பிள்ளைகள் நன்றாக படிக்க வழிபாடு

pillaiyar
- Advertisement -

பள்ளிக்கூடம் இருக்கக்கூடிய நாட்களில் தான் சில வேலைகளை நம்மால் சரியாக செய்ய முடியாது. காரணம் நேரமின்மை. இப்போது பிள்ளைகளுக்கு விடுமுறை நாட்கள் தான். பெற்றவர்களுக்கும் இப்போது நிறைய நேரம் இருக்கும். பிள்ளைகளுக்கும் நேரம் கிடைக்கும். இந்த சமயத்தை பயனுள்ளபடி மாற்றிக் கொள்வோம்.

ஆன்மீகம் சொல்லும் இந்த எளிய பரிகாரத்தை இந்த விடுமுறை நாட்களில் தொடர்ந்து செய்தால், உங்களுடைய பிள்ளைகள் நன்றாக படிக்க தொடங்கி விடுவார்கள். சில பிள்ளைகளுக்கு படிப்பில் கொஞ்சம் ஆர்வம் குறைவாக இருக்கும் அல்லவா அந்த பிள்ளைகளுக்காக பரிகாரம்.

- Advertisement -

பிள்ளைகள் நன்றாக படிக்க பரிகாரம்

தினமும் காலையில் எழுந்து சுத்தபத்தமாக குளித்துவிட்டு உங்க வீட்டு பக்கத்தில் இருக்கும் பிள்ளையார் கோவிலுக்கு உங்க பிள்ளைகளை கூட்டிச் செல்ல வேண்டும். உங்க பிள்ளை இப்போதுதான் சிறிய குழந்தையாக இருக்கு. முதலாம் வகுப்பு, இரண்டாம் வகுப்பு படிக்கிறது ஆனால் படிப்பில் சுத்தமாக கவனம் செலுத்த மாட்டேங்குறாங்க அப்படின்னா அவங்கள, காலையில் சூரியன் உதிக்கும் சமயத்தில், 6:00 மணிக்கு விநாயகர் கோவிலுக்கு சென்று பிள்ளையாரை வழிபட செய்ய வைத்தால் போதும். அவர்களுக்கு படிப்பில் நல்ல ஆர்வம் வரும்.

சின்ன குழந்தைகள், ஆர்வத்துடன் பிள்ளையாரை போய் சும்மா பார்த்தாலே போதும் பிள்ளையாரின் அருள் ஆசி கிடைத்துவிடும். உங்களுடைய பிள்ளைகளுக்கு படிப்பில் ஆர்வம் வரும். தொடர்ந்து 48 நாட்கள் இந்த வழிபாட்டை செய்து முடிக்கும் போது நல்ல பலன் தெரியும்.

- Advertisement -

கொஞ்சம் பெரிய பிள்ளைகளாக இருக்கிறார்கள் என்றால் அவர்களையும் இந்த வழிபாட்டை நீங்கள் மேற்கொள்ள சொல்லலாம். தவறு கிடையாது. பன்னிரண்டாம் வகுப்பு படிக்கக்கூடிய மாணவர்கள் வரை இந்த பரிகாரத்தை செய்யலாம். நிச்சயமாக நல்ல பலன் கிடைக்கும். படிக்காத உங்களுடைய பிள்ளைகளின் பையில் ஒரு சின்ன பிள்ளையார் படம், ஒரு சின்ன ஹயக்ரீவர் படத்தை வாங்கி வச்சிருங்க. ஏதாவது ஒரு ஜிப்புக்கு உள்ள அந்த சுவாமி படம் அப்படியே இருக்கட்டும். அது அவர்களுடைய கல்வி தகுதியை மேலே உயர்த்தி விடும்.

நிறைய வீடுகளில் துளசி செடியை வைத்து வளர்க்கக்கூடிய வழக்கம் இருக்கிறது, அல்லது உங்க வீட்டு பக்கத்தில் இருக்கும் கோவிலில் கூட இப்படி துளசி செடிகள் இருக்கலாம். அந்த துளசி செடியில், வேர் பக்கத்திற்கும் அந்த தண்டு பக்கத்திற்கும் இடையே உள்ள இடத்தில் இருக்கும் மண்ணை எடுத்து நெற்றியில் வைத்து வேண்டுதல் வைத்தால் நீங்கள் நினைத்த காரியம் நிறைவேறும் என்ற ஒரு நம்பிக்கை இருக்கிறது. படிக்கின்ற பிள்ளைகள் நெற்றியில் இந்த மண்ணை எடுத்து திலகமாக வைத்து விட்டு அவர்கள் நன்றாக படிக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

உங்களுடைய பிள்ளைகள் நன்றாக படிக்க வேண்டும் என்று பிரார்த்தனை வைத்துக்கொண்டு, ஏழை குழந்தைகளுக்கு ஒரு புத்தகம் கூட வாங்க முடியாத அளவு பணக்கஷ்டத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு, புதன்கிழமை உங்களுடைய பிள்ளைகளின் கையாலேயே நோட்டுப் புத்தகத்தை தானமாக கொடுக்க வேண்டும்.

இதையும் படிக்கலாமே: இதுவரை கேள்விப்படாத வித்தியாசமான ரெசிபி முட்டைகோஸ் கோதுமை சப்பாத்தி. இந்த சப்பாத்திக்கு பக்க சைட் டிஷ் தேங்காய் சட்னி ரெண்டையும் சேர்த்து எப்படி செய்வது என்று பார்க்கலாமா?

அல்லது ஏதாவது ஒரு ஏழைக் குழந்தையின் படிப்புக்கு ஒரு தொகையை நீங்கள் தானமாக கொடுக்க வேண்டும். மேல் சொன்ன விஷயங்களை இந்த விடுமுறை நாளில் நீங்கள் செய்தால் நிச்சயமாக உங்களுடைய குழந்தையின் படிப்பு சிறப்பாக இருக்கும் என்ற இந்த தகவலோடு ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -