- Advertisement -
மந்திரம்

சகல செல்வங்களையும் பெற உதவும் மந்திரம்

சிலர் என்ன தான் கடினமாக உழைத்தாலும் சகல செல்வங்களும் அவர்களிடம் சேர்வதில்லை. இதற்கு காரணம் கிரக தோஷமாக இருக்கலாம். நம்முடைய தோஷங்கள் அனைத்தையும் விலக்கி வீடு, வாகனம் என சகல செல்வங்களையும் பெற உதவும் ஒரு மந்திரம் இருக்கிறது. வாருங்கள் அது குறித்து பார்ப்போம்.

மந்திரம்:
நெடிய கண் கரிய நெய்தல் நிறையருள் சலதி எய்தாக்
கொடியனேன் பிறவித்துன்பக் குறைகடல் கடந்து மூழ்க
விடின் அதின் குறைவதுண்டோ மெத்தவர்க்கு ஒழிந்துறாதோ
கடிநகர் நிலவு காட்டிற் காயுமே கருணை வாழ்வே.

- Advertisement -

பொருள்:

சகல செல்வங்களையும் அருளும் தாயே உனது கடைக்கண்ணால் இந்த ஏழையையும் சற்று பார்ப்பாயோ. அதனால் எனக்கு புண்ணியம் வந்து சேர்வதோடு நான் சகல செல்வங்களையும் பெருவேனே. இப்படி செய்வதால் உனக்கு எந்த குறையும் இலையே. இரவில் ஒளிவீசும் நிலவானது காட்டிலினும் மாட மாளிகையிலும் பாரபட்சமின்றி ஒரே மாதிரி தானே காய்கிறது?

- Advertisement -

இதையும் படிக்கலாமே:
நம் தலை எழுத்தையே மாற்றவல்ல பிரம்மா காயத்ரி மந்திரம்

தினமும் காலை குளித்துவிட்டு கிழக்கு முகமாக அமர்ந்து இந்த மந்திரத்தை 108 முறை ஜெபிப்பதன் மூலம் நாம் சகல செல்வங்களையும் பெறலாம்.

 

- Advertisement -