நமது உடலில் வாதம், பித்தம், கபம் என்று மூன்று குணங்கள் இருக்கின்றன. இவை மூன்றும் ஒன்றுக்கொன்று சமநிலையில் இருக்கும் பட்சத்தில் நமது உடல்நிலையில் எந்த ஒரு குறைபாடுமின்றி ஆரோக்கியமாக இருக்கிறோம். இவற்றில் ஏதேனும் ஒன்று சமநிலை தன்மை இழந்து அதன் இயல்பு நிலை கூடவோ அல்லது குறையவோ செய்தால் நாம் நோய்வாய்ப்படுகிறோம். அப்படி நம் உடலில் வாதம் என்கிற குணத்தின் தன்மை அதிகரிப்பதால் முக வாதம், பக்கவாதம், முடக்கு வாதம் என உடலில் பல பகுதிகளை இந்த வாதம் பாதிக்கிறது. இந்த வாதத்திற்கான வீட்டு வைத்திய முறைகளை காண்போம்.
நரம்புகளில் அதிகம் அழுத்தம் தரும் வகையான பணிகளை செய்வதால் வாதம் ஏற்படக்கூடும். அதே போல மிக கடுமையான உடலுழைப்பு அல்லது உடற்பயிற்சியே இல்லாமை போன்றவையும் வாதத்திற்கான காரணமாகும். வாதத்தை அதிகப்படுத்தும் உணவுகளை அதிகம் உண்பதன் மூலமும் வாத நோய் ஏற்படுகிறது.
பூவரசன் மரம்
முதிர்ந்த பூவரசன் மர பட்டைகளை ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டு 100 மில்லி அளவுக்கு சுண்ட காய்ச்சி, அதில் 20 கிராம் தேன் விட்டு கலந்து மூன்று நாட்களுக்கு வெறும் வயிற்றில் குடித்து வர வேண்டும். இக்காலங்களில் உணவுகளை உப்பில்லாமல் உண்ண வேண்டும்.
மாவிலங்கம் இலை
இரண்டு கைப்பிடியளவு மாவிலங்கம் மர இலைகளை நீரில் போட்டு, அதை 50 மில்லி அளவுக்கு சுண்ட காய்ச்சி அதில் 50 மில்லி தேங்காய்ப்பால் கலந்து, தினமும் மூன்று வேளை குடித்து வர முடக்குவாதம் நீங்கும்.
முருங்கை கீரை
முருங்கை உடலுக்கு அத்தியாவசியமான பல சத்துக்களை கொண்டது. முருங்கை மரத்தின் இலைகளை பக்குவம் செய்து உண்ண வாதம் குணமாகும்.
கொள்ளு
கொள்ளு மிகச்சிறந்த தானியவகைகளில் ஒன்றாகும். இதை அவ்வப்போது உணவாக கொள்ள வேண்டும். மேலும் இந்த கொள்ளு தானியங்களை ரசமாக வைத்து அருந்த வேண்டும். இதன் மூலம் வாதம் குணமாகும்.
முடக்குவாத எண்ணெய்
நாட்டு மருந்து மற்றும் சித்த வைத்திய கடைகளில் முடக்குவாத எண்ணெய் கிடைக்கும். அதை உடலில் உள்ள அனைத்து மூட்டு பகுதிகளிலும் தேய்த்து வருவதால் எல்லாவிதமான வாதங்களும் நீங்கும்.
இதையும் படிக்கலாமே:
மாதவிடாய் கால ரத்த போக்கை கட்டுப்படுத்தும் வீட்டு வைத்திய குறிப்புக்கள்
இது போன்ற மேலும் பல தமிழ் மருத்துவம் சார்ந்த குறிப்புகள் பலவற்றை அறிய எங்களோடு இணைந்திருங்கள்.
English Overview:
Here we have Vatham treatment in Tamil. Vatham arikurikal and maruthuva kuripugal are given here completely in Tamil language. It is called as Vatha noi Tamil maruthuvam