- Advertisement -

இன்றைய காலத்தில் பலரும் கடனை வாங்கியதால் பல பிரச்சனைகளை சந்தித்துக் கொண்டு இருக்கிறார்கள். இருப்பினும் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை என்பது சற்றும் கூட குறையாமல் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. என்னதான் கஷ்டப்பட்டு சம்பாரித்தாலும் ஏதாவது ஒரு ரூபத்தில் பிரச்சனை என்பது உண்டாகி அதனால் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலையும் ஏற்படுகிறது. அந்த கடனை அடைப்பதற்காக பல வழிகளில் பாடுபட்டாலும் வட்டி கட்டுவதற்கு மட்டுமே தான் சம்பாதிக்க முடிகிறதே தவிர்த்து கடனை அடைப்பதற்குரிய வழிகளும் கிடைப்பதில்லை.

இன்னும் சிலருக்கோ வட்டி கட்ட கூட வழி இல்லாமல் வட்டி கட்டுவதற்காக கடன் வாங்க வேண்டிய சூழ்நிலையும் உண்டாகிவிடும். அப்படி கடன் என்ற அந்த மூன்றெழுத்து வார்த்தையால் வாழ்க்கையை இழந்து நிற்பவர்களும் கடனில் இருந்து வெளிவர வேண்டும் என்று நினைப்பவர்களும் கால பைரவரை நினைத்து எந்த முறையில் தீபம் ஏற்ற வேண்டும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

- Advertisement -

காலத்தால் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் அனைத்தையும் தீர்ப்பதற்கும் நம்மை பாதுகாப்பதற்காகவுமே அவதாரம் எடுத்தவர் தான் கால பைரவர். அப்படிப்பட்ட காலபைரவரை நாம் வழிபடுவதன் மூலம் நம் வாழ்க்கையில் இருக்கக்கூடிய பலவகையான பிரச்சனைகளும் தீரும். அந்த காலபைரவரை அஷ்டமி தினங்களில் தான் வழிப்பட வேண்டும் என்று பலரும் நினைப்பார்கள். ஆனால் அவரை அனுதினமும் நாம் நினைத்து மனதார வழிபடுவதன் மூலம் அவரின் அருளை நம்மால் பரிபூரணமாக பெற முடியும் என்பதுதான் உண்மை. அப்படிப்பட்ட காலபைரவரை கடன் பிரச்சினை தீர எப்படி வீட்டிலேயே வழிபடுவது என்று பார்ப்போம்.

இந்த வழிபாட்டை நாம் ஞாயிற்றுக்கிழமை அன்று ஆரம்பிக்க வேண்டும். இந்த வழிபாட்டிற்கு நமக்கு புதிதாக ஒரு அகல் விளக்கு வேண்டும். மாலை 6 மணிக்கு வீட்டு பூஜை அறையில் ஒரு சிறிய தாம்பாளத்தை எடுத்து அதற்கு மஞ்சள் குங்குமம் வைத்துவிட்டு, ஒரு அகல் விளக்கை எடுத்து அதற்கும் மஞ்சள் குங்குமம் வைத்து அந்த தாம்பாளத்தின் மேல் வைக்க வேண்டும். பிறகு ஒரு மஞ்சள் அல்லது வெள்ளை நிற துணியை எடுத்து அதில் 27 என்ற எண்ணிக்கையில் மிளகை வைத்து மூட்டையாக கட்ட வேண்டும்.

- Advertisement -

இந்த அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி நாம் மூட்டையாக கட்டிய மிளகை அதில் வைத்து அதை திரியாக பயன்படுத்தி தீபம் ஏற்ற வேண்டும். இந்த தீபத்தை ஏற்றும் பொழுது கால பைரவருக்குரிய நாமங்களையும், மந்திரங்களையும் கூறிக் கொண்டு ஏற்றுவது மிகவும் சிறப்பு. இவ்வாறு ஏற்றிய பிறகு இந்த தீபத்தை பார்த்தவாறு நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய கடன் பிரச்சினைகள் தீரவேண்டும் என்றும் அதற்கு நல்ல வழியை கால பைரவர் காட்ட வேண்டும் என்றும் மனதார வேண்டிக் கொள்ள வேண்டும். இயன்றவர்கள் காலபைரவரின் 108 போற்றிகள் கூட கூறலாம்.

இவ்வாறு இந்த தீபத்தை கிழக்கு நோக்கி தான் ஏற்ற வேண்டும். இந்த தீபம் அதுவாகவே குளிர வேண்டும். நாம் குளிர வைக்க கூடாது. இப்படி தினமும் மாலை 6 மணிக்கு வீட்டு பூஜை அறையில் இந்த தீபத்தை ஏற்றி வழிபட கடன் பிரச்சனை அனைத்தும் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும். இந்த தீபத்தை தொடர்ச்சியாக 27, 54, 81 என்ற எண்ணிக்கையில் நம்முடைய கடன் தொகைக்கு ஏற்றவாறு தொடர்ச்சியாக ஏற்ற வேண்டும். பெண்கள் ஏற்றுவதாக இருந்தால் அந்த ஐந்து நாட்களை மட்டும் தவிர்த்து விட்டு அவர்களுக்கு பதிலாக வேறு யாராவது வீட்டு பூஜை அறையில் இந்த தீபத்தை ஏற்றலாம்.

இதையும் படிக்கலாமே: நினைத்தது நினைத்தபடி நடக்க பரிகாரம்

முழு நம்பிக்கையுடன் காலபைரவரை நினைத்து இந்த தீபத்தை ஏற்றுபவர்களுடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய கடன் படிப்படியாக குறைந்து கடனற்ற வாழ்க்கையை வாழ்வார்கள்.

- Advertisement -