- Advertisement -
ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagaval

குடும்பத்திற்கு நல்லது நடக்க காளி தேவி வழிபாடு

பொதுவாக நம்முடைய வழிபாட்டு முறைகளில் உக்கிரமான தெய்வங்களை வைத்து வீட்டில் வழிபாடு செய்வதில்லை. ஏனெனில் உக்கிரமான தெய்வங்களை வழிபடும் போது தொடர்ந்து துன்பங்கள் நேரும் என்ற ஒரு நம்பிக்கை நிலவுகிறது. இது முற்றிலும் தவறான கருத்து. உக்கிர தெய்வங்கள் வீட்டில் இருக்கும் போது அவற்றுக்கான வழிபாடுகளை முறைப்படி செய்ய வேண்டும்.

வீட்டில் உள்ளவர்கள் அனைத்து விஷயத்திலும் சரியான படி இருக்க வேண்டும். ஏனெனில் உக்கிர தெய்வங்களுக்கு எந்த ஒரு தவறுக்கும் தண்டனையை உடனே தரக் கூடிய ஆற்றல் உண்டு. அவர்களுக்கு மன்னிக்கக் கூடிய ஆற்றலை விட தண்டிக்கக் கூடிய ஆற்றலை அதிகம். ஆகையால் தான் பெரும்பாலும் உக்கிர தெய்வங்களை வீட்டில் வைத்து வணங்குவதை தவிர்த்து வருகிறார்கள்.

- Advertisement -

நம் மனதில் எந்த தீய எண்ணங்களும் கெட்ட செயல்களும் செய்யாமல் நல்ல முறையில் இந்த தெய்வங்களை வணங்கினால் இவர்களைப் போல நன்மை செய்யக் கூடிய தெய்வங்களும் உலகில் இல்லை. அப்படியான ஒரு உக்கிர தெய்வம் தான் காளி. இந்த காளையை நாம் வீட்டில் எப்படி வழிபாடு செய்வதன் மூலம் நம்முடைய வாழ்க்கை வளமானதாக மாற்றிக் கொள்ளலாம் என்பதை ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

வீட்டில் நல்லது நடக்க காளி தேவி வழிபாடு

பொதுவாகவே பெண் தெய்வங்களின் வழிபாட்டிற்கு செவ்வாய், வெள்ளி உகந்த நாட்களாக கருதப்படுகிறது அதிலும் துர்க்கை காளி போன்றவர்களை வணங்க இந்த நாட்கள் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. அப்படி ஒரு நாளான செவ்வாய்கிழமையில் தான் காளியை நாம் வீட்டில் வைத்து வணங்க வேண்டும்.

- Advertisement -

இந்த வழிபாட்டை நாளைய தினத்தின் மாலை வேளையில் 6 மணிக்கு மேல் இரவு 10 மணிக்குள்ளாக செய்து விடுங்கள். காளி தேவியை வணங்குவதற்கு அவருடைய திருவுருவப்படம் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. வீட்டின் பூஜை அறையில் ஒரு அகல் விளக்கு நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றுங்கள். இந்த தீபத்தின் சுடரிலே காளி அன்னை வீற்றிருப்பதாக மனதிற்குள் நினைத்துக் கொள்ளுங்கள்.

அடுத்ததாக காளி அன்னைக்கு நெய் சாதம் நெய்வேதியிம் வைக்க வேண்டும் இது மிகவும் முக்கியம். இப்போது தீபத்தின் முன் நீங்கள் அமர்ந்து கொண்டு காளிதேவியின் இந்த மந்திரத்தை சொல்ல வேண்டும். அது தான் மிகவும் முக்கியம் அந்த மந்திரம் ஆனது

- Advertisement -

ஓம் காளி தேவியே போற்றி ஓம்

இந்த மந்திரத்தை 308 அன்னையை மனதார வேண்டிக் கொண்டு சொல்லுங்கள். இந்த நேரத்தில் உங்களுக்கு எந்த பிரச்சனை இருந்தாலும் அது தீர வேண்டும் என்று அன்னையிடம் மனதார பிரார்த்தனை வைத்து விடுங்கள். இந்த வழிபாடு முடிந்த பிறகு நெய்வேத்திய பிரசாதத்தை நீங்களும் வீட்டில் உள்ளவர்களும் பகிர்ந்து உண்டு விட்டு வழிபாட்டை முடித்துக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: நினைத்த காரியம் நடக்க முருகன் வழிபாடு

இந்த காளி அன்னையின் வழிபாடு நம்முடைய குடும்பத்தில் இருக்கும் அனைத்து தடைகளையும் நீக்கும் என்பதும் சுப காரியங்களை தொடர்ந்து நடத்துவதற்கான அருளையும் பெறலாம் என்று சொல்லப்படுகிறது. அது மட்டும் இன்றி எதிரிகள் தொல்லை, கண் திருஷ்டி போன்றவை எல்லாம் நீங்கி சகல சௌபாக்கியத்துடன் வாழக் கூடிய ஆற்றலையும் அன்னை வழங்குவர். நம்பிக்கையுடன் இந்த வழிபாட்டை மேற்கொண்டால் பலன் நிச்சயம் உண்டு.

- Advertisement -