இந்திய அணியின் அதிரடி துவக்க ஆட்டக்காரரான ரோஹித் சர்மாவிற்கு கடந்த டிசம்பர் மாதம் 30ஆம் தேதி அழகிய பெண் குழந்தை பிறந்தது. இது அவரது முதல் குழந்தை என்பது குறிப்பிடத்தக்கது. ரோஹித் மற்றும் ரித்திகா தம்பதிகள் கடந்த 2015ஆம் ஆண்டு காதல் திருமணம் புரிந்தனர்.
ஆஸ்திரரேலியா அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்று இருந்த ரோஹித் சர்மா டெஸ்ட் அணியில் இடம்பிடித்து விளையாடி வந்தார். கடந்த மூன்றாவது டெஸ்ட் முடிந்த பிறகு அவருக்கு குழந்தை பிறந்தது. இதனால் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி போட்டியில் இருந்து விலகி மும்பை திரும்பினார் ரோஹித்.
ரோஹித் சர்மாவின் ரசிகர்கள் மற்றும் இந்திய அணியின் வீரர்கள் ரோஹித் சர்மாவின் மகளின் போட்டோவை பார்ப்பதற்கு ஆவலாக இருந்தனர். இந்நிலையில் தனது டிவீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதோ அந்த பதிவு உங்களுக்காக
மகளின் போட்டோவை பதிவிட்ட ரோஹித் குறிப்பிட்டதாவது : உனக்காக கடைசி விமானத்தில் ஒரு நாள் முழுவதும் காத்திருந்து வந்தேன் “சமைரா” என்று தனது மகளின் பெயரையும் அவர் வெளியிட்டார்.
இதையும் படிக்கலாமே :
மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்