Latest Cricket news Tamil : ரிஷப் பண்ட்டை பேபி சிட்டர் என்று கூ றிய பெயினை சித்தரித்து ஆஸி ரசிகர்கள் வாய்த்த பேனர்

aus-fans
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்கவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்றுவருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் நடைபெற்றுவருகிறது. செய்த இந்திய அணி 622 ரன்களை குவித்தது. இந்திய அணி சார்பாக புஜாரா 193 ரன்கள், பண்ட் 159*ரன்களையும் குவித்தனர்.

paine

மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது பேட்டிங் செய்ய வந்த பண்டை குழந்தைகளை பராமரிக்க என் வீட்டிற்கு வா என்று வசை பாடினார் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டிம் பெயின். தற்போது நடந்துவரும் நான்காவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக சிறப்பாக பேட்டிங் செய்து அவர்களுக்கு சிம்ம சொப்பனமாக இறுதிவரை ஆட்டமிழக்காமல் 159* சதமடித்தார் இந்திய வீரர் பண்ட்.

- Advertisement -

இந்நிலையில் ஆஸி ரசிகர்கள் பண்டிற்கு ஆதரவாக ஆஸ்திரேலிய அணியின் கேப்டனை கலாய்த்து புகைப்படம் ஒன்றை மைதானத்தில் ஏந்தி வந்தனர். அந்த புகைப்படம் இப்பொது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் பண்ட் சதமடித்து பேட்டை உயர்த்தி காட்டுகிறார். கீழே பண்ட் குழந்தை போல அமர்ந்து இருக்கிறார். இதோ அந்த புகைப்படம்

baby

நான்காவது டெஸ்ட் போட்டி ஐந்தாவது நாளை நோக்கி செல்கிறது. இந்த போட்டியில் இந்திய அணியின் வெற்றி உறுதியாகும் நிலையில் உள்ளது. எனவே, இந்த தொடரை ஏறக்குறைய இந்திய அணி கைப்பற்றிவிட்டது என்றே கூற வேண்டும்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே :

cricket seithigal : 30 ஆண்டுகளுக்கு பிறகு சொந்தமண்ணில் “பாலோ ஆன்” ஆன ஆஸி அணி

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்

- Advertisement -