- Advertisement -

பெற்றவர்கள் எல்லோருக்கும் இருக்கக் கூடிய ஆசை இது. தன்னுடைய மகன் மகள் எதிர்காலத்தில் படித்து பெரிய பதவியில் இருக்க வேண்டும். டாக்டராக வேண்டும், வக்கீல் ஆக வேண்டும், கலெக்டர் ஆக வேண்டும், போலீசாக வேண்டும், என்று நினைப்பார்கள். உங்கள் ஆசை நிறைவேற வேண்டும் என்றால், அதற்கான முயற்சிகளை நீங்கள், உங்கள் பிள்ளை சிறு வயதாக இருக்கும் போதிலிருந்தே எடுக்க வேண்டும்.

உங்கள் பிள்ளைகளை சின்ன குழந்தையிலிருந்து நன்றாக ஊக்குவித்து, அவர்கள் எதிர்காலத்தில் என்ன ஆக வேண்டும் என்ற ஆசைப்படுகிறார்களோ, அந்த ஆசையை நிறைவேற்றுவதற்கான வேலைகளை செய்ய தொடங்கி விடுங்கள். இதோடு சேர்த்து அந்த கடவுளின் ஆசிர்வாதமும் நமக்கு முக்கியம் தானே.

- Advertisement -

உங்க பிள்ளை இப்பதான் ஸ்கூலுக்கு போக தொடங்கி இருக்காங்க அப்படின்னாலும் இந்த பரிகாரத்தை இன்றே செய்ய தொடங்கி விடுங்கள். கொஞ்சம் பெரிய பிள்ளையா இருக்காங்க எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு படிக்கிறார்கள் என்றாலும் இந்த பரிகாரத்தை செய்யலாம் தவறு கிடையாது.

உங்கள் பிள்ளை நிச்சயம் எதிர்காலத்தில் நல்லா படிச்சு நல்ல வேலையில் அமர்ந்துவிடும். பிள்ளைகள் எதிர்காலத்தை நல்லபடியாக்கும் அந்த பரிகாரம் என்ன. தெரிந்து கொள்ள உங்களுக்கும் ஆர்வம் இருக்குதா இந்த ஆன்மீகம் சார்ந்த பரிகாரம் உங்களுக்காக தான்.

- Advertisement -

பிள்ளைகள் நன்றாக படிக்க வழிபாடு

முதலில் குலதெய்வத்தை நினைத்து ஒரு மஞ்சள் துணியில், ஒரு காணிக்கையை முடித்து வையுங்கள். குலதெய்வ கோவிலுக்கு சென்று இந்த காணிக்கையை உண்டியலில் போட்டு விட வேண்டும். 1 ரூபாய் இந்த முடிச்சுக்கு உள்ளே இருந்தாலும் போதும். நம்பிக்கையாக, உங்கள் குழந்தை நன்றாக படிக்க வேண்டும் என்று நினைத்து மஞ்சள் துணியில் ஒரு ரூபாய், 11 ரூபாயோ காணிக்கை வைத்து முடிச்சை தயார் செய்து விடுங்கள்.

பிறகு இரண்டு உண்டியல் எடுத்துக்கோங்க. ஒரு உண்டியலின் மேல் குலதெய்வம் என்று எழுத வேண்டும். இன்னொரு உண்டியலின் மேல் திருச்செந்தூர் முருகன் என்று எழுதி விடுங்கள். இந்த உண்டியலில் தினமும் உங்களுடைய பிள்ளை நல்லா படிக்கணும் என்று வேண்டிக்கொண்டு 1 ரூபாயை போட வேண்டும். தினமும் ஒவ்வொரு ரூபாய் இந்த உண்டியலில், ஒரு ரூபாய் குலதெய்வ உண்டியலில், ஒரு ரூபாய் முருகன் உண்டியலில்.

- Advertisement -

ஒரு குறிப்பிட்ட நாளில் உண்டியல் நிரம்பி விடும். அந்த உண்டியலுக்கு உள்ளே இருக்கும் பணத்தை எடுத்து அந்த கோவிலுக்கு சென்று அன்னதானம் செய்து விட வேண்டும். உங்க குலதெய்வம் தூரமா இருக்கு. உங்க குலதெய்வம் ஒரு பெண் குலதெய்வம் என்றால், உங்க வீட்டு பக்கத்தில் இருக்கும் அம்மன் கோவிலில் இந்த பணத்தை கொண்டு போய் அன்னதானம் செய்யலாம்.

இதே போல தான் உங்கள் குலதெய்வம் எந்த தெய்வமாக இருந்தாலும், அந்த தெய்வத்தின் கோவில் உங்க வீட்டு பக்கத்தில் இருக்கும் அந்த கோவிலுக்கு போய் இந்த அன்னதானத்தை செய்யலாம். அடுத்து எல்லோராலும் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்று இந்த பணத்தை எடுத்து அன்னதானம் செய்வது முடியாத காரியம்.

முருகன் பெயரில் இருக்கும் உண்டியல் நிரம்பி விட்டால், உங்க வீட்டு பக்கத்தில் இருக்கும் முருகன் கோவிலுக்கு போங்க. அந்த உண்டியல் பணத்தில் இருக்கும் காசுக்கு சாப்பாடு வாங்கி அல்லது நீங்களே அந்த சாப்பாட்டை செய்து இரண்டு பேருக்காவது அன்னதானம் செய்து விடுங்கள்.

தொடர்ந்து இந்த இரண்டு உண்டியலிலும் பணம் சேர்த்து இந்த பரிகாரத்தை, செய்து வந்தால் உங்கள் பிள்ளையின் படிப்பு, மேலே உயர்ந்து நிற்கும். அதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. நம்பிக்கையோடு இதை செய்யணும். முழு நம்பிக்கையோடு செய்யணும். என்னுடைய பிள்ளையின் படிப்பை குலதெய்வத்தினமும் முருகன் கையிலும் ஒப்படைத்து விட்டேன்.

இதையும் படிக்கலாமே: 10 நாளில் நினைத்தது நடக்க கல் உப்பு பரிகாரம்

எனக்கு இனி எந்த கஷ்டமும் இல்லை. என் பிள்ளை எதிர்காலத்தில் நல்ல பதவியில் தான் இருப்பான், என்ற முழு நம்பிக்கையோடு இந்த வழிபாட்டை செய்பவர்களுக்கு நிச்சயம் நல்லது நடக்கும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -