இருப்பார்கள். அப்படியான குரு பகவானின் இந்த பெயர்ச்சியினால் அனைவரும் நற்பலனையே பெற இந்த ஒரு மந்திரத்தை சொல்லலாம் என்று சொல்லப்படுகிறது.

இந்த மந்திரத்தை நாளைய தினம் எமகண்டம் ராகு காலம் நேரம் தவிர்த்து எப்போது வேண்டுமானாலும் சொல்லலாம். இதற்கு முதலில் உங்கள் வீட்டு பூஜை அறையை சுத்தம் செய்து விட்டு ஒரு தீபம் ஏற்றி வைத்து விடுங்கள். நல்ல மணம் கமழும் ஊதுபத்திகளை ஏற்றி வைத்து விட்டு மஞ்சள் நிற பூக்களை கையில் வைத்துக் கொள்ளுங்கள். இப்போது கீழ் வரும் இந்த மந்திரத்தை சொல்லுங்கள்.

- Advertisement -

குரு காயத்திரி மந்திரம்

ஓம் விருஷபத் வஜாய வித்மஹே க்ருணி
ஹஸ்தாய தீமஹி
தந்நோ குருஹ் ப்ரசோதயாத்

இந்த மஞ்சள் நிற பூக்களை உங்கள் பூஜை அறையில் இருக்கும் ஒவ்வொரு படத்திற்கும் ஒவ்வொரு பூவாக வைத்துக் கொண்டே இந்த மந்திரத்தை சொல்லுங்கள். இதை சொல்லும் பொழுது குருபகவானை மனதார நினைத்துக் கொள்ளுங்கள். இந்த மந்திரத்தை குறைந்தது 108 முறையாவது சொல்வது நல்ல பலனை தரும்.

பூஜை அறையில் உள்ள படங்களுக்கு பூக்களை வைத்த பிறகு மீதமுள்ள பூக்களை உங்கள் கைகளில் வைத்துக் கொண்டு பூஜையறையில் அமர்ந்து விடுங்கள். அப்போது நீங்கள் கிழக்கு அல்லது வடக்கு பார்த்து அமர்ந்து கொள்ளுங்கள். அப்போதும் இந்த மந்திரத்தை சொல்லிக் கொண்டே இருங்கள்.

இதையும் படிக்கலாமே: குடும்பத்திற்கு நல்லது நடக்க காளி தேவி வழிபாடு

இதை மொத்தமாக 108 முறை சொன்ன பிறகு கற்பூர தீபாராதனை காட்டி குரு பகவானை மனதார வேண்டிக் கொண்டு பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள். நாளைய தினத்தில் நீங்கள் சொல்லும் இந்த மந்திரமும் இந்த வழிப்பாடும் உங்களுக்கு குரு பகவானின் பரிபூரண அருளை முழுமையாக பெற்று தரும் என்று சொல்லப்படுகிறது. நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையுடன் இந்த மந்திர வழிபாட்டை செய்து பலன் அடையுங்கள்.

- Advertisement -