- Advertisement -
காயத்ரி மந்திரம் | Gayatri mantra in Tamil

இன்று இந்த ராகு காயத்திரி மந்திரத்தை ஜெபித்தால் பலன்கள் அதிகம் உண்டு

ஜோதிட சாஸ்திர படி ராகு கேது ஆகிய இரு கிரகங்களும் நிழல் கிரகங்கள் என்று கூறப்படுகிறது. ஒருவர் தன்னுடைய முன் ஜென்மத்தில் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்றவாறு இந்த இரு கிரகங்களும் ஒருவரது ஜாதகத்தில் அமர்கின்றன. ஒருவரது ஜாதகத்தில் ராகுவால் ஏதேனும் தோஷம் இருந்தால் பற்பல சிக்கல்கள் ஏற்படும். அதே போல ஒருவரது ஜாதகத்தில் ராகு சிறப்பான இடத்தில் அமைந்தால் ராஜ வாழ்க்கை வாழலாம். இதனாலேயே ராகுவை போல் கொடுப்பார் இல்லை என்று சொல்லி வைத்தனர் நம் முன்னோர்கள். ராகுவின் பலம் பெற, ராகு தோஷம் நீங்கள் கீழே உள்ள ராகு காயத்ரி மந்திரம் அதை ஜபித்தால் போதும்.

ராகு காயத்ரி மந்திரம்
ஓம் நாகத்வஜாய வித்மஹே
பத்ம அஸ்தாய தீமஹி
தன்னோ ராகு ப்ரசோதயாத்

- Advertisement -

மந்திரத்தின் பொருள்:
நாகத்தை கொடியில் கொண்டவரும், தாமரையை கையில் ஏந்தியவருமான ராகு பகவானே உங்களை வணங்குகிறேன். எனக்கு நீங்கள் நல்லாசி புரிந்து அருள வேண்டுகிறேன்.

பஞ்சமி திதியில் விரதம் இருந்து நாக தேவதைகளையும் ராகு பகவானையும் வழிபட்டு மேலே உள்ள மந்திரத்தை 108 முறை ஜபித்தால் ராகு தோஷம், நாகா தோஷம் உள்ளிட்ட தோஷங்கள் விலகும். அதோடு ராகு பகவானின் பரிபூரண அருளை பெற்று ராஜ வாழ்க்கை வாழ முடியும். விரதம் இருக்க இயலாதவர்கள் செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமைகளில் புற்றுள்ள அம்மன் கோயிலிற்கு சென்று வழிபாடு செய்து இந்த மந்திரத்தை ஜபித்து வரலாம்.

- Advertisement -

ராகு பகவான் பரிகாரங்கள்

ராகு பகவானின் முழுமையான அருளைப் பெற விரும்புபவர்கள் தஞ்சை மாவட்டத்தின் திருநாகேஸ்வரம் ஊரில் இருக்கும் அருள்மிகு ஸ்ரீ நாகநாத சுவாமி கோயிலுக்கு ஏதேனும் ஒரு செவ்வாய் அல்லது வெள்ளிக் கிழமை காலையில் சென்று, சிவபெருமானுக்கும் அம்பாளுக்கும் அர்ச்சனை மற்றும் அபிஷேகம் செய்து, வஸ்திரம் சாற்றி வழிபட வேண்டும். பிறகு அங்கிருக்கும் ராகு பகவானுக்கு, ராகு காலத்தில் பால் அபிஷேகம் செய்து வஸ்திரம் சாற்றி வழிபடுவதால் ராகு கிரகத்தின் தோஷங்கள் அனைத்தும் நீங்கி வாழ்வில் மேன்மையான பலன்கள் ஏற்படுவதை காணலாம்.

- Advertisement -

மேற்சொன்ன பரிகாரத்தை செய்ய இயலாதவர்கள் உங்கள் வீட்டுக்கு அருகிலேயே இருக்கும் நவக்கிரக சந்நிதிக்கு வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை அல்லது வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்குள்ளாக சென்று, கருப்பு உளுந்து கொண்டு செய்யப்பட்ட உணவுப் பதார்த்தத்தை நைவேத்தியம் வைத்து, சிவப்பு நிற மலர்களை சாற்றி, நல்லெண்ணை தீபம் ஏற்றி ராகு பகவானுக்குரிய காயத்ரி மந்திரங்களை 108 முறை 1008 முறை வரை துதிப்பதால், ராகு பகவானால் ஏற்படும் பாதகமான பலன்கள் நீங்கி நன்மைகள் உண்டாகும். இந்த பரிகாரத்தை குறைந்தபட்சம் 9 வாரம் முதல் அதிகபட்சம் 27 வாரம் வரை செய்தால் மட்டுமே முழுமையான பலனைப் பெற இயலும்.

இந்த இரண்டு பரிகாரங்களையும் செய்ய இயலாதவர்கள் தினமும் காலையில் எழுந்ததும் பறவைகளுக்கு உணவும், நீரும் வைத்து வருவதால் ராகு கிரகத்தின் தோஷம் வெகுவாக குறைகிறது. மேலும் உங்கள் சக்திக்கு ஏற்ப அடர் நீல நிற துணிகளை வசதி குறைந்தவர்களுக்கு தானம் வழங்க வேண்டும். மறைந்த ஒரு தங்களின் முன்னோர்களுக்குரிய பித்ரு கடன்கள், சிராத்தம் போன்றவற்றை சரியான காலத்தில், முறையாக கொடுத்து வந்தாலே ராகு பகவானால் எத்தகைய தோஷம் ஏற்படாமல் காக்கும் ஒரு சிறந்த பரிகாரமாக இருக்கிறது.

இதையும் படிக்கலாமே:
குழந்தைகளின் ஆயுளை நீடிக்க செய்யும் மந்திரம்

இது போன்று மேலும் பல காயத்திரி மந்திரம் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்

English overview:
This article about Rahu gayatri mantra in tamil and its benefits. If one chant rahu gayathri manthiram then he will get blessings from Rahu. Lord Rahu will help to lead a good life. It is good to chant this mantra on panchami thithi

- Advertisement -