- Advertisement -

கழுத்தை நெரிக்கும் கடன் பிரச்சனையா? உங்கள் ராசிக்கு தீராத கடன் தீர வணங்க வேண்டிய தெய்வம் என்னவென்று தெரியுமா?

எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும் சமாளித்து விடக் கூடிய தைரியத்தை கொடுக்குமாறு இறைவனை வழிபடுவது தான் சிறந்த முறை என்று சாஸ்திரம் கூறுகிறது. பிரச்சனைகளே இல்லாத வாழ்வை கொடு என்று கேட்பது தவறு. எவ்வளவு பிரச்சனை வந்தாலும், அதனை நான் சுலபமாக சமாளித்து விடும் அளவிற்கு மனதை பக்குவப்படுத்து என்று வேண்டலாம். நமக்கு இருக்கும் மிகப்பெரிய கடன் பிரச்சனைகளை கூட சமாளிக்கக்கூடிய தைரியத்தை கொடுக்கும் கடவுள் உங்கள் ராசிக்கு எந்த கடவுள்? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் பார்க்க இருக்கிறோம், வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

மேஷம்:

மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் பலம் அதிகரிக்க வேண்டும். ஆளும் கிரகம் ஆக இருக்கும் இந்த செவ்வாயின் உடைய ஆதிக்கம் வலுவானால் உங்களுடைய கடன் பிரச்சினைகள் விரைவில் தீரும். அதற்கு நீங்கள் திங்கட்கிழமை தோறும் சிவபெருமானை வில்வ இலைகளால் அர்ச்சித்து வழிபட்டு வாருங்கள், எத்தகைய உங்கள் தீராத கடன் பிரச்சினையும் நொடியில் தீரும்.

ரிஷபம்:

ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு சுக்கிர பலம் அதிகம் தேவை. சுக்கிர பகவான் சுக போக வாழ்க்கையை கொடுக்கக் கூடியவர். இவரின் பலம் அதிகரிக்க செய்ய, நீங்கள் மஹா லட்சுமியை வணங்க வேண்டும். வெள்ளிக்கிழமை தோறும் மகாலட்சுமிக்கு நெய் தீபம் ஏற்றி, தாமரை மலர் வைத்து வழிபட்டு வர எத்தகைய கடன் தொல்லைகளும் எளிதில் நீங்கும்.

மிதுனம்:

மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு புதன் பலம் அதிகரிக்க எல்லா பிரச்சனைகளும் தீர்வுக்கு வரும். உங்கள் ராசியை ஆளக் கூடிய கிரகமாக இருப்பவர் புதன் பகவான். எனவே புத பகவான் அருள் பெற, நீங்கள் நாராயணனை வணங்கி வர வேண்டும். சனிக்கிழமைகளில் பெருமாள் கோவிலுக்கு சென்று துளசி மாலை சாற்றி வழிபட்டு வாருங்கள் எல்லா கடனும் தீரும்.

கடகம்:

கடக ராசியில் பிறந்தவர்களுக்கு சந்திர பலம் அதிகரிக்க வேண்டும். ஆளும் கிரகமான சந்திரன் பலத்தை அதிகரிக்க செய்தால் உங்களுடைய எவ்வளவு பெரிய பிரச்சனையும், சிறிய பிரச்சனையாக உங்களுக்கு தோற்றமளிக்கும். அந்த அளவிற்கு மன பக்குவத்தை கொடுக்கக் கூடிய சந்திர பலம் பெற கவுரி அம்மனை வழிபட்டு வாருங்கள்.

சிம்மம்:

சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு நவ கிரகங்களில் முதன்மையாக விளங்கும் சூரியன் பலம் அதிகரிக்க கடன் பிரச்சினைகள் எளிதாக தீர்வுக்கு வரும். இதற்காக நீங்கள் திங்கட் கிழமைகளில் சோம வார விரதம் இருந்து சிவ பெருமானுக்கு வில்வ இலைகளால் அர்ச்சனை செய்து வழிபட்டு வரலாம்.

கன்னி:

கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு உங்கள் ராசி அதிபதியாக விளங்கும் புத பகவானின் பலத்தை அதிகரிக்க செய்தால் எல்லா வளங்களையும், நலன்களையும் பெறலாம். முக்கியமாக கடன் பிரச்சினைகள் நீங்க நீங்கள் சனிக் கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாற்றி வழிபடலாம். அதே போல பெருமாள் கோவிலுக்கு சென்று துளசி தீர்த்தம் பருகி வர எல்லா கடன்களும் அடையும்.

துலாம்:

துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு உங்கள் ராசியை ஆளுமை செய்யும் சுக்கிர பலத்தை அதிகரிக்க செய்ய வேண்டும். சுக்கிர பலம் அதிகரிக்க மகாலட்சுமியை வழிபட வேண்டும் எனவே வெள்ளிக் கிழமைகளில் நெய் விளக்கு ஏற்றி, மகாலட்சுமிக்கு மணமிக்க மலர்களால் அலங்காரம் செய்து, குங்கும அர்ச்சனை செய்து வழிபட்டு வாருங்கள் நீங்காத கடன் தொல்லைகள் நிச்சயம் நீங்கும்.

விருச்சிகம்:

விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு உங்கள் ராசியை ஆளுமை செய்யும் செவ்வாய் பகவான் அருள் பெறுவதற்கு நீங்கள் சிவபெருமானை வழிபட வேண்டும். சிவனருள் இருந்தால் உங்கள் ராசிக்கு மென்மேலும் முன்னேற்றம் உண்டாகும் எனவே எவ்வளவு கடன் பிரச்சினைகள் இருந்தாலும் தொடர்ந்து நெற்றியில் விபூதி இட்டுக் கொண்டு, சிவ வழிபாடு செய்து வாருங்கள் எல்லாமே நன்மையாக நடக்கும்.

தனுசு:

தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு உங்கள் ராசியை ஆளுமை செய்யும் குரு பகவானுடைய அருளைப் பெற்றுக் கொள்ள வேண்டும். குரு அருள் பெற சில அவதாரமாக இருக்கும் தட்சிணாமூர்த்தியை வழிபட வேண்டும். எனவே வியாழக்கிழமை தோறும் குரு வழிபாடும், தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்து வாருங்கள், எத்தகைய தீராத கடன்களும் எளிதில் தீரும்.

மகரம்:

மகர ராசியில் பிறந்தவர்களுக்கு உங்கள் ராசிக்கு அதிபதியாக விளங்கும் சனி பகவானுடைய ஆதிக்கத்தை பெற வேண்டும். சனி அருள் இருந்தால் உங்களை எத்தகைய கடன் பிரச்சினைகளும் அவ்வளவு எளிதில் நெருங்காது. எனவே நீங்கள் அனைத்து வளங்களையும் பெற, சனிக்கிழமையில் சனி பகவான் வழிபாடும், திங்கட்கிழமையில் சிவபெருமான் வழிபாடு செய்து வில்வத்தால் அர்ச்சனை புரிந்து வந்தால் அனைத்து கடன்கள் விரைவாக தீரும்.

கும்பம்:

கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு உங்கள் ராசிக்கு அதிபதியாக விளங்கும் சனி பகவான் ஆதிக்கத்தை அதிகரிக்க செய்ய வேண்டும். நீங்களும் சிவனருள் பெற்று வந்தால் எளிதாக கடன் தொல்லைகளிலிருந்து விடுபடலாம். மேலும் சனிக்கிழமைகளில் எள் தீபம் ஏற்றி, சனி பகவானை வழிபட்டு வாருங்கள், கழுத்தை நெரிக்கும் கடன் பிரச்சனை காணாமல் போகும்.

மீனம்:

மீன ராசியில் பிறந்தவர்களுக்கு உங்கள் ராசியை ஆளுமை செய்யும் குரு பகவான் பலத்தை அதிகரிக்க செய்ய வேண்டும். எனவே குரு அருள் பெற, குரு தட்சிணாமூர்த்தியை வழிபட வேண்டும். வியாழன் கிழமைகளில் குரு தட்சிணாமூர்த்திக்கு குடும்பத்தில் இருக்கும் அனைவரின் பெயரையும் சொல்லி அர்ச்சித்து வாருங்கள், எல்லா கடன்களும் வந்த வழியே திரும்பும்.

- Advertisement -