- Advertisement -
ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagaval

கோழையையும் வீரனாக்கும் அற்புத மந்திரம்

சிலருக்கு எந்த செயலை செய்வதற்கும் மனதில் ஒரு தெளிவு இருக்காது. எதெற்கெடுத்தாலும் பயப்படுவார்கள். தெளிவின்மையை நீக்கினாலே பயம் தானாக மறையும். மனதை ஒரு தெளிந்த நீரோடையாக்கி தைரியத்தை வரவழைக்கும் மந்திரம் இதோ.

யஸ்ய ஸ்ரீஹனுமானனுக்ரஹபலாத் தீர்ணாம்புதிர் லீலயா
லங்காம்ப்ராப்ய நிஸாம்ய ராமதயிதாம்பங்க்த்வா வனம் ராக்ஷ ஸான்!
அக்ஷாதீன் விநிஹத்ய வீக்ஷ்யதஸகம்தக்த்வா புரீம் தாம்
புன:தீர்ணாப்தி: கபிபிர்யுதேயமனமத்தம் ராமசந்த்ரம் பஜே!

- Advertisement -

மகான் ஸ்ரீ ராகவேந்திரர் இயற்றிய இம்மந்திரத்தின் பொருள் யாதெனில் யாருடைய அருளார் அனுமன் எந்த ஒரு களைப்பும் இல்லாமல் லங்கையை அடைந்து சீதாபிராட்டியை கண்டாரோ. யாருடைய அருளின் வலிமையால் அரக்கர்களை கொன்று ராவணனனை கண்டு லங்காபுரியை தீக்கிரையாக்கினாரோ. யாருடைய அருளார் மீண்டும் கடலை கடந்து பறந்து வந்தாரோ. யாரை மனதார எப்போதும் அவர் பிராத்தனை செய்தாரோ. அந்த ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியை நான் வணணுங்குகிறேன்.

ஸ்ரீ ராமரின் படத்தை வைத்து இந்த மந்திரத்தை தினம் ஜபித்தால் மனதில் தைரியம் தானாய் வரும்.

- Advertisement -