- Advertisement -
சமையல் குறிப்புகள்

மைசூர் பருப்பு சாம்பார் செய்வது எப்படி என்று பார்ப்போம்

மைசூர் பருப்பு சாம்பார் இட்லிக்கு மிகச்சிறந்த ஒரு சாம்பார் ஆகும். காலை டிபன் வகைகள் அனைத்திற்கும் எந்த சாம்பார் மிக அருமையாக இருக்கும். இதனை தயார் செய்வது மிக எளிது. இந்த பதிவில் மைசூர் பருப்பு சாம்பார் எப்படி செய்வது என்று பார்ப்போம் வாருங்கள்.

மைசூர் பருப்பு சாம்பார் செய்ய தேவையான பொருட்கள்:

- Advertisement -

மைசூன் பருப்பு – 1/4 கிலோ
தக்காளி – 5
பூண்டு – 50 கிராம்
பச்சைமிளகாய் – 5
புளி – சிறிதளவு
வெங்காயம் – 2
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – சிறிதளவு
கடுகு – சிறிதளவு
காய்ந்த மிளகாய் – சிறிதளவு
கொத்தமல்லி – சிறிதளவு
புளிக்கரைசல் – சிறிதளவு

மைசூர் பருப்பு சாம்பார் செய்முறை:

ஒரு பாத்திரத்தில் ஊறவைத்த மைசூர் பருப்பினை போட்டு நன்றாக கொதிக்கவைக்கவும். அதனுடன் பச்சைமிளகாய், தக்காளி, பூண்டு மற்றும் வெங்காயம் சேர்ந்து நன்றாக கொதிக்கவிடவும்.

- Advertisement -

நன்றாக பருப்பு வெந்தவுடன் அதனை மத்து கொண்டு நன்றாக கடைந்து அதனை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்து கொள்ளவும். பிறகு ஒரு தாளிக்கும் கரண்டியில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு மற்றும் காய்ந்த மிளகாய் போட்டு தாளித்து அதனை கடைந்த பாத்திரத்தில் ஊற்ற வேண்டும்.

மீண்டும் அதனை அடுப்பில் 10 நிமிடம் வரை கொதிக்க வைக்கவேண்டும். கொதித்து முடியும் தருவாயில் புளிக்கரைசல் சேர்க்க வேண்டும.ன் பிறகு அடுப்பில் இருந்து இறக்கி கொத்தமல்லி தூவி எடுத்தால் சுவையான மைசூர் பருப்பு சாம்பார் தயார்.

- Advertisement -

சமைக்க ஆகும் நேரம் – 20 நிமிடம்
சாப்பிடும் நபர்களின் எண்ணிக்கை -3

இதையும் படிக்கலாமே:
கருப்பு உளுந்து தோசை செய்யும் முறை

இது போன்று மேலும் பல சமையல் குறிப்புக்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Maisoor parupu sambar recipe in Tamil. It is also called as Maisoor parupu sambar seimurai or Maisoor parupu sambar seivathu eppadi in Tamil or Maisoor parupu sambar preparation in Tamil.

- Advertisement -