- Advertisement -

பணம் நம் கையில் வந்து சேராமல் இருக்க நாம் செய்யக்கூடிய இந்த 2 தவறுகளும் ஒரு காரணமே.

பணம் நம் கையில் வந்து சேராமல் இருக்க பல வகையான காரணங்கள் உள்ளது. அதில் ஒரு சில காரணங்களைப் பற்றி இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். பணம் இருப்பவர்களிடம் மேலும் மேலும் பணம் சேர்ந்து கொண்டே இருக்கின்றது. பணம் இல்லாதவர்கள் மேலும் மேலும் வறுமை நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். இதற்கு என்ன காரணம் தெரியுமா. அவரவர் செய்த கர்ம வினைகள் தான். அதில் எந்த ஒரு சந்தேகமும் கிடையாது. கர்மாவை கழிப்பதற்கு இருக்கக்கூடிய ஒரே பரிகாரம் அடுத்தவர்களுக்கு உதவி செய்வது மட்டும்தான். உங்களால் எவ்வளவு முடியுமோ அந்த அளவிற்கு அடுத்தவர்களுக்கு உதவி செய்யும் பழக்கத்தை கொண்டு வாருங்கள். உங்களிடம் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும் என்ற இந்த முதல் நல்ல தகவலோடு இந்த பதிவினை தொடருவோம்.

முதல் விஷயம். யாராவது நமக்கு பணம் கொடுக்க வந்தால் அந்த பணத்தை அவர்கள் கையிலிருந்து உடனடியாக நாம் வாங்கிக் கொள்ள வேண்டும். சில பேரை சில இடங்களில் நாம் பார்த்திருப்போம். பணத்தை கொண்டு வந்து கையை நீட்டிக் கொண்டே இருப்பார்கள். ஆனால் பணத்தை பெறுபவர்கள் அதை வாங்கிக் கொள்ளாமல் வேறு வேறு விஷயங்களை செய்து கொண்டிருப்பார்கள். இவ்வாறு என் கைக்கு வர வேண்டிய, பணத்தை எக்காரணத்தைக் கொண்டும் அடுத்தவர்களுடைய கையில் காக்க வைக்கக் கூடாது.

- Advertisement -

இதேபோல் சில பேர் காய்கறிகள், பூ, பழம் போன்றவற்றை பொருட்களை கடைக்காரரிடம் இருந்து வாங்கி விடுவார்கள். ஆனால் வாங்கிய பொருட்களுக்கான பணத்தை எடுத்துக் சட்டென கொடுக்காமல், அவர்களை வெகு நேரம் காக்க வைப்பார்கள். பணத்திற்காக, அதாவது வாங்கிய பொருளுக்கான பணத்தை அடுத்தவர்களுக்கு கொடுப்பதற்காகவும், அடுத்தவர்களை நாம் வெகு நேரம் காக்க வைக்கக் கூடாது. இதுவும் ஒருவகையில் பாவமான செயல்தான்.

உங்களுக்கு யாராவது இனி பணம் தந்தாலும் அதை சட்டென கை நீட்டி வாங்கும் பழக்கத்தை வைத்துக்கொள்ளுங்கள். அடுத்தவர்களுக்கு நீங்கள் பணம் கொடுப்பதாக இருந்தாலும் அவர்களை அனாவசியமாக காக்க வைக்காதீர்கள். இவை இரண்டுமே தவறான செயல்கள் தான். இந்தத் தவறுகளை செய்பவர்கள் வீட்டிலும் பணம் இரட்டிப்பாக வீண்விரயமாகும். மருத்துவ செலவு இருக்கும். நீங்கள் இந்த தவறு செய்பவர்களாக இருந்தால் இந்த பழக்கத்தை கொஞ்சம் மாற்றிப் பாருங்கள். உங்களுக்கே வித்தியாசம் தெரியும்.

- Advertisement -

அடுத்தபடியாக இரண்டாவதாக நாம் செய்யக்கூடிய தவறு இது. உங்களிடம் இந்த பழக்கம் இருந்தாலும் உங்கள் கையில் பணம் காசு தங்காது. வீண் விரயமாக தான் செய்யும். நிறைய பேருக்கு அடுத்தவர்களை குறை சொல்லும் பழக்கம் இருந்து வரும். குறிப்பாக அடுத்தவர்களைப் பார்த்து இவர்கள் ராசி இல்லாதவர்கள், இவர்கள் கையால் எது செய்தாலும் அது விளங்காது. என்று திட்டிக் கொண்டே இருப்பார்கள்.

அடுத்தவர்களைப் பார்த்து ராசி இல்லாதவர்கள் விளங்காதவர்கள் அபசகுனம் படித்தவர்கள் என்று யார் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கலோ, அவர்கள் ராசி இல்லாதவர்களாக அதிர்ஷ்டம் இல்லாதவர்களாக மாறிவிடுவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். நம்முடைய வாயால் நாம் எதை சொல்லிக் கொண்டே இருக்கின்றோமோ, நம்முடைய மனதில் நாம் எதை நினைத்துக் கொண்டே இருக்கின்றோமோ அதுதான் நமக்கு நடக்கும்.

எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும். எல்லோர் கையிலும் பணம் காசு தங்க வேண்டும். எல்லோரும் அதிர்ஷ்டமானவர்கள் என்ற பக்குவம் யார் மனதில் வருகின்றதோ, அவர்களுக்கு பண கஷ்டமும் இருக்காது, மன கஷ்டமும் இருக்காது என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -