- Advertisement -

கடன் வராமல் தடுக்க பின்பற்ற வேண்டிய 3 விஷயங்கள்.

ஒரு வீட்டில் பணக்கஷ்டம் இருக்கிறது, கடன் சுமை இருக்கிறது, சந்தோஷமே அந்த வீட்டில் ஒரு துளி கூட இல்லை என்றால், அந்த குடும்பத்திற்கு பிரச்சினைகள் வர இந்த மூன்று விஷயங்கள் தான் காரணமாக இருக்கும். கஷ்டமும் கடனும் உங்கள் வீட்டில் இருப்பவர்களை கண் கலங்க வைக்கிறதா, உங்கள் குடும்பத்திற்கு கஷ்டத்தை கொடுக்கும் அந்த மூன்று விஷயம் எது. இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவை தொடர்ந்து படியுங்கள். உங்களுக்கான தீர்வு இந்த பதிவில் நிச்சயம் கிடைக்கும்.

கஷ்டத்தை தீர்க்கும் பரிகாரம்

முன்னோர்களின் ஆசிர்வாதம், குலதெய்வத்தின் ஆசிர்வாதம், இல்லாத வீடு கஷ்டத்தில் தான் இருக்கும். உங்களுடைய வீட்டில் முன்னோர்களது வழிபாடு செய்யாமல், குலதெய்வத்தை கும்பிட்டாலும் குலதெய்வத்தின் அருள் கிடைக்காது. முன்னோர்களை கும்பிட்டு, குலதெய்வத்தை வழிபாடு செய்யவில்லை என்றாலும் முன்னோர்களின் அருள் கிடைக்காது. குலதெய்வமும் முன்னோர்களும் வேறு வேறு கிடையாது.

- Advertisement -

தினமும் பெண்கள் வீட்டில் சமைத்து முடித்த பிறகு, அந்த உணவை வீட்டில் இருக்கும் மற்றவர்களுக்கு பரிமாறுவதற்கு முன்பு, முன்னோர்களை ஒரு முறை மனதார நினைத்துக் கொள்ள வேண்டும். வீட்டில் விசேஷ நாளில் ஏதோ புதுசா வடை கேசரி செய்றீங்க அப்படின்னா, அதை முன்னோர்களுக்காக எடுத்து வைத்துவிட்டு, அதை காகத்திற்கு வைத்துவிட்டு பிறகு நீங்கள் சாப்பிடுங்கள்.

இந்த மாதிரி நீங்கள் சமைக்க உணவை சாப்பிடுவதற்கு முன்பு, முன்னோர்களுக்கு சமர்ப்பணம் செய்துவிட்டு சாப்பிட்டால் முன்னோர்களின் ஆசிர்வாதம் உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கும். முன்னோர்கள் சாபம் விலகும் பித்ரு தோஷம் நீங்கும். தினமும் இதை பின்பற்றி பாருங்கள்.

- Advertisement -

இரண்டாவதாக குலதெய்வத்தின் ஆசிர்வாதத்தை பெற வேண்டும். உங்களால் எப்போதெல்லாம் முடிகிறதோ அப்போதெல்லாம் குலதெய்வ கோவிலுக்கு சென்று வழிபாடு செய்யுங்கள். வருடத்தில் ஒருமுறையாவது கட்டாயம் குலதெய்வ கோவிலுக்கு செல்ல வேண்டும். குலதெய்வத்தின் பாதத்தில் ஒரு விரலி மஞ்சள் வைத்து வாங்கிக் கொள்ளுங்கள்.

அதை வீட்டிற்கு கொண்டு வந்து ஒரு மஞ்சள் துணியில் கட்டி, நிலை வாசலுக்கு உள்பக்கம், வீட்டிற்கு உள் பக்கம் இந்த மஞ்சள் கொம்பை, மஞ்சள் துணியில் கட்டி, மாட்டி வைத்தால் குலதெய்வம் உங்கள் வீட்டிற்குள் வரும். குல தெய்வத்தின் ஆசி உங்கள் குடும்பத்திற்கு கிடைக்கும். வீட்டில் இருக்கும் கஷ்டங்களும் நீங்கும்.

- Advertisement -

மூன்றாவதாக சொல்லப்படக்கூடிய விஷயம் கர்மா. கெட்ட கர்மாவை சேர்த்துக் கொள்ளாதீர்கள். நீங்கள் எந்த அளவுக்கு அடுத்தவர்களுக்கு பாவம் செய்து, கெட்ட கர்மாவை செய்கின்றீர்களோ, அந்த அளவுக்கு உங்களுக்கு கடன் சுமையும் கஷ்டமும் உயர்ந்து கொண்டே தான் செல்லும். கூடுமானவரை கர்மாவை குறைக்க வாருங்கள்.

இதையும் படிக்கலாமே: தீராத பிரச்சனையை தீர்த்து வைக்கும் மந்திரம்

புண்ணியம் செய்யுங்கள். நீங்கள் செய்யக்கூடிய புண்ணியம் உங்களோடு செல்லாது உங்களுக்கு அடுத்து வரக்கூடிய சந்ததியினரையும் போய் சேரும். பாவம் செய்தால் பாவம் இரட்டிப்பாக அடுத்த சந்ததியினரை போய் சேரும் பார்த்துக்கோங்க. நல்லது நினைத்தால் நல்லது மட்டுமே நடக்கும் என்று தகவலுடன், மேல் சொன்ன ஆன்மீகம் சார்ந்த பரிகாரம் அனைவருக்கும் பயனுள்ளபடி அமையும் என்ற நம்பிக்கையில் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -