- Advertisement -
மந்திரம்

கையில் காசு இல்லையா? அப்படின்னா இந்த அஷ்டகத்தை 18 முறை வாசியுங்கள் தன மழை பொழியும்!

படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மூன்று செயல்களையும் தனித்தனியாக மும்மூர்த்திகள் செய்து வருவதாக நம் புராணங்கள் கூறுகிறது. இந்த மூன்று தொழில்களையும் காலபைரவர் ஒருவரே முன்னின்று செய்து கொடுப்பதாக சாஸ்திரங்கள் குறிப்பிடுகிறது. காலபைரவர் அஷ்டகத்தை வாசிப்பவர்களுக்கு எந்த தீவினையும் நெருங்காது என்பது ஆகம நியதி. எதிரிகள் தொல்லை, கடன் பிரச்சனைகள் போன்றவை நீங்க கால பைரவரை வழிபடுவது சிறப்பான பலன்களைத் தரும். காலபைரவர் அஷ்டகம் தமிழில் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது. உங்கள் வீட்டில் தன மழை பெய்திட காலபைரவரை எப்படி வழிபடுவது? என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.

உங்கள் வீட்டில் பண ரீதியான கஷ்டங்கள் இருக்கும் பொழுது, கையில் சுத்தமாக காசு இல்லாத சமயத்தில் கால பைரவரை வணங்கி வழிபாடுகள் செய்து, இந்த அஷ்டகத்தை 18 முறை வாசித்தால் பணம் நிச்சயம் கிடைக்கும். இந்த வழிபாட்டை பௌர்ணமி அன்று செய்ய வேண்டும். கால பைரவர் படத்தை வீட்டில் வைத்து வழிபடக்கூடாது.

- Advertisement -

அதனால் அவருடைய அம்சமாக விளங்கும் ஸ்வர்ண பைரவர் படத்தை வைத்து, செவ்வரளி மலர் சாற்றி, சந்தன குங்குமம் இட்டு, இலுப்பை எண்ணெயில் தீபம் ஏற்ற வேண்டும். நைவேத்தியமாக அவல் பாயாசம் செய்து வைப்பது நல்லது. பின்னர் தூப, தீபங்களை காண்பித்து கீழ் வரும் இந்த அஷ்டகத்தை பதினெட்டு முறை பாராயணம் செய்ய வேண்டும்.

கால பைரவர் மந்திரம்

1.
தனந்தரும் வயிரவன் தளிரடி பணிந்திடின்
தளர்வுகள் தீர்ந்து விடும்
மனந் திறந் தவன்பதம் மலரிட்டு வாழ்த்திடின்

- Advertisement -

மகிழ்வுகள் வந்து விடும் சினந்தவிர்த் தன்னையின்
சின்மயப்புன்னகை சிந்தையில் ஏற்றவனே
தனக்கிலை யீடுயாருமே என்பான் தனமழை பெய்திடுவான்!!

2.
வாழ்வினில் வளந்தர வையகம்
நடந்தான் வாரியே வழங்கிடுவான்
தாழ்வுகள் தீர்ந்திட தளர்வுகள் மறைந்திட

- Advertisement -

தானென வந்திடுவான் காழ்ப்புகள் தீர்த்தான்
கானகம் நின்றான் காவலாய் வந்திடுவான்
தனக்கிலை யீடுயாருமே என்பான் தனமழை பெய்திடுவான்!!

3.
முழுநில வதனில் முறையொடு
பூஜைகள் முடித்திட அருளிடுவான்
உழுதவன் விதைப்பான் உடைமைகள் காப்பான்

உயர்வுறச் செய்திடுவான் முழுமலர்த்
தாமரை மாலையை ஜெபித்து முடியினில் சூடிடுவான்
தனக்கிலை யீடு யாருமேஎன்பான் தனமழை பெய்திடுவான்!!

4.
நான்மறை ஓதுவார் நடுவினில்இருப்பான்
நான்முகன் நானென்பான் தேனினில் பழத்தைச்
சேர்த்தவன் ருசிப்பான் தேவைகள்

நிறைத்திடுவான் வான்மழை எனவே
வளங்களைப் பொழிவான் வாழ்த்திட வாழ்த்திடுவான்
தனக்கிலை யீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்!!

5.
பூதங்கள் யாவும் தனக்குள்ளே
வைப்பான் பூரணன் நான் என்பான் நாதங்கள்
ஒலிக்கும் நால்வகை மணிகளை நாணினில்

பூட்டிடுவான் காதங்கள் கடந்து கட்டிடும்
மாயம் யாவையும் போக்கிடுவான்
தனக்கிலை யீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்!!

6.
பொழில்களில் மணப்பான் பூசைகள் ஏற்பான்
பொன்குடம் ஏந்திடுவான் கழல்களில்
தண்டை கைகளில் மணியணி கனகனாய் இருந்திடுவான்

நிழல்தரும் கற்பகம் நினைத்திட
பொழிந்திடும் நின்மலன் நானென்பான்
தனக்கிலை யீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்!!

7.
சதுர்முகன் ஆணவத் தலையினைக்
கொய்தான் சத்தொடு சித்தானான் புதரினில்
பாம்பைத் தலையினில் வைத்தான் புண்ணியம்

செய்யென்றான் பதரினைக் குவித்து
செம்பினை எரித்தான் பசும்பொன் இதுவென்றான்
தனக்கிலை யீடுயாருமே என்பான் தனமழை பெய்திடுவான்!!

8.
ஜெய ஜெய வடுக நாதனே சரணம் வந்தருள்
செய்திடுவாய் ஜெய ஜெய ஷேத்திர பாலனே சரணம்
ஜெயங்களைத் தந்திடுவாய்

ஜெய ஜெய வயிரவா செகம் புகழ் தேவா
செல்வங்கள் தந்திடுவாய்
தனக்கிலை யீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்!!

இது போல் ஒன்பது பௌர்ணமிகள் நீங்கள் செய்து வந்தால் வீட்டில் வறுமை என்பதே இருக்காது. தனவரவு திருப்திகரமாக அமையும். பண ரீதியான கஷ்டங்கள் நீங்கும். குறிப்பாக கடன் தொல்லைகள் முற்றிலுமாக நீங்கிவிடும்.

இதையும் படிக்கலாமே
போற காரியம் 100% கட்டாயம் வெற்றியில் முடிய 2 கற்பூரம் மட்டும் போதுமே!

இது போன்ற மந்திரங்கள் பலவற்றை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

- Advertisement -