- Advertisement -
ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagaval

பாடுபட்டு உழைத்து ஓடாய் தேய்ந்தாளும் பலன் கிடைக்க வில்லையா? முதலில் உங்கள் ஜாதகத்தில் இருக்கும் இவற்றைக் கவனிக்க வேண்டும்

மனிதனாகப் பிறந்துவிட்டால் உழைத்து தான் ஆகவேண்டும். உழைப்பில்லாமல் உயர்வில்லை. உழைப்புக்கேற்ற ஊதியம் இருந்தால் மட்டுமே நமது வாழ்க்கை முன்னேற்றப் பாதையில் செல்லும். ஒரு சில வீடுகளில் ஆண் வேலைக்கு சென்றும், பெண்கள் வீட்டில் இருந்தும் குடும்பத்தை பார்த்துக் கொள்கின்றனர். ஒரு சில இல்லங்களில் இருவருமே வேலைக்கு செல்கின்றனர். இவ்வாறானவர்களை பார்த்து மற்றவர்கள் அட இவர்கள் காலை முதல் மாலை வரை உழைத்து ஓடாய் தேய்கின்றனர் என்று புறம் பேசிக் கொள்வார்கள். ஆனால் இப்படி உழைத்தாலும் இவர்களின் வாழ்க்கையில் முன்னேற்றம் என்பது கிடைக்கவில்லை. இதற்கு காரணம் என்ன என்பது பற்றியும் தெரிவதில்லை. வாருங்கள் இதற்கான காரணம் என்னவென்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

காலை முதல் மாலை வரை மாதம் முழுவதும் கடினமாக உழைத்து, அதற்காக கிடைக்கும் ஊதியம் என்பது குடும்பத்திற்கே போதுமானதாக இருப்பதில்லை. இதில் எங்கிருந்து சேமித்து வைப்பது, சொத்துக்கள் வாங்குவது. இவ்வாறான பிரச்சினைகள் இருப்பதற்கு காரணம் இயற்கையாகவே இவர்களின் ஜாதகத்தில் மாத்ருகா சாபம் மற்றும் குரு தோஷம் இவை இரண்டும் இருப்பதனால் தான்.

- Advertisement -

இவற்றைக் கண்டறிய முதலில் இவர்களின் பிறந்த நேரத்தை வைத்து இவர்களின் ஜாதகத்தில் குருவும், சந்திரனும் ஒன்று கூடி இருந்தால் குருச்சந்திர யோகம் என்று சொல்லபடுகிறது. இப்படிப்பட்டவர்களுக்கு நூற்றுக்குத் தொண்ணூறு சதவீதம் இவ்வாறு வாழ்க்கையில் முன்னேற்றம் இல்லாமல் தான் இருக்கிறது.

அடுத்து உங்கள் ஜாதகத்தில் ஆறு, எட்டு, பன்னிரெண்டில் குருவும், சந்திரனும் அமைந்திருந்தால் நிச்சயமாக வாழ்க்கையில் உயர்வு என்ற நிலைமை இருக்காது. அடுத்ததாக சூரியன் ஒருவருடைய ஜாதகத்தில் பலவீனமாக இருந்தாலும் வாழ்க்கையில் உயர்வு என்பது இருக்காது. இவ்வாறான விஷயங்களை சிலர் நம்ப மறுக்கின்றனர்.

- Advertisement -

உங்கள் வாழ்க்கை முறையை வைத்தே இவற்றை சிந்தித்துப் பாருங்கள். நீங்கள் உழைத்த உழைப்பிற்க்கு ஏற்ற ஊதியம் இருக்கிறதா? உங்கள் வாழ்க்கைத் தரம் மேலோங்கி சென்று இருக்கிறதா? என சிந்தித்துப் பாருங்கள். நிச்சயமாக இவ்வாறான பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு வாழ்க்கை போராட்டமாகத் தான் சென்று கொண்டிருக்கும். இவற்றில் இருந்து விடுபடுவதற்காக முழுமனதுடனும், நம்பிக்கையுடனும் இந்த பரிகாரத்தை செய்து பலன் பெற வேண்டும்.

உங்கள் வாழ்க்கையில் இவ்வாறான பிரச்சனைகளை நிவர்த்தி செய்துகொள்ள குரு பகவானுக்கும், சுக்கிர பகவானுக்கு மற்றும் சூரிய பகவானுக்கும், இவர்களுக்கு உரிய கிழமைகளில் கோவிலுக்கு சென்று, அவர்களுக்கு பிடித்த உணவை நைவேத்தியமாக படைத்து, நெய் விளக்கு ஏற்றி, உங்களால் முடிந்த அளவு உணவை பிறருக்கு தானமாக அளிக்க வேண்டும்.

இவ்வாறு தொடர்ந்து செய்து வருவதன் மூலம் உங்கள் வாழ்க்கையில் வரக்கூடிய இன்னல்களும், தடைகளும் அகன்று உங்கள் உழைப்பிற்கு ஏற்ப நல்ல பலன் கிடைக்கும். உங்கள் வாழ்க்கை முன்னேறுவதற்கான நல்ல வழிகள் பிறக்கும். நீங்கள் செய்யும் இந்த பூஜைகளின் பலனாக உங்கள் வாழ்க்கை முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் தானாகவே உங்களைத்தேடி வரும். கிடைத்த வாய்ப்புகளை திறம்பட பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேறி வளம் பெற வாழ்த்தி இப்பதிவினை முடித்துக் கொள்கிறோம்.

- Advertisement -