தீராத பிரச்சனையை தீர்த்து வைக்கும் மந்திரம்

amman5
- Advertisement -

மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவருக்குமே எதிர்பாராத சமயத்தில் வரும், எதிர்பாராத பிரச்சனைகளை சமாளிப்பதில் சில சவால்கள் இருக்கும். அது பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனையாக இருக்கலாம், நம்முடைய பிள்ளைகள் சம்பந்தப்பட்ட பிரச்சினையாக இருக்கலாம், குடும்ப உறவுகள் சம்பந்தப்பட்ட பிரச்சினையாக இருக்கலாம், வேலை சம்பந்தப்பட்ட பிரச்சினையாக இருக்கலாம்.

ஆரோக்கிய சம்பந்தப்பட்ட பிரச்சினையாக இருக்கலாம், சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சனை என்று, இப்படி எந்த பிரச்சினையாக இருந்தாலும் சரி, தீர்க்க முடியாத பிரச்சனையில் நீங்கள் சிக்கிக் கொண்ட அடுத்த நிமிடம், குலதெய்வத்தை நினைத்து இஷ்ட தெய்வத்தை நினைத்து இந்த மந்திரத்தை நின்ற இடத்தில் இருந்தே சொன்னால், பிரச்சனைக்கான ஒரு தீர்வை இந்த பிரபஞ்சம் கொடுத்து விடும். அந்த தெய்வம் பிரச்சனைக்கு உண்டான தீர்வினை உங்களுக்கு காட்டிக் கொடுக்கும். அந்த ஒரு வரி மந்திரம் என்ன. ஆன்மீகம் சார்ந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

- Advertisement -

பிரச்சனையை தீர்க்கும் மந்திரம்:

ஓம் ஹ்லீம் சர்வகாரிய
சித்திம் ஹ்லீம் ஓம் ஃபட்

மந்திரம் இவ்வளவுதான். இதை ஒரு பேப்பரில் எழுதி உங்களுடைய பர்ஸில் வைத்துக் கொண்டாலும் சரி, அல்லது மனப்பாடம் செய்து கொண்டாலும் சரி எந்த நேரத்தில் எல்லாம் உங்களுக்கு பிரச்சனை வருகிறதோ, காரிய தடை வருகிறதோ, அந்த சூழ்நிலையில் என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறுகின்றீர்களோ, ஒரு நிமிடம் அப்படியே கண்களை மூடி குலதெய்வத்தை நினைத்து இந்த மந்திரத்தை சொல்லுங்கள்.

- Advertisement -

மந்திரத்தை உச்சரிக்க எண்ணிக்கை, கணக்கெல்லாம் கிடையாது. எத்தனை முறை இந்த மந்திரத்தை சொல்லி நீங்கள் சித்தி செய்து வைத்துக் கொள்கிறீர்களோ, அந்த அளவுக்கு உங்களுக்கு பிரச்சனைகள் வருவது குறையும். அதாவது சில மனிதர்கள் குழப்பமான பிரச்சனையில் சிக்கிக் கொண்டால், அதிலிருந்து மீள முடியாமல் ரொம்ப ரொம்ப தத்தளிப்பார்கள்.

இரவு தூங்க மாட்டார்கள், நல்லா சாப்பிட மாட்டாங்க, உடம்பு சரியில்லாமல் போய்விடும் அப்படிப்பட்ட பலவீனமான மனம் கொண்டவர்கள் இந்த மந்திரத்தை உச்சரிக்க உச்சரிக்க அவர்களுடைய மனம் பலம் பெறும்.

- Advertisement -

நீங்க தைரியம் இல்லாத கோழையாக இருந்தாலும் உங்களுக்கு இந்த மந்திரம் தைரியத்தை கொடுக்கும். எனக்கு ரொம்ப ரொம்ப தைரியம் இருக்கு, ஆயிரம் பிரச்சனை இருந்தாலும் நிம்மதியாக தான் தூங்குவேன். நல்லா சாப்பிடுவேன். யாரோ எப்படியோ போறாங்க. எனக்கென்ன, என்று பிரச்சினைகளை எல்லாம் மூட்டை கட்டி போட்டு விட்டு, நிம்மதியாக தூங்குபவர்களும் இருக்கிறார்கள்.

ஆனால் பிரச்சனைக்கு ஒரு தீர்வு கிடைக்க வேண்டும் அல்லவா. இப்படிப்பட்டவர்கள் இந்த மந்திரத்தை சொல்லலாமா? என்று நீங்கள் கேட்டால், நிச்சயம் இந்த மந்திரத்தை நீங்களும் படிக்கலாம். தைரியசாலியாக இருக்கும் உங்களுக்கு அடுத்தடுத்து வரக்கூடிய பிரச்சினைகள் குறைய தொடங்கும்.

இதையும் படிக்கலாமே: 21-04-2024 மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்

வியாபாரத்தில் சிக்கல் இருக்கிறது, மாணவர்களுக்கு படிக்கும் இடத்தில் சிக்கல் இருக்கிறது, வேலை செய்பவர்களுக்கு அலுவலகத்தில் சிக்கல் இருக்கிறது, எனும் பட்சத்தில் அந்தந்த இடத்தில் நின்று கொண்டு இந்த மந்திரத்தை சொல்லுங்க. உங்களுடைய சிக்கல்கள் எல்லாம் சீக்கிரம் அவிழ்க்கப்படும். உங்களுடைய பிரச்சனைக்கு சீக்கிரம் தீர்வு கொடுக்கப்படும் என்ற தகவலோடு ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -