- Advertisement -
- Advertisement -

வைகாசி 1, ஆவணி 1, கார்த்திகை 1, மாசி 1, இந்த 4 நாட்களும் விஷ்ணுபதி புண்ணிய கால நாட்களாக நமக்கு சொல்லப்பட்டுள்ளது. இந்த நாளில் எவர் ஒருவர் பெருமாள் கோவிலுக்கு சென்று, விஷ்ணு பகவானை வழிபாடு செய்கிறீர்களோ, அவர்களுடைய வாழ்க்கையில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்படும் என்பது நம்பிக்கை.

அந்த வகையில் பார்த்தால் நாளை தினம் மாசி 1 ஆம் தேதி. விஷ்ணுபதி புண்ணிய காலம், பெருமாள் வழிபாடு செய்ய வேண்டிய இந்த நாளில், பெருமாள் கோவிலில் வழிபாட்டை எப்படி மேற்கொள்வது, வாழ்க்கையில் மிகப்பெரிய செல்வந்தர்களாக மாற வேண்டும் என்றால், எந்த மந்திரத்தை சொல்லி, பெருமாளை வழிபாடு செய்வது ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.

- Advertisement -

மாசி 1 விஷ்ணுபதி புண்ணிய கால வழிபாடு

இந்த நான்கு மாதத்தில், வரக்கூடிய முதல் தேதி விஷ்ணுபதி புண்ணிய காலம். இந்த நாளில் இரவு 1:30 மணியிலிருந்து காலை 10:00 மணி வரை விஷ்ணுபதி புண்ணிய காலமாக நமக்கு சொல்லப்பட்டுள்ளது. நம் ஊர்களில் இருக்கும் கோவில்கள், நடு இரவில் இந்த நேரத்தில் திறந்து இருக்காது. இருந்தாலும் காலை 10 மணி வரை விஷ்ணுபதி புண்ணிய காலம் இருப்பதால், காலையில் பெருமாள் கோவில் திறந்த உடனேயே, பெருமாளை சென்று தரிசனம் செய்யுங்கள். நாளை காலை 10 மணிக்கு முன்பாக இந்த வழிபாட்டை செய்து முடித்து விட வேண்டும்.

பெருமாள் கோவிலுக்கு செல்லும்போது உங்களுடைய கையில் 27 பூக்களை எடுத்துச் செல்லுங்கள். எந்த வகையான பூக்களாக இருந்தாலும் சரி, பெருமாளை கொடி மரத்தோடு சேர்த்து 27 முறை வலம் வர வேண்டும். பெருமாளுக்கு தேங்காய், பழம் பூ, துளசிளைகளை வாங்கிக் கொடுத்து உங்கள் குடும்ப உறுப்பினர்களின் பெயரை சொல்லி அர்ச்சனை செய்து கொண்டு, வீடு திரும்ப வேண்டும்.

- Advertisement -

இதுதான் பரிகாரம். இப்படி பெருமாளை, 27 முறை பெருமாளை வளம் வரும்போது, உங்களுடைய மனதிற்குள் பெருமாளுக்கு உகந்த மந்திரங்களை சொல்லலாம். கோவிந்தா கோவிந்தா என்று சொல்லலாம். நாராயணா நாராயணா என்று சொல்லலாம்.  ஓம் நமோ நாராயணா மந்திரம் கூட சொல்லலாம். அது உங்களுடைய விருப்பம்.

நீங்கள் சீக்கிரம் செல்வந்தர்களாக மாற வேண்டும், வியாபாரத்திலும், செய்யும் வேலையிலும் சீக்கிரம் முன்னேற்றம் அடைய வேண்டும் என்றால், பின் சொல்லக் கூடிய இந்த மந்திரத்தை பெருமாள் கோவிலில் அமர்ந்து விஷ்ணுபதி புண்ணிய கால நேரத்தில் படிக்கவும்.

- Advertisement -

பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைய மந்திரம்

ஸ்ரீதர ஸ்ரீஷ ஸ்ரீநிவாஸ் ஸ்ரீநிதிஹ்
ஸ்ரீ விபாவனஹ் ஸ்ரீதரஹ் ஸ்ரீகரஹ்
ஸ்ரேயஹ் ஸ்ரீமான் லோகத்ரயாஸ்ரயஹ்.

வாழ்க்கையில் எந்த முயற்சிகளை மேற்கொண்டாலும் காரிய தடை வருகிறது. சில விஷயங்களை எல்லாம் மனதில் நினைப்பதோடு சரி, அந்த விஷயங்களை செயல்படுத்தி காட்டவே முடியவில்லை என்பவர்கள் காரிய தடை விலக இந்த ஒரு வரி மந்திரத்தை சொல்லுங்கள்.

காரிய தடை விலக மந்திரம்

ஓம் அனிருத்ரனே நமஹ !

நீங்கள் என்ன பிராத்தனை செய்தால் வைத்தாலும் சரி, அது அதிவிரைவாக நிறைவேற வேண்டும் என்ற கட்டாயம் இருந்தால் பிரார்த்தனைகள் சீக்கிரம் நிறைவேற “ஓம் சித்தார்த்தையே நமஹ” என்ற மந்திரத்தை பெருமாள் கோவிலில் அமர்ந்து சொல்லலாம்.

இதையும் படிக்கலாமே: திரிவேணி சங்கமத்தில் குளித்த பலன் கிடைக்க பரிகாரம்

எங்கள் வீட்டில் நோய் நொடி பிரச்சனை தான். எல்லோரும் மருந்து மாத்திரை சாப்பிடுகிறார்கள். மாதத்தில் பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் மருத்துவ செலவை ஆகிறது என்றால், அந்த பெருமாள் கோவிலில் அமர்ந்து “ஓம் அச்சுதாய நமஹ ! ஓம் அனந்தாய நமஹ ! ஓம் கேசவாய நமஹ !” என்ற மந்திரத்தை சொல்லுங்கள். இவ்வளவுதான் வழிபாடு. இந்த மந்திரத்தை எல்லாம் உச்சரிக்க முடியாது என்றால் கோவிந்தா கோவிந்தா நாமத்தை சொல்லியே உங்களுடைய வேண்டுதலை பெருமாளிடம் சொன்னாலும், நிச்சயம் அது பலிக்கும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -