- Advertisement -

இன்று திரும்பிய திசை எல்லாம் ஒலிக்கும் மிகப் பெரிய பிரச்சனை எனில் அது கடன் தான். கடன் இல்லாத ஒரு மனிதரைக் கூட இன்று நாம் காண முடியாது அது சிறிய அளவிலாக இருக்கலாம் அல்லது பெரிய அளவாக இருக்கலாம். எப்படியாயினும் எல்லோரும் கடன் என்னும் இந்த அரக்கனிடம் சிக்கி தவித்துக் கொண்டு தான் இருக்கிறோம். இந்த கடன் தீர பல்வேறு வழிமுறைகள் பூஜைகள் பரிகாரங்கள் இருக்கிறது. ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் பிரதோஷ நாளில் இந்த கடன் தீர என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி தான் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

கடன் தீர பிரதோஷ தின பரிகாரம்

சிவபெருமானின் அருளை முழுமையாக பெறவும் நம்முடைய கர்ம வினைகள் நீங்கி நிம்மதியாக வாழவும் பிரதோஷ வழிபாடு மிகவும் சிறந்தது. பிரதோஷ தினத்தில் விரதம் இருந்து வழிபாடு செய்தால் நம்முடைய பிறவி கடனை தீரும் என்று சொல்லப்படுகிறது. அத்தகைய அதி அற்புதமான நாளில் இந்த கடன் தீர நாம் ஒரு எளிமையான பரிகாரத்தை எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

பிரதோஷ நாளில் பிரதோஷம் வேளையான 4:30 லிருந்து 6 வரையிலான காலத்தில் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். அதற்கு நீங்கள் பிரதோஷ வேளையில் சிவாலயத்திற்கு செல்ல வேண்டும். அப்படி செல்லும் போது வீட்டில் இருந்து 16 மிளகை கையில் எடுத்துச் செல்லுங்கள். முதலில் சிவ ஆலயத்திற்கு சென்று சிவ தரிசனத்தை கண்ணாற கண்டு வழிபாடு செய்து விடுங்கள்.

அதன் பிறகு ஆலயத்தை வலம் வந்து சிறிது நேரம் சிவாலயத்தில் அமர்ந்து உங்களுடைய கடன் பிரச்சனைகள் தீர வேண்டும் என்று மனதார சிவபெருமானிடம் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். இந்த நேரத்தில் சிவபெருமான் மிகவும் சந்தோஷமான மனநிலையில் இருப்பதாகவும் இந்த வேலையில் நான் கேட்கும் அனைத்தையும் அவர் அருள்வார் என்பது நம்பிக்கை.

- Advertisement -

இப்படி வேண்டி முடித்த பிறகு வீட்டிற்கு வரும் முன் நந்தி பகவான் முன்பு நின்று இந்த 16 மிளகை உங்கள் வலது கையில் வைத்துக் கொண்டு இடது கையால் மூடி ஓம் நமசிவாய என்ற நாமத்தை மூன்று முறை சொல்ல வேண்டும். அதன் பிறகு இந்த மிளகை உங்கள் தலையை சுற்றி இடமிருந்து வளமாக சுற்றுங்கள். இப்படி சுற்றும் போது நீங்கள் கிழக்கு நோக்கி நின்று கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: சிவன் அருள் பெற பிரதோஷ நாளில் செய்ய வேண்டியது

அதன் பிறகு இந்த மிளகை நான்கு திசைகளிலும் நான்கு மிளகை தூக்கி வீசி விடுங்கள். இவையெல்லாம் செய்த பிறகு மறுபடியும் ஒரு முறை சிவாலயத்தை சுற்றி வந்து வீட்டிற்கு வந்து விடுங்கள். இந்த பரிகாரத்தை தொடர்ந்து மூன்று மாதங்கள் செய்யும் போது எப்பேர்பட்ட கடனும் அடைவதற்கான வாய்ப்பு உருவாகும் என்று சொல்லப்படுகிறது. நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையுடன் செய்து பலன் பெறலாம்

- Advertisement -