- Advertisement -
ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagaval

இன்று பங்குனி வளர்பிறை பிரதோஷம் – இதை செய்தால் சிறப்பான பலன்கள் உண்டு

சிவனின் பெயரை உச்சரித்தாலும் அல்லது மனதில் நினைத்தாலும் அனைத்து தீவினைகளும் நீங்கும். ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை காலங்களில் சிவனுக்குரிய பிரதோஷம் தினங்கள் வருகின்றன. இதில் பங்குனி மாதத்தில் வருகிற பிரதோஷ தினத்தின் சிறப்புகளை பற்றியும், அன்று சிவனை வழிபடுவதால் உண்டாகும் பலன்கள் பற்றியும் இங்கு தெரிந்து கொள்ளலாம்

பங்குனி மாதம் ஆன்மீக சிறப்புக்கள் மிகுந்த ஒரு மாதமாகும். இந்த மாதத்தில் வரும் அனைத்து திதி தினங்களும் இறை வழிபாடு, பூஜைகள், உற்சவங்கள் செய்வதற்கு ஏற்றதாக இருப்பதால் பல கோயில்களில் விழாக்களும், வைபவங்களும் இந்த மாதம் முழுவதும் நடைபெறும். அப்படியான பங்குனி மாதத்தில் வரும் வளர்பிறை பிரதோஷம் சிறப்பான ஒரு தினமாகும். அதிலும் பங்குனி வளர்பிறை பிரதோஷம் சிவபெருமான் மற்றும் சந்திர பகவானுக்குரிய திங்கட்கிழமைகளில் வருவது மிகவும் சிறப்பானதாகும்.

- Advertisement -

இந்த பங்குனி வளர்பிறை பிரதோஷ தினத்தன்று பிரதோஷ வேளையான மாலை 4 மணி முதல் 6 மணி வரையான நேரத்தில் அருகிலுள்ள சிவன் கோயிலுக்கு சென்று சோமாசூக்த பிரதிட்சணம் வந்து வணங்க வேண்டும். பிறகு நந்தி தேவர் மற்றும் சிவப்பெருமானின் அபிஷேகத்திற்கு பால், பன்னீர், தேன், தயிர் போன்ற அபிஷேக பொருட்களை தானம் தந்து, பிரதோஷ வேளை பூஜையின் நந்தி தேவர் மற்றும் சிவபெருமான், பி-பார்வதி தேவியை வணங்க வேண்டும். நவகிரக சந்நிதியில் இருக்கும் சந்திர பகவானுக்கு மல்லிகை பூக்கள் சாற்றி, தயிர் சாதம் நைவேத்தியம் செய்து வணங்க வேண்டும்.

வழிபாடு முடிந்ததும் உங்கள் சக்திக்கு ஏற்ற அளவில் பக்தர்களுக்கு தயிர் சாதம் அன்னதானம் வழங்க வேண்டும். இம்முறையில் இன்றைய பங்குனி வளர்பிறை பிரதோஷத்தில் சிவபெருமானை வணங்குவதால் உங்களுக்கு சந்திரனால் ஏற்படும் தோஷங்கள் நீங்கும். மனக்கவலைகள், சஞ்சலங்கள் நீங்கி மனோபலம் உண்டாகும். தாயாருக்கு ஏற்படும் ஆரோக்கிய குறைபாடுகள் நீங்கும். சிவனருள் கிடைக்கப்பெற்று வாழ்வில் உங்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டியது அனைத்தும் கிடைக்க பெறுவீர்கள்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே:
சிவன் மலை ஆண்டவன் பெட்டியில் முருகனின் வேல்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Panguni valarpirai pradosham in Tamil. It is also called as Panguni masam in Tamil or Panguni pradosham in Tamil or Pradosham pooja in Tamil or Panguni matha pradhoshangal in Tamil.

- Advertisement -