- Advertisement -
ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagaval

நினைத்த காரியம் நிறைவேற வெற்றிலை பரிகாரம்

வெற்றிலையில் ஐந்து தெய்வங்கள் கூடியிருக்கிறார்கள். நுனியில் மூதேவியும், காம்பில் மகாலட்சுமியும், நடு நரம்பில் பிரம்மதேவரும், முன் பக்கத்தில் சிவபெருமானும், பின்பக்கத்தில் சக்தி தேவியும் குடியிருப்பதாக ஐதீகம் கூறுகிறது. அதனால்தான் வெற்றிலையை வாட விடக்கூடாது என்றும் கூறுகிறோம். இந்த வெற்றிலை இல்லாத சுப நிகழ்வுகளே இருக்காது. தெய்வத்தை வழிபடுவதாக இருந்தாலும் சுப நிகழ்ச்சிகள் நடைபெறுவதாக இருந்தாலும் அதில் கண்டிப்பாக முறையில் வெற்றிலை பாக்கு என்பது இருக்கத்தான் செய்யும். அவ்வளவு மகத்துவம் மிகுந்த வெற்றிலையை வைத்து நாம் எந்த முறையில் வழிபட்டால் நினைத்த காரியம் நடைபெறும் என்று இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்ப்போம்.

ஒவ்வொரு ராசிகளுக்கும் உகந்த தெய்வம் இருக்கும். அந்த தெய்வத்திற்கு ஏற்றார் போல் தான் இந்த பரிகாரத்தை நாம் செய்ய வேண்டும். மேலும் வெற்றிலையுடன் எந்த பொருளை வைத்து எந்தக் கிழமையில் தெய்வத்தை வழிபட்டால் நினைத்த காரியம் நடக்கும் என்றும் பார்ப்போம்.

- Advertisement -

மேஷ ராசிக்காரர்கள் செவ்வாய்க்கிழமை அன்று இரண்டு வெற்றிலையுடன் ஒரு மாம்பழத்தை வைத்து முருகப்பெருமானை வழிபட வேண்டும். பிறகு இந்த வெற்றிலை மாம்பழத்தையும் சாப்பிட்டு விட வேண்டும். எந்த காரியத்தை நினைத்து இந்த வழிபாட்டை செய்கிறோமோ அந்த காரியம் இனிதே நடைபெறும். இதே போல் ரிஷப ராசிக்காரர்கள் செவ்வாய்க்கிழமை அன்று இரண்டு வெற்றிலையுடன் இரண்டு மிளகை ராகு பகவானுக்கு ராகு காலத்தில் வைத்து வழிபட்டு உண்டுவர அவர்கள் நினைத்தது நடைபெறும்.

மிதுன ராசிக்காரர்கள் இரண்டு வெற்றிலையுடன் இரண்டு வாழைப்பழத்தை புதன்கிழமை அன்று மகாவிஷ்ணுவிற்கு வைத்து வழிபட்டு உண்டு வர கல்விகளில் சிறந்து விளங்குவார்கள் நினைத்தது நடைபெறும். கடக ராசிக்காரர்கள் இரண்டு வெற்றிலையுடன் மாதுளம் பழத்தை இரண்டாகப் பிளந்து வைத்து வெள்ளிக்கிழமையில் காளியம்மன் கோவிலுக்கு சென்று காளியம்மனுக்கு வைத்து வழிபட்டு பிறகு அதை உண்டு வர அவர்கள் நினைத்தது நடைபெறும்.

- Advertisement -

சிம்ம ராசிக்காரர்கள் இரண்டு வெற்றிலையுடன் இரண்டு வாழைப்பழத்தை வியாழக்கிழமை அன்று தட்சிணாமூர்த்திக்கு வைத்து வழிபட்டு உண்டு வர அவர்கள் நினைத்தது நடைபெறும். கன்னி ராசிக்காரர்கள் இரண்டு வெற்றிலையுடன் இரண்டு மிளகை அவர்களுடைய இஷ்ட தெய்வத்திற்கு வியாழக்கிழமை அன்று வைத்து வழிபட்டு உண்டு வர அவர்கள் நினைத்தது நடைபெறும்.

துலாம் ராசிக்காரர்கள் இரண்டு வெற்றிலையுடன் இரண்டு கிராம்பை வெள்ளிக்கிழமை அன்று மகாலட்சுமி தாயாருக்கு வைத்து வழிபட்டு உண்டுவர அவர்கள் நினைத்தது நடைபெறும். விருச்சிக ராசிக்காரர்கள் இரண்டு வெற்றிலையுடன் இரண்டு பேரிச்சம் பழத்தை செவ்வாய்க்கிழமை அன்று முருகப்பெருமானுக்கு வைத்து வழிபட்டு உண்ண வேண்டும். தனுசு ராசிக்காரர்கள் இரண்டு வெற்றிலையுடன் சிறிது கற்கண்டு வைத்து வியாழக்கிழமை அன்று தட்சிணாமூர்த்திக்கு வைத்து வழிபட்டு உண்டு வரவேண்டும்.

- Advertisement -

மகர ராசிக்காரர்கள் இரண்டு வெற்றிலையுடன் அச்சு வெல்லத்தை சனிக்கிழமை அன்று காளியம்மன் கோவிலுக்கு சென்று வைத்து வழிபட்டு விட்டு உண்டு வரவேண்டும். கும்ப ராசிக்காரர்கள் இரண்டு வெற்றிலையில் சுத்தமான நெய்யை தடவி சனிக்கிழமை அன்று காளியம்மனுக்கு வைத்து வழிபட்டு விட்டு உண்டு வரவேண்டும். மீன ராசிக்காரர்கள் இரண்டு வெற்றிலையுடன் சர்க்கரையை வைத்து ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபெருமானை வழிபட அவர்கள் நினைத்தது நடைபெறும்.

இதையும் படிக்கலாமே: பிள்ளைகள் நன்றாக படிக்க வழிபாடு

ஒவ்வொரு ராசிக்காரர்களும் வெற்றிலையை வைத்து இந்த முறையில் பரிகாரம் செய்தால் அவர்கள் நினைத்தது எளிதில் நடைபெறும் நம்பிக்கையுடன் செய்து பலன் அடையுங்கள்.

- Advertisement -