- Advertisement -

வீட்டில் செல்வம் கொழிக்க வைகாசி வெள்ளிக்கிழமை வழிபாடு

வெள்ளிக்கிழமை என்றாலே வழிபாட்டிற்குரிய நாள் தான். அதிலும் நாளைய தினம் வைகாசி மாதத்தில் வரக் கூடிய வெள்ளிக்கிழமை இந்த நாளில் நாம் செய்யக்கூடிய சில விஷயங்கள் நம்முடைய வீட்டில் சகல செல்வங்களையும் பெருக்கி தரும் என்று சொல்லப்படுகிறது. அது என்ன முறை எப்படி செய்ய வேண்டும் என்பதை எல்லாம் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

வைகாசி வெள்ளிக்கிழமை வழிபாடு

வெள்ளிக்கிழமை வழிபாடு என்றாலும் மகாலட்சுமி தாயாரை வணங்குவது தான். இந்த வழிபாடு செய்பவர்கள் நாளைய தினம் தவறாமல் பிரம்ம முகூர்த்த நேரத்தில் செய்து விடுங்கள் அதுமட்டுமின்றி பிரம்ம முகூர்த்த நேரத்தில் வீட்டில் சாம்பிராணி தூபம் போட வேண்டும். இது மகாலட்சுமி தாயார் உட்பட அனைத்து தெய்வங்களையும் நம் வீட்டிற்கு வர வைக்கும்.

- Advertisement -

அதே போல் நாளை மாலையிலும் வீட்டில் சாம்பிராணி தூபம் போட வேண்டும் சாம்பிராணி தூபம் ஒரு முறை போட்டால் போதும் என்று நினைக்காமல் நாளை ஒரு நாள் மட்டும் இருமுறையும் போடுங்கள். இது நம் வீட்டிற்கு செல்வ வளத்தை பெருக்கி தரும் என்று சொல்லப்படுகிறது. அதுமட்டுமின்றி நாளைய தினம் குலதெய்வ வழிபாடு செய்வது மிகவும் உகந்தது வாய்ப்புள்ளவர்கள் அதை செய்து கொள்ளுங்கள்.

இவற்றுடன் நாளைய தினம் உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் ஏதேனும் ஒரு பெண் தெய்வ ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்யுங்கள். இது மிகவும் முக்கியம் மகாலட்சுமி தாயார் ஆலயம் இருப்பின் மேலும் சிறப்பு. அப்படி செல்லும் வேளையில் தெய்வத்திற்கு பூக்கள் வாங்கி கொடுங்கள். இது உங்கள் வீட்டில் பண தேவையை முழுவதுமாக பூர்த்தி செய்ய வழிவகுக்கும்.

- Advertisement -

இவற்றுடன் சேர்த்து நாளைய தினம் பிரம்ம முகூர்த்த வேலையில் வீட்டின் நிலை வாசலுக்கு சந்தன குங்குமம் பொட்டு வைத்து வைத்து விட்டு நிலை வாசலுக்கு சாம்பிராணி தூபம் ஊதுபத்தி போன்றவற்றை காட்டி வழிபாடு செய்யுங்கள். இது உங்களுக்கு பலவகையான ஐஸ்வர்யங்களை தேடி தரும். இந்த நாளில் முடிந்தால் மகாலட்சுமி தாயார்க்கு எளிமையான நெய்வேத்தியத்தை படைத்து நெய் விளக்கேற்றி வழிபாடு செய்யுங்கள்.

அதே போல் வைகாசி மாதம் முருகருக்கு உகந்த மாதம் ஆகையால் நாளைய தினம் வேல் வழிபாடு முருகர் வழிபாடு போன்றவற்றை செய்வது முருகரின் பரிபூரண அருளாசையும் பெற்று தரும். முருகர் வழிபாடு செய்யும் பொழுது கந்த சஷ்டி கவசம் போன்றவற்றின் படிப்பது நல்லது.

இதையும் படிக்கலாமே: பிரச்சினைகளை தீர்க்கும் வேப்ப எண்ணெய் தீபம்

மேற்கூறிய அனைத்தையும் நாளைய தினம் செய்தால் மிகவும் சிறப்பு முடியாதவர்கள் ஏதேனும் ஒன்றையாவது செய்யுங்கள். இது உங்கள் உங்கள் குடும்பத்தை சந்தோஷமாகவும் செல்வ செழிப்பாகவும் வாழ வைக்க உதவி செய்யும் என்று சொல்லப்படுகிறது. இந்த வழிபாடு முறைகளில் உங்களுக்கு நம்பிக்கை இருப்பின் நம்பிக்கையுடன் செய்து பலனை பெறுங்கள்.

- Advertisement -