- Advertisement -
மந்திரம்

இந்த மந்திரத்தை தினமும் சொல்லி வந்தால் பண வரவு அதிகரித்து விரைவில் சொந்தவீடே வாங்கிடலாம்

பணம் இருப்பவர்களிடமே அதிக அளவு பணம் சேர்ந்து கொண்டிருக்கும். பணம் இல்லாதவர்களிடம் சிறிதளவு பணம் சேருவதற்கு கூட பெரும்பாடாக தான் இருக்கும். ஏன் இந்த நிலைமை? இதனை எவ்வாறு மாற்றுவது? இவ்வாறான கேள்விகள் பலரின் மனதிலும் இருந்து கொண்டேதான் இருக்கிறது. ஒருவருடைய பொருளாதார நிலைமையை வைத்துதான் இந்த சமூகத்தில் அவர்களுக்கு மதிப்பும், மரியாதையும் கிடைக்கிறது. பலரும் தங்களது பணத்தை ஏதேனும் ஒரு முதலீட்டில் செலுத்தி அதனை பல மடங்காக உயர்த்த வேண்டும் என்று அரும்பாடு தான் பட்டுக்கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு அனைவரின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கும் அவசியமான பணத்தை நம்மிடம் ஈருக்கும் வழிமுறைகளை பற்றி நாம் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

“இவர்கள் தொட்டது எல்லாம் துலங்கும், இவர்கள் கைவைத்தால் மண்ணும் பொன்னாகும்” என்ற பழமொழிகளுக்கு ஏற்றவாறு சிலர் எந்த விஷயத்தை செய்தாலும் அதில் அவர்களுக்கு லாபம் மட்டுமே கிடைக்கும். தொழில் தொடங்குவதாக இருந்தாலும், வேலை சம்பந்தமான விஷயங்களாக இருந்தாலும் அவர்களுக்கு அதில் வெற்றியே கிடைக்கும். இதற்கு காரணம் அவர்களின் ஜாதக பலனாகும். ஒருவரிடம் செல்வம் சேர்வதற்கு அவர்களின் ஜாதகத்தில் உள்ள கட்டங்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன.

- Advertisement -

ஒருவருடைய ஜாதகத்தில் 2ஆம் வீடு, 5ஆம் வீடு, 8ஆம் வீடு, 9ஆம் வீடு, 11ஆம் வீடு, 1ஆம் வீடு இவற்றில் சுக்கிரனின் ஆதிக்கம் இருந்தால் பணவரவு தானாகவே உங்களை வந்தடையும். இவற்றைப் பொறுத்து கிரகங்களின் ஆதிக்கமும் உங்களுக்கு சாதகமாக இருந்தால் நீங்கள் செய்யும் சிறு முயற்சிக்கும் வெற்றி கிடைத்து பணம் உங்களை வந்தடையும்.

பணத்தை ஈர்க்கும் கிரகங்கள்:
வியாழன் செல்வத்திற்கு உரிய கிரகமாகும். வியாழன் கிரகத்தின் அனுகிரகம் உங்களுக்கு இருந்தால் உங்களிடம் செல்வம் பெருகிக் கொண்டே செல்லும்.

- Advertisement -

சுக்கிரன் ஆடம்பரம் மற்றும் வசதிக்கான கிரகமாகும். சுக்கிரனின் அருள் உங்களுக்கு இருந்தால் உங்களிடம் அளவுக்கு மிஞ்சிய செல்வங்கள் இருக்கும்.

புதன் நிதிக்கு அதிபதியாவார். புதன் கிரகத்தின் அருள் உள்ளவர்கள் அவர்களின் தொழிலில் சிறந்து விளங்குவார்கள். நீங்கள் எந்த தொழிலில் ஈடுபட்டிருந்தாலும் அதில் உங்களுக்கு பன்மடங்கு லாபம் கிடைக்கும்.

- Advertisement -

பணத்தை ஈர்ப்பதற்கான பூஜை மற்றும் வழிபாடுகள்:
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சந்தோஷி மாதா விரதம் அல்லது வைபவ லட்சுமி விரதம் மேற்கொள்வதன் மூலம் பணத்தின் வரவு பலப்படும். ஒவ்வொரு சனிக்கிழமையும் குரங்குகளுக்கு கொண்டைக்கடலையை உணவாக கொடுப்பதன் மூலம் உங்களின் வருமான தடை அகன்று பண வரவு ஏற்படும் அதேபோல் சில மந்திரத்தை சொல்வதன் மூலமும் உங்கள் பணப்பிரச்சினை தீர்ந்து செல்வ செழிப்பு உண்டாகும்.

“ஓம் ஸ்ரீ லக்ஷ்மீ நாராயணாய நம
ஓம் நமோ பகவதே ஸ்ரீ வாஸுதேவாய நம
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் கமலே கமலேயாய பிரசீத பிரசாத்
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் மகாலட்சுமியே நம”

இந்த மந்திரத்தை தினமும் காலை பூஜை செய்து முழு மனதுடன் சொல்லி வந்தால் செல்வ, செழிப்பு மற்றும் நல்ல அதிர்ஷ்டம் உண்டாகும். உங்களுடைய நிதி நிலைமை மேம்பட்டு வெகு சீக்கிரத்தில் சொந்த வீடு வாங்கும் அளவிற்கு உங்கள் கையில் பணம் சேர்ந்து விடும்

- Advertisement -