- Advertisement -
ராசி பலன் | Indraya rasi palan

Rasipalan Today : இன்றைய ராசி பலன் – 06-03-2019

மேஷம்:

பிற்பகலுக்கு மேல் அலுவலகப் பணிகளில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். மற்றவர்களால் உங்களுக்கு உதவிகள் கிடைக்கும். வெளியூரில் இருந்து எதிர்பார்த்த நல்ல தகவல் வந்து சேரும். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும்.

ரிஷபம்:

இன்று உங்களுக்கு உற்சாகமான நாளாக அமையும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். எதிலும் பொறுமை அவசியம். நினைத்த காரியங்கள் அனுகூலமாக முடியும். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்க்கவும்.

- Advertisement -

மிதுனம்:

அத்தியாவசிய தேவைகளுக்காக ஒரு சிலர் கடன் வாங்கவும் நேரும். புதிய முயற்சிகளில் ஈடுபடாமல், வழக்கமான பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும். தெய்வப்பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் பேசும்போது வார்த்தைகளில் கவனமாக இருப்பது அவசியம்.

கடகம்:

கடக ராசிக்கு இன்றைய ராசி பலன் படி புதிய முயற்சிகளில் ஈடுபடாமல், வழக்கமான பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும். மாலையில் நீண்ட நாள்களாக சந்திக்காமல் இருந்த நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். பிள்ளைகள் வழியில் நல்ல செய்தி கிடைக்கும். அவர்களால் பெருமை ஏற்படும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும்.

- Advertisement -

சிம்மம்:

சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு இடமுண்டு. புதிய முயற்சிகள் எதுவும் மேற்கொள்ளவேண்டாம். வராது என்று நினைத்திருந்த கடன் தொகை திரும்பக் கிடைக்கும். சிலர் குலதெய்வக் கோயிலுக்குச் சென்று பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வ வழிபாடு செய்யும் வாய்ப்பு ஏற்படும்.

கன்னி:

இன்று மகிழ்ச்சியான நாளாக அமையும். பிற்பகல் வரை வழக்கமான பணிகளையும் கூடுதல் கவனத்துடன் மேற்கொள்வது அவசியம். அறிவுபூர்வமான பேச்சால் மற்றவர்களைக் கவருவீர்கள். ஆடம்பரப் பொருள்கள் வாங்குவீர்கள். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குப் பிள்ளைகள் வழியில் பெருமை உண்டாகும்.

- Advertisement -

துலாம்:

அனைத்து முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும். சிலருக்கு பணப் பற்றாக்குறை ஏற்படவும் அதனால் கடன் வாங்கவும் நேரும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மாலையில் மகான்களின் தரிசனமும் அவர்களின் ஆசிகளும் பெறும் வாய்ப்பு உண்டாகும்.

விருச்சிகம்:

புதிய முயற்சிகளில் ஈடுபடாமல், வழக்கமான பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும். அரசாங்க விஷயங்களில் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். கூடுமானவரை பயணங்களைத் தவிர்க்கவும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைத்தாலும் அதிகமாக உழைக்க வேண்டி இருக்கும். அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசால் அனுகூலம் உண்டாகும்.

தனுசு:

மாலையில் நீண்ட காலமாகச் சந்திக்காமல் இருந்த நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். அரசு அதிகாரகளின் அறிமுகமும் அதனால் ஆதாயமும் உண்டாகும். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். வெளிநாட்டில் இருந்து வரும் செய்தி மகிழ்ச்சி தரும். பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குத் தந்தை வழி உறவுகளிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

மகரம்:

மனம் உற்சாகமாகக் காணப்படும். புதிய முயற்சிகளில் ஈடுபடாமல், வழக்கமான பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும். வழக்கமான பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் உண்டாகும். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் துர்கை வழிபாட்டால் நன்மை பெறலாம்.
- Advertisement -

கும்பம்:

தாயின் அன்பும் ஆதரவும் உற்சாகம் தரும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். சிலருக்கு மாலையில் கோயில்களுக்குச் செல்லும் வாய்ப்பு உண்டாகும். ஆனால், புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

மீனம்:

அதிகாரிகள் சந்திப்பும், அதனால் காரிய அனுகூலமும் ஏற்படும். வீண் அலைச்சல் உண்டாகும். மகான்களின் தரிசனமும் அவர்களின் ஆசிகளும் பெறுவீர்கள். இன்று நீங்கள் புதிய முடிவுகள் எதுவும் எடுக்காமல் வழக்கமான வேலைகளில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்தவும். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

- Advertisement -
Published by