- Advertisement -

இந்த உலகத்தில் யாருக்கு தான் கடன் இல்லை. ஏழையாக இருப்பவருக்கும் கடன் இருக்கிறது. கோடீஸ்வரனாக இருப்பவர்க்கும் கடன் இருக்கிறது. கடன் இல்லாத நபரை நாம் தேடி கண்டுபிடிக்க வேண்டும். அந்த அளவிற்கு கடனானது பரவி இருக்கிறது. அந்த கடனை திருப்பி அடைத்து நிம்மதியாக வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள் பலர் இருக்கிறார்கள். அந்த நிம்மதியை பெறுவதற்கு செய்யக்கூடிய ஒரு எளிமையான பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

நாளைய தினம் செவ்வாய்க்கிழமை கடனுக்கு உரியவராக திகழக்கூடிய செவ்வாய் பகவானுக்குரிய கிழமை. செவ்வாய் பகவானுக்கு அதிபதியாக திகழக் கூடியவர் முருகப்பெருமான். முருகப்பெருமானுக்குரிய கிருத்திகை நட்சத்திரம் நாளை வருகிறது. கடன் ரீதியான பிரச்சினைகளை தீர்ப்பதற்குரிய தெய்வமாக முருகப்பெருமான் திகழ்கிறார் என்பதால் நாளைய தினம் முருகப்பெருமானை வழிபட வேண்டும். இதோடு ஏகாதேசியும் சேர்ந்து வருகிறது. ஏகாதேசி என்பது பெருமாளுக்கு உரிய தினமாக கருதப்படுகிறது. பெருமாளை நாம் வழிபடும் பொழுது நமக்கு பணவரவு என்பது அதிகரிக்கும். அதனால் நாளைய தினம் இந்த பரிகாரத்தை நாம் செய்தோம் என்றால் கடன் தீருவதற்குரிய பண வரவு நமக்கு கிடைக்கும்.

- Advertisement -

காலையில் எழுந்து பிரம்ம முகூர்த்த வேளையில் வீட்டு பூஜை அறையில் ஒரு மஞ்சள் துணியை விரித்துக் கொள்ளுங்கள். பிறகு அதில் உங்களால் இயன்ற அளவு பச்சரிசியை எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். அதேபோல் பாசிப்பருப்பையும் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக வெல்லத்தையும் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். அளவுகள் கிடையாது. உங்கள் விருப்பம் தான்.

இப்படி எடுத்து வைத்த இந்த மஞ்சள் துணியை மூட்டையாக கட்டிக் கொள்ளுங்கள். இந்த மூட்டையை உங்களுடைய இரண்டு கைகளிலும் வைத்துக் கொண்டு உங்களுடைய குலதெய்வத்தையும் இஷ்ட தெய்வத்தையும் மனதார நினைத்து கடன் அனைத்தும் அடைய வேண்டும் அதற்குரிய பணவரவு ஏற்பட வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ளுங்கள். இவ்வாறு வேண்டி முடித்துவிட்டு இந்த மூட்டையை அப்படியே உங்களுடைய வீட்டு பூஜை அறையில் வைத்து விடுங்கள்.

- Advertisement -

அடுத்து இரவு நேரத்தில் வரக்கூடிய செவ்வாய் ஹோரையான எட்டு மணியிலிருந்து 9 மணிக்குள் ஒரு தாம்பாளத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த தாம்பாளத்தில் பச்சரிசி மாவை முழுவதுமாக பரப்பி அதற்கு நடுவே ஒரு வெற்றிலையை வைத்து வெற்றிலைக்கு மேலே அகல் விளக்கை வைத்து அந்த அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். இந்த தீபம் கிழக்கு பார்த்தவாறு இருக்க வேண்டும்.

இந்த தீபத்தை பார்த்தவாறு உங்களுடைய கடன் பிரச்சனை தீர வேண்டும் என்று மனதார வேண்டிக் கொண்டு இஷ்ட தெய்வத்தின் மந்திரத்தை கூற வேண்டும். அந்த தீபமானது ஒரு மணி நேரம் எரிந்து முடித்த பிறகு அதை குளிர வைத்துவிட்டு அதில் இருக்கக்கூடிய பச்சரிசி மாவை எடுத்து காலையில் நாம் மூட்டை கட்டி வைத்திருந்தோம் அல்லவா? அதில் சேர்த்து கட்டி வைத்து விடுங்கள்.

மறுநாள் காலையில் எழுந்து வீட்டு பூஜை அடியில் விளக்கேற்றி விட்டு இந்த மூட்டையில் இருக்கக்கூடிய பொருட்கள் அனைத்தையும் அருகில் இருக்கக்கூடிய பசு மாட்டிற்கு தானமாக தர வேண்டும். இவ்வாறு தருவதன் மூலம் நமக்கு கடன் பிரச்சனை தீர்வதற்குரிய பணவரவு ஏற்படும்.

இதையும் படிக்கலாமே எளிமையாக எல்லா கடனையும் அடைக்க தீபம்
தாந்திரீக முறைப்படி ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு விதமான பலன்கள் இருக்கும். அந்த வகையில் இந்த பொருட்களை நாம் பசு மாட்டிற்கு தானமாக தருவதன் மூலம் நம்முடைய கடன் பிரச்சினைகள் தீரும். முழு நம்பிக்கையுடன் செய்து பலன் பெறுங்கள்.

- Advertisement -