- Advertisement -
ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagaval

உங்கள் கஷ்டங்கள் தீர்ந்து மன நிம்மதி கிடைக்க இந்த இரண்டு பொருட்கள் மட்டும் போதும்

ஒவ்வொரு குடும்பத்திலும் ஏதாவது ஒரு குறை இருந்து கொண்டுதான் இருக்கும். மனநிறைவான வாழ்க்கையும், மகிழ்ச்சியான குடும்பமும் இவை இரண்டும் சேர்ந்து கிடைத்து விட்டால் அதனை வரம் என்று கூட சொல்லலாம். அவ்வாறு பிரச்சினை இல்லாத இடம் என்று எதுவும் இல்லை. வாழ்க்கைஎன்பததே போராட்டம் நிறைந்ததாக தான் இருக்கும். இவற்றையெல்லாம் கடந்து நமது வாழ்க்கையை மேல் நோக்கி எடுத்துச் செல்வதே ஒவ்வொரு மனிதனின் கடமையாகும். இயலாமை, முயலாமை என்ற வார்த்தைக்கு இடம் கொடுக்காமல் கடின உழைப்பு, விடா முயற்சியுடன் செயல்பட்டால் எந்த ஒரு துன்பத்தையும் தாண்டி நல்ல நிலைமையை அடைய முடியும். இவ்வாறு நமது வாழ்வில் வெற்றி பெறுவதற்கு கடின உழைப்புடன் தெய்வத்தின் அருளும் தேவைப்படுகிறது. எனவே இறையருளைப் பெறுவதற்கு நமது பூஜை அறையில் இந்த இரண்டு பொருட்களை மட்டும் தவறாமல் வைத்து இறைவனை வணங்க வேண்டும். வாருங்கள் அவை என்னென்ன என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

வாழ்க்கையில் வெற்றி பெற்ற மனிதர்களில் பலர் மிகவும் இறைபக்தி உடையவர்களாக இருப்பார்கள். இவ்வாறான பெரிய மனிதர்களை, சாதனையாளர்களை நீங்கள் சந்திக்கும் பொழுது அவர்களின் பழக்க வழக்கங்களை சற்று கவனித்துப் பாருங்கள். எவ்வளவு பெரிய கோடீஸ்வரராக இருந்தாலும் அவர்கள் இறைவனை வணங்குவதில் மிகவும் ஈடுபாடுடன், இறை பக்தியுடன் செயல்படுவார்கள்.

- Advertisement -

பலர் மனதிலும் ஓடிக் கொண்டிருக்கும் ஒரு கேள்வி என்னவென்றால் பணம்இருப்பவர்களிடமமே அதிகமான பணம் சேர்ந்து கொண்டிருக்கிறது. நம்மைப்போல் உள்ளவர்களிடம் பணம் வருவது என்பது கடினமான ஒரு விஷயமாக இருக்கிறது என்று. இவ்வாறு ஒருவரிடம் பணம் அதிகமாக சேர்ந்து கொண்டே இருப்பதற்கு காரணம் அவர்கள் செய்யும் பூஜைகளும் அவர்கள் கடவுளின் மீது வைத்திருக்கும் பக்தியும் தான் காரணம். ஒரு சில பணக்காரர்கள் தன்னிடம் பணம் சேர்வதற்காக சில ரகசிய பூஜைகளை செய்வார்கள். அதனை யாரும் வெளியில் சொல்லமாட்டார்கள். அவ்வாறு நாமும் செய்ய வேண்டிய ஒரு சிறிய பூஜை முறையை பற்றி தெரிந்து கொள்வோம்.

இந்தப் பூஜையை வளர்பிறை தினத்தில் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் செய்யலாம். அவ்வாறு ஏதேனும் ஒரு வளர்பிறை நாளில் எப்பொழுதும் போல காலையில் எழுந்து குளித்துவிட்டு, வீட்டை சுத்தம் செய்து, பூஜை அறையை தூய்மை செய்து, பூஜை பாத்திரங்களுக்கும் சுவாமி படங்களுக்கும் மஞ்சள் குங்கும பொட்டு வைத்து, மலர் சூட்டி அலங்காரம் செய்ய வேண்டும்.

- Advertisement -

பின்னர் பூஜை அறையில் இருக்கும் மகாலட்சுமி படத்திற்கும், பெருமாளின் படத்திற்கும் மலர்மாலை சூட்ட வேண்டும். பிறகு ஒரு சிறிய தட்டில் ஒரு பிடி கற்கண்டு, 3 ஏலக்காய் இவை இரண்டுடன் உலர் பழங்களான பாதாம், முந்திரி போன்றவற்றையும் சேர்த்து நெய்வேதியமாக படைத்து விளக்கு ஏற்றி பூஜை செய்ய வேண்டும்.

இவ்வாறு இந்த பூஜையை வாரம் ஒருமுறை செய்து மனதார இறைவனை வேண்டிக் கொள்ள வேண்டும். இதனை தொடர்ந்து செய்து வந்தால் பணக்கஷ்டம், மனக்கஷ்டம், வேலையில் பிரச்சனை, தொழிலில் லாபம் கிடைப்பது, குழந்தைகளின் படிப்பு இவ்வாறு அனைத்திலுமே நல்ல முன்னேற்றம் இருக்கும். இவ்வாறு பூஜை செய்த பின்னர் இந்த நைவேத்தியத்தை பிறருக்கு தானமாக கொடுக்க வேண்டும்.

- Advertisement -