நினைத்த காரியம் நடக்க முருகன் வழிபாடு

murugan banana
- Advertisement -

எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் நிலையான பரம்பொருளாக திகழக் கூடியவர் தான் முருகப்பெருமான். இன்று திரும்பும் திசை எல்லாம் பக்தர்களின் பரவசத்தில் திளைத்திருக்க கூடியவரும் முருகப்பெருமான் தான். அவர் நிகழ்த்தும் அதிசயங்கள் அற்புதங்களை சொல்லி மாளாது. அத்தகைய சிறப்பு மிக்க தெய்வத்தை நாம் எளிமையாக வீட்டில் எப்படி வழிபாடு செய்வது என்பதை தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

நினைத்ததை நிறைவேற முருகன் வழிபாடு

முருகரை வழிபாடு செய்ய செவ்வாய்க்கிழமை மிகவும் உகந்த நாள். இது அனைவருக்கும் தெரிந்தது தான். நாம் இது நாள் வரையில் முருகனை வணங்குவததெனில் வெற்றிலை தீபம் ஏற்றுவது, ஆறு தீபங்கள் ஏற்றுவது போன்ற வழிபாட்டு முறைகளை பின்பற்றி இருப்போம். ஆனால் மிக மிக எளிமையாகவும் முருகப்பெருமானை நாம் வழிபாடு செய்யலாம். அதைப் பற்றி இப்போது தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

இந்த வழிபாடு செய்ய செவ்வாய்க்கிழமை செவ்வாய் ஹோரை உகந்ததாக கருதப்படுகிறது. அந்த நேரத்தில் முடியாதவர்கள் இரவு 8 லிருந்து 9வரை இந்த வழிபாட்டை செய்யலாம். இதற்கு பெரிதாக நாம் ஒன்றும் செலவு செய்து வாங்க வேண்டியது கிடையாது. இரண்டு வெற்றிலை, இரண்டு பாக்கு, இரண்டு பழம் இவை மட்டும் தான் வேண்டும். இதை முருகர்க்கு வைத்து வழிபாடு செய்ய வேண்டும் அவ்வளவு தான்.

இந்த வழிபாடு செய்யும் பொழுது முருகருக்கு உகந்த செவ்வரளி பூக்களை மாலையாக சுடலாம். அவருக்கு பிடித்த ஏதேனும் எளிமையான நெய்வேத்தியத்தை வைக்கலாம். இந்த வெற்றிலை பாக்கு பழங்களை வைத்த பிறகு அவருக்கு ஒரே ஒரு நெய் தீபத்தை ஏற்றி வையுங்கள். எல்லாம் செய்த பிறகு முருகருக்கு முன்பாக அமர்ந்து சிறுவாபுரி பதிகம் படிக்க வேண்டும் அது தான் மிகவும் முக்கியம்.

- Advertisement -

இந்த சிறுவாபுரி பதிகம் இப்போது புத்தகமாகவும் யூடியூப் பிலும் இருக்கிறது. படிக்க முடிந்தவர்கள் படிக்கலாம் முடியாதவர்கள் யூடியூபில் பில் போட்டு விட்டு கேளுங்கள். அந்த நேரத்தில் முருகப்பெருமானை மனதார நினைத்து உங்களுடைய எந்த வேண்டுதலோ அதை நிறைவேற வேண்டும் என்று கேட்டுக் கொள்ளுங்கள் நிச்சய முருகப்பெருமான் உங்கள் வேண்டுதலுக்கு செவி சாய்ப்பார் என்று சொல்லப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: எதிரிகள் தொல்லை நீங்க பரிகாரம்

இதே வழிபாட்டை வெள்ளிக்கிழமை சுக்கிர ஹோரை நேரத்திலும் செய்யலாம். அதுவும் சிறந்த பலனை தருவதோடு செல்வ செழிப்பையும் தருவதாக அமையும். இந்த இரண்டு தினங்கள் தொடர்ந்து செய்யலாம் அல்லது ஏதேனும் ஒரு நாள் மட்டும் செய்யலாம். இந்த வழிபாடு போதும் உங்கள் வாழ்க்கையை மாற்றிக் காட்ட. இந்த முறையில் நம்பிக்கை இருப்பவர்கள் நம்பிக்கையுடன் முருகனை வழிபட்டு மாற்றங்களை காணுங்கள்.

- Advertisement -